Posts

Showing posts from May, 2018

மக்கள் போராட்டங்கள் பற்றிய எனது பார்வை

குறிப்பு : இந்த கட்டுரை ஸ்டெர்லைட் சரியா தவறா என்பதை பற்றியதல்ல.  ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி வந்திருக்கும் உத்தரவு போராட்டகாரர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி தான்.. இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றம் சென்றால் என்ன ஆகும் இந்த பிரச்சனை எந்த கோணத்தில் செல்லும் என்பதெல்லாம் கணிக்க முடியாதவை.. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். மக்களுக்கு அரசாங்கம் மீதும் அவர்கள் தரும் தரவுகள் மீதும் நம்பிக்கை போய்விட்டது .. நாளைக்கே ஸ்டெர்லைட் சரியா தவறா என்று ஒரு ஆய்வை அரசாங்கம் நடத்தி முடிவு வெளியிட்டால் கூடமக்கள் நம்பப்போவதில்லை. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை சரியென்று தீர்ப்பு சொன்னால் நீதிபதிக்கு எத்தனை பெட்டி கைமாறியதோ என்று தான் நாம் நினைப்போம்... 100 ரூபாய் கொடுத்தால் சாமானியரே என்ன certificate வேண்டுமானாலும் அரசாங்க அதிகாரியிடம் வாங்கிவிட முடியுமென்றால் 1000 கோடிகள் வைத்திருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சில துண்டுகளை தூக்கிப்போட்டால் இந்த அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என சாமானியர் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்

வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்துகொண்டிருப்போர் உடனடி கவனத்திற்கு

இந்திய வங்கித்துறை வாராக்கடன் (NPA) பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. வங்கிகளின் லாபம் குறைந்து கொண்டேபோவதும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நீரவ் மோடிக்கு 11,000 கோடி அளவுக்கு ஊழல் செய்ய உதவி செய்ததும் கடந்த மாதங்களில் ஊடக செய்திகளை ஆக்கிரமித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடன்கள் காரணமாக இன்று பல பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. வாராக்கடன் அளவு ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்கும் பொழுது  Prompt Corrective Action (PCA) என்றழைக்கப்படும் வங்கியை இழுத்து மூடாமல் காப்பாற்றும் தற்காப்பு முயற்சிகளை  ரிசர்வ் வங்கி மேற்கொள்ள துவங்கும். ஒரு வங்கி PCA நடவடிக்கைக்கு உள்ளானதாக ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தால் அந்த வங்கியின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஆனால் அந்த வங்கி புதிய கடன்கள் ஏதும் வழங்க முடியாது. தேனா வங்கியின் (Dena Bank) வாராக்கடன் மிக அதிக அளவு சென்றுவிட்டதால் அந்த வங்கியை PCA நடவடிக்கையின் கீழ் சேர்ப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. தேனா வங்கி இனிமேல் புதிய கடன்கள்