Posts

Showing posts from February, 2017

எழுச்சி ! எழுச்சி !

Image
கூடங்குளம் போராட்டம், காவிரி பிரச்சனை, மீத்தேன், ஜல்லிக்கட்டு, முல்லைப்பெரியாறு, இன்று ஹைட்ரோகார்பன் திட்டம் என மக்கள் எழுச்சி கொண்டு போராடும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அதிசய ஒற்றுமை உண்டு கவனித்தீர்களா ? - இவை எல்லாமே அரசாங்க திட்டங்கள் ! ஏன் மணல் கொள்ளைக்கு எதிராக எந்த மக்கள் எழுச்சியும் நடக்கமாட்டேன் என்கிறது ? ஏன் கல்வி கொள்ளைக்கு எதிராக அரசியல் கட்சிகள் வாயை திறக்கமாட்டேன் என்கின்றன ? ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மோடிக்கு லெட்டர் எழுதும் எடப்பாடி சார் மணல் கொள்ளை எதிர்த்து ஏன் வாயை திறக்க மாட்டேன் என்கிறார் ? நெடுவாசலில் நின்றபடி வைகோ ஆவேசமாக கத்துகிறாரே மணல் கொள்ளைக்கு எதிராக இதே வைகோ கத்த தயாரா? நன்றி தமிழ் மீம்ஸ் அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை பாதிக்கும் எந்த பிரச்சனைகளிலும் மக்களை போராடவிடுவதில்லை ! நாம் எழுச்சி எழுச்சி என்று சொல்லிக்கொள்ளும் எல்லா போராட்டமும் அரசியல் கட்சியையும் அதன் வருமானத்தையும் நேரடியாக பாதிக்காத திட்டங்களே ! எளிதாக சொன்னால் தங்கள் பிழைப்பை பாதிக்காத போராட்டங்களே கட்சிகளால் அனுமதிக்கப்படுகின்றன. மீடியாக்களில் கவர் செய்யவும்பட

அதிமுக நல்லவர்கள் அல்ல திமுக சளைத்தவர்களும் அல்ல

Image
திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நேற்று நடந்த ஒரு சட்டசபை நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு சொல்பவர்கள் சிந்திப்பீர் ! திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கையில் எடுக்கும் முதல் அஸ்திரம் ரியல் எஸ்டேட் துறையை முடுக்கி விடுவதுதான். மணல் கொள்ளையில் அதிமுக கில்லாடி என்றால் ரியல் எஸ்டேட் கொள்ளையின் ஜாம்பவான் திமுக ! இன்று நடுத்தர வர்கம் வீடு என்ன, நிலம் கூட வாங்க முடியாத அளவுக்கு மனையின் விலையை ஏற்றிய பெருமை திமுகவை சாரும் ! (அன்று நிலம் வாங்கிய எவரும் விற்க முடியாத இன்றைய நிலைக்கு ஜெயலலிதா பத்திர பதிவு விலையை ஏற்றியது ஒரு காரணம்). ஒரு சின்ன உதாரணம் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் (2009 ஆம் ஆண்டு) எங்கே கட்டப்படப்போகிறது என்பதை கடைசிநிமிடம் வரை அறிவிக்காமல், இங்கே வரும் அங்கே வரும் என லோக்கல் திமுக காரர்கள் 24 * 7 லோக்கல் தொலைக்காட்சியில் காந்தியில் தொடங்கி ஐஸ்வர்யா ராய் நகர் வரை விதவிதமான நகரை உருவாக்கி திருவாரூரை சுற்றி 10 கிமீ ஒரு விவசாய நிலம்கூட இல்லாமால் அழித்த கதை ஊரறிந்தது. பின்னர் வெள்ளை வேட்டி, Bolero கார் என ஊரை சுற்றும் இவர்கள் என்ன உழைத்தா சம்பாதித்தார்கள் ? சசிகலாவை நாம் எத்தனை பல

இஸ்ரோவும் 104 செயற்கைகோளும்

Image
இஸ்ரோ ஒரே செலுத்துதலில் (launch) 104 செயற்கைகோள்களை பிப்ரவரி 15 அன்று செலுத்த உள்ளது. இதற்கு முன் ரஷ்யா 37 செயற்கைகோள்களை ஒரே launch ல் செலுத்தியது தான் உலகசாதனையாக உள்ளது. ரிஸ்க் நிறைந்த இந்த திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்க காரணம் இல்லாமல் இல்லை. இன்று உலகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படும் செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில்செலுத்துவது அதிகரித்துள்ளது. செயற்கோள்களை நிறுவனங்களே தயாரித்துகொண்டாலும் அதை விண்ணில் செலுத்த ராக்கெட் அவர்களிடம் இல்லை. அதிலும்  ராக்கெட் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது எனவே நிறுவனங்கள் ராக்கெட் ஏவுதலில் சிறந்து விளங்கும் மற்ற நிறுவனங்களிடம் பணம் செலுத்தி தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் புதிய தொழில் வாய்ப்பு உலகம்முழுவதும் பெருகிவருகிறது. இதில் நிறுவனங்களுக்கு இரண்டே எதிர்பார்ப்பு தான் குறைந்த செலவு மற்றும் வெற்றிக்கான சாத்தியம் அதிகம் உள்ள ராக்கெட். இஸ்ரோ இது இரண்டிலுமே கில்லாடி ! இஸ்ரோவின் PSLV ராக்கெட் விராட் கோஹ்லி போன்று வெற்றி நாயகன் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இதுவரை 36 முறை விண்ணில் செலுத்தப்

கண்டிப்பாக படிக்க பொருளாதார ஆய்வறிக்கை !

Image
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) என்று ஒரு ஆவணம் (document) நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படும். இந்த வருடத்தின் ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் திரு அரவிந்த் சுப்ரமணியத்தால் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று ! உலகநடப்புகளான பெட்ரோல் விலை ஏற்ற இறக்கம், பிரெக்ஸிட், டிரம்ப் முதல் உள்ளூர் நடவடிக்கையான நோட்டு நடவடிக்கை, மாநிலங்களின் செயல்பாடுகள் என பல தளங்களில் ஆழமாக பயணிக்கிறது இந்த ஆவணம்! உதாரணமாக JAM (Jandhan - AADHAR - Mobile) திட்டம் தான் இந்தியாவின் எதிர்காலம் என்று இந்த ஆவணம் சொன்னபொழுது இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளான அனைவருக்கும் வங்கி கணக்கு, ஆதார் வழி பணப்பரிமாற்றம், மானியங்கள் அனைத்தும் நேரடியாக வங்கியில் செலுத்துதல் என அனைத்தும் JAM திட்டத்தை பொருந்தி செல்வதும் தற்செயலானது அல்ல ! எதிர்பார்ப்புகள் பெரிது ! காலம் சிறிது ! வாய்பளித்தவர்களுக்கு பொறுமை கம்மி ! கண்டிப்பாக

பட்ஜெட் 2017 - சத்தம்போடாமல் சர்க்கரை மானியம் ரத்து

Image
அருண் ஜெட்லி பட்ஜெட்டில் சத்தம்போடாமல் சர்க்கரை மானியத்தை ரத்து செய்யும் மோசமான திட்டத்தை அறிவித்துள்ளார் ! குடிசைவாசி முதல் மாளிகைவாசி வரை அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையை (sugar) விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால் அதே சர்க்கரை ரேஷன் கடையில் 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ! மத்திய அரசு ஒவ்வொரு கிலோ சர்க்கரைக்கும் 17 ரூபாயை மானியமாக தருகிறது ! இதன் மூலம் மத்திய அரசுக்கு வருடம் 4200 கோடி செலவாகிறது. இந்த பட்ஜெட்டில் அந்த மானியத்தை ரத்து செய்துள்ளார் அருண் ஜெட்லி ! எனவே வரும் நிதி ஆண்டில் ஒன்று ரேஷன் கடையில் மக்கள் 30 ரூபாய் கொடுத்து சர்க்கரையை வாங்கிக்கொள்ளவேண்டும் அல்லது மத்திய அரசுக்கு பதிலாக மாநில அரசுகள் அந்த 17 ரூபாய் மானிய செலவை ஏற்கவேண்டும் ! மக்கள் மத்திய, மாநில அரசு என்றெல்லாம் பிரித்து பார்க்கமாட்டார்கள் ! அவர்களை பொறுத்தவரை ரேஷன் கடை என்பது மாநில அரசின் கடை ! அங்கு சர்க்கரை 13 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய்க்கு விற்கப்பட்டால் கண்டிப்பாக மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். இதை எதிர்கொள்ள மாநில அரசுகள் வேறு வழியில்லாமல் தங்கள் நித