Posts

Showing posts from December, 2014

உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)

Image
தொழிற்சங்கங்கள் மற்றும் தி. மு. க சார்பில் தமிழக அரசின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டன. தமிழக அரசு விடுவதாக இல்லை. கே.கே.வேணுகோபால் மற்றும் பி.பி.ராவ் என்ற தலைசிறந்த வழக்கறிஞர்கள் தமிழக அரசு சார்பாக வாதாடினார். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் பரபரப்பான தீர்ப்பைவழங்கினர். "Employees thinking strike is their birth right, No political party or organisation can claim a right to paralyze the economic and industrial activities of a state or nation or inconvenience citizens even  t he trade unions, who have a guaranteed right for collective bargaining, have no right to go on strike. Government employees could not complain that they could hold society to ransom by going on strike to ventilate their grievances" தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் என்ற பெயரில் மாநில அரசையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது தங்கள் பிறப்புரிமை என்று கருதக்கூடாது. அவர்களுக்கு போராட்டம் செய்ய உரிமை இல்லை . தமிழக  அரசு எடுத்த நடவடிக்கைகள் சரியே  இருந்த

ஜெயலலிதா பாணி (பாகம் 2)

Image
அரசாங்கம் உழியர் போராட்டதுக்கு முடிவு கட்ட தயாரானது. போராட்டம் தொடங்கப்பட்ட ஜூலை 1 அன்றே பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சத்தமில்லாமல் அரசு செயலில் இறங்கியது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலார்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். எஸ்மா சட்டம் அவசர சட்டமாக அமல் செய்யப்பட்டது. பல அரசு அலுவலகங்கள் அத்தியாவசிய பணிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டன. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் பணிக்கு திரும்பாத 1.7 லச்சம் ஊழியர்கள் நிபந்தனையின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது போரட்டகாரர்கள் சற்றும் எதிர்பாராத திருப்பம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் ஆயிரக்கணக்கில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். பணிக்கு திரும்பிய பலரும் மீண்டும் பணியில் சேர்ந்துக்கொள்ளப்படவில்லை. எஸ்மா சட்டத்தை  எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சிறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் விடுவிக்க உத்தரவிட்டார். உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செ

ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1)

Image
ஜூலை 1, 2003. ஜெயலலிதா தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்திருந்தது. அரசு ஊழியருக்கு சம்பளம் வழங்கவே கஷ்டப்படும் அளவுக்கு நிதி நிலை மோசமாக இருந்ததால் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. D.A என்ற அழைக்கப்படும் பஞ்சப்படி மற்றும் சில பென்ஷன் சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்தும் ஊதிய உயர்வு போன்றவற்றை வழியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தன. மொத்தம் 13 லச்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இயந்திரம் ஸ்தம்பித்தது.  தமிழகம் சந்தித்த மிகப்பெரிய அரசு ஊழியர் வேலைநிறுத்தமாக இது பார்க்கப்பட்டது. போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகளும் (தி.மு.க உட்பட) ஆதரவு தெரிவித்தன. அரசு   Essential Services Maintenance Act  ( ESMA )  சட்டம் பாயும் என எச்சரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் செயல்படாததால் அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து விடும் என்று அவர்கள் தீர்க்கமாக நம்பினார். ஆனால் நடந்ததோ வேறு . 4 நாட்களில் போராட்டம் நசுக

வரலாற்றின் பக்கங்கள் - போராடுவோம் ! போராடுவோம் !

Image
நாள் 28/12/2014, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக திரு. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசாங்கம் செயல்படவில்லை என்ற நிலையில் தமிழக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பன்னீர்செல்வம் (ஓ.பி. எஸ்) முதல்வர் நாற்காலியில் கூட அமராமல் சத்தமில்லாத முதல்வராக தொடர்கிறார். ஓ.பி. எஸ் அவர்கள் இந்த போராட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதற்கு முன்னர் இதேபோல் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்தை ஜெயலலிதா எப்படி எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்போம். ஜூலை 1, இது வெறும் ஆரம்பம் (பாகம் 1) ஜெயலலிதா பாணி (பாகம் 2) உச்ச நீதிமன்ற தீர்ப்பு (பாகம் 3)