Posts

Showing posts from November, 2018

மொரீசியஸ் வழி பற்றி கேள்விபட்டதுண்டா ?

இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடு எது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் ! 10 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் ஒரு குட்டி ஆப்பிரிக்க தீவு நாடான மொரீசியஸ் தீவு தான் அது. ஆமாங்க 2001 முதல் 2011 வரை இந்தியாவில் குவிந்த மொத்த FDI எனப்படும் அந்நிய முதலீட்டில் 40 சதவீதம் மொரீசியஸ் தீவில் இருந்து வந்தது தான். ஆச்சர்யமா இருக்கா ? இந்தியாவில் இருக்கும் கருப்பு பண முதலைகள் பணத்தை வெளுப்பாக மாற்ற மொரீசியஸ் தீவில் இருந்துதான் முதலீடு செய்கின்றனர் என்பது ஊரறிந்த செய்தி.. கூகுளில் Mauritius route என்று தட்டி பாருங்கள். அத்தனை செய்தியும் கிடைக்கும்.. மோடி பதியேற்றபின் கருப்பு பணத்தை ஒழிக்க மொரீசியஸ் தீவுகளுடனான வரி ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து பணம் பரிமாற்றப்பட்டதால் அவை சரி செய்யப்பட்டன எடுக்கப்பட்டது.. இப்பொழுது மொரீசியஸ் தீவில் இருந்து வரும் முதலீடு படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.. கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அத்தனை எளிதானதள்ள.. ஆனால் இந்த அரசு மிக உறுதியாக நடவடிக்கைளை எடுத்துவருவது வரவேற்கதக்கது

மிஷன் இந்திரதனுஷ் - தடுப்பூசி போடுவதில் ஒரு புரட்சி

நாட்டில் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்த பெரிய அளவிலான குறைபாட்டை போக்க Mission Indradhanush என்கிற திட்டத்தை மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு துவங்கியது. இத்திட்டத்தின் இலக்கு 90% குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்குள் 12 முக்கியமான தடுப்பூசிகளை போடுவதாகும். இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. World's best 12 practices என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.. குழந்தைகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசி போடும் திட்டம் கூட 70 வருட காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாதது வெட்ககேடு. இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சி திட்டங்கள் அல்ல. ஆனால் இவைதான் நாளைய இந்தியாவை சிறப்பாக படைக்க உதவும். அதே சமயம் இது போன்ற மத்திய அரசின் சீரிய முயற்சி இல்லாத காலத்திலிருந்தே தமிழக அரசு தடுப்பூசி போடுவதில் ஆகச்சிறந்த மாநிலமாக விளங்கிவருவதை இங்கே குறிப்பிடவேண்டும்...

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம்

இந்தியாவில் உற்பத்தியை துவங்க white goods என்று அழைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்களான வாஷிங் மெஷின், AC, பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் ஆர்வம்.. Bosch, Siemens, Haier, TCL, Panasonic, Godrej, BPL என அனைவரும் இந்தியாவில் உற்பத்தியை துவங்க முதலீடு. இறக்குமதியை குறைத்து உற்பத்தியை பெருக்க சமீபத்தில் இந்திய அரசு white goods களுக்கான இறக்குமதி வரியை (குறிப்பாக compressor கள்) இருமடங்காக உயர்த்தி அறிவித்தது. BSH நிறுவனம் சென்னையில் 800 கோடியில் பிரிட்ஜ் தயாரிப்பு, Midea குரூப் (சீன நிறுவனம்) 1350 கோடியில் compressor உற்பத்தி, Haier 3000 கோடியில் நொய்டாவில், TCL நிறுவனம் 2000 கோடியில் திருப்பதியில், Voltas நிறுவனம் 250 கோடி குஜராத்தில் உற்பத்தி திட்டங்கள் அறிவித்துள்ளன..

விவசாயத்தை காக்க விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுங்கள்

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.. சிறிய உதாரணம் சொல்கிறேன் : 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகபட்சமாக  விவசாயத்தில் 14% வளர்ச்சி  கண்ட மாநிலம் மத்திய பிரதேசம். இதற்கு காரணம் அரசாங்கம் நீர் சார்ந்த திட்டங்களிலும், பயிர் உற்பத்தியிலும் அதீத கவனம் செலுத்தியது தான். ஆனால் அதன் விளைவு இன்று வேறுமாதிரி வெளிப்பட்டிருக்கிறது. அதீத உற்பத்தி காரணமாக கருப்பு உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு வெறும் ₹ 4000 க்கு விற்பனை ஆகிறது. இது அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையான (MSP) ₹ 5600 க்கு 29% குறைவான விலையாகும். பூண்டு அதீத உற்பத்தி காரணமாக கிலோ ₹ 7 க்கு வாங்கப்படுவதாக குமுறுகின்றனர் விவசாயிகள். விலை இன்னும் வீழும் என்ற அச்சம் வேறு உள்ளது. உற்பத்தியில் மட்டும் அரசு பெரிய அளவில் கவனம் செலுத்த சந்தை படுத்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இன்று விவசாயிகளின் போராட்ட களமாக மாறியுள்ளது மத்திய பிரதேசம். சந்தை இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் , லாபம் வந்தால் தான் ஒரு தொழிலை செய்பவர் அதை தொடர்வார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விவசாயத்

துவங்கியது கங்கையில் கன்டெயினர் கப்பல் போக்குவரத்து !

நாட்டிலேயே முதல்முறையாக நீர்வழியில் சரக்குகளை அனுப்பும் திட்டம் கங்கை நதியில் நேற்று துவங்கப்பட்டுள்ளது. 16 கன்டெயினர்களை ஏற்றிய கப்பல் ஒன்று முதல் கப்பலாக கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு கங்கை நதியில் நேற்று பயணத்தை துவங்கியது ! இந்த நீர்வழிக்கு NW 1 என்று பெயரிட்டுள்ளனர். NW என்பது National Waterway என்பதை குறிக்கும் ! நாடுமுழுவதையும் இணைக்கும் NH (National Highway) சாலைகள் போல நதிகளில் சரக்குகளை கொண்டுசெல்ல மோடி அறிவித்த திட்டம் தான் National Waterway ! நீர்வழி போக்குவரத்து மிகவும் சிக்கனமானது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததும் கூட ! இத்தனை வருடம் வெறும் பேச்சில், தேர்தல் வாக்குறுதியில் மட்டுமிருந்த இந்த திட்டம் நிதின் கட்கரியின் சீரிய முயற்சியால் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது ! #IndiaMarchingAhead https://yourstory.com/2018/11/inland-waterways-container-movement/

இன்கமிங் கால் பெறக்கூட இனி ரீச்சார்ஜ் கட்டாயம்

மாதாமாதம் ரீச்சார்ஜ் செய்யாத பலருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை அளித்துதான் வருகின்றன. அதற்கு காரணம் நீங்கள் ரீச்சார்ஜ் செய்யாவிட்டாலும் உங்களால் நிறுவனத்துக்கு வருமானம் வேறு வகையில் வந்துகொண்டு இருந்ததே. உதாரணமாக நீங்கள் ஒரு ஏர்டெல் எண்ணை ரீச்சார்ஜ் செய்யாமலே வைத்திருந்தாலும் அந்த ஏர்டெல் எண்ணுக்கு பிற நெட்ஒர்க்கிடம் இருந்து வரும் கால்களுக்கு அந்த நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு பணம் தரவேண்டும். இதைத்தான் IUC (interconnection usage charges) என்று சொல்வார்கள். கடந்த அக்டோபரில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) IUC கட்டணத்தை 57% குறைந்தது அதேபோல் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் IUC கட்டணத்தை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தது.  இதன்படி ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவது வீண் என்று ஆகிறது. எனவே இனி மாதாமாதம் குறைந்த பட்ச ரீச்சார்ஜ் செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. அது மாதம் 35 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.