Posts

Showing posts from March, 2016

படித்ததில் பிடித்தது - 1 (எழுத்தாளர் கல்கி பற்றிய குறிப்புக்கள்)

Image
கல்கி தன்னுடைய சொந்த பெயரில் பத்திரிகையைத் தொடங்கிய நேரம் அதன் நிர்வாக தலைவர் சதாசிவத்திற்கு பெரிய கவலை காரணம் காகிதத் தட்டுப்பாடு. இதை பற்றி கேள்விப்பட்ட கல்கி கிண்டலாக சிரித்தார், "கவலைபடாதிங்க,  நான் ஒரு  தமிழ்நாட்டுச் சரிந்திர நாவல் எழுதப்போகிறேன். அதை அதிகம் பேர் படிக்கமாட்டாங்க. நமக்கு காகிதம் நிறையத் தேவைபடாது" என்று வேடிக்கையாக சொன்னார். 1941 ல் தொடங்கிய அந்த சரித்திர நாவல் தான் 'பார்த்திபன் கனவு'. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தான் எழுத தொடங்கினார் கல்கி ஆனால் அவரது எழுத்து லாவகம் கல்கி விற்பனையை கிடுகிடுவென உயர்த்தியது. பார்த்திபன் கனவு தந்த வெற்றி உற்சாகத்தில் கல்கி 1944ல் அடுத்த எழுதிய நாவல் "சிவகாமியின் சபதம்". ஆறு வருடம் கழித்து "பொன்னியின் செல்வன்" நாவலை கல்கி எழுதத் தொடங்கினார். தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற  பொன்னியின் செல்வன் வெளிவந்து 60+வருடங்கள் ஆகியும் இன்று வரை புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ளது. கல்கி  - என். சொக்கன், புக் மார்க்ஸ் புத்தகத்திலிருந்து... 

இதில் யார் பலவீனமானவர் ?

மாநிலம் முழுவதும் நமக்கு நாமேன்னு சுத்தியாச்சு ! 18 கோடி செலவு செஞ்சு எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கம் விளம்பரம் கொடுத்தாச்சு ! பழைய நண்பர் காங்கிரஸ் உடன் கூட்டணி மீண்டும் வச்சாச்சு ! இதில் தே.மு.தி.க வும் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே ஜெயலலிதாவை வீழ்த்தி  ஆட்சியை பிடிக்க முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருந்து பல்பு வாங்கிய தி. மு. க ! கடந்த கால தவறுகள் மீண்டும் செய்யாமல் சொந்த பலத்தில் தனித்து தேர்தலில்  போட்டி - விஜயகாந்த், பா.ம.க , பா.ஜ.க  கட்சிகள் ! இதில் யார் பலவீனமானவர் ? 

என் Support மல்லையாவுக்கு ! உங்களோடது ?

Image
அரசு வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம் ! டிராக்டர் வாங்க 3.5 இலட்சம் கடன் பெற்று அதில் கடைசி இரண்டு தவணை செலுத்தாத விவசாயியை போலீஸ் துணையுடன் அடித்து இழுத்து சென்றது தனியார் நிறுவனம் ! இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது,   விஜய் மல்லையாவிற்கு எந்த தனியார் நிறுவனமும் கடன் கொடுக்கவில்லை காரணம் விஜய் மல்லையாவின் கிரெடிட் மதிப்பு அவர்களுக்கு தெரியும் ! விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் கடன்கொடுக்க இந்த விளங்காத அரசு வங்கிகள் தயார் இல்லை ! சரி இதெல்லாம் நமக்கு எதுக்கு ரெண்டு மாசத்துல IPL வருது ! சிவப்பு ஜெர்சி போட்டுட்டு சத்தமா கத்துறோம் RCB ! RCB ! நான் மல்லையா அண்ணன் டீம Support பன்றேன் ! நீங்க ?