Posts

Showing posts from March, 2019

Mindtree நிறுவனத்தை வாங்கும் முனைப்பில் எல்&டி நிறுவனம்

சமீபத்தில் எல்&டி (L&T) நிறுவனம் 9,000 கோடி மதிப்பிலான நிறுவன பங்குகளை பங்குசந்தையில் இருந்து திருப்பி வாங்கிக்கொள்ள (Share Buyback) மேற்கொண்ட முயற்சியை பங்குச்சந்தை நெறியாளர் அமைப்பான செபி (SEBI) சில காரணங்களுக்காக தடைசெய்தது செபியின் தடையால் துவண்டிருந்த எல்&டி நிறுவனத்தை Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள Mindtree தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் 20% பங்குகளை விற்க விரும்புவதாக கூறினார் நேற்று சித்தார்தாவின் 20% பங்குகளை எல்&டி நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால் எல்&டி நிறுவனம் இத்தோடு நிற்காமல் Mindtree நிறுவனத்தின் முழுவதும் கட்டுப்படுத்தும் அளவுக்கான (51% +) பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது Mindtree நிறுவனர்கள் நிறுவனம் தங்கள் கைகளை விட்டுப்போவதை விரும்பவில்லை. இந்த கையகப்படுத்துதலை முறியடிப்போம் என அவர்கள் பேட்டியளித்துள்ளனர் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்திவருபவர்களின் விருப்பமில்லாமல் மற்றொரு நிறுவனம் வலுக்கட்டாயமாக மேற்க்கொள்ளும் கையாகப்படுத்துதல் முயற்சியை Hostile Takeover என்று வர்ணிப்பர் இந்தியாவில் பல ஆண்டுக

உங்களின் Take Home சம்பளம் குறையப்போகிறது கேள்விப்பட்டீர்களா?

இனி PF (Provident Fund) பிடித்த தொகை அதிகமாகப்போகிறது கேள்விப்பட்டீர்களா ?? தொடர்ந்து படியுங்கள்.. பொதுவாக பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் அடிப்படை ஊதிய (basic pay) தொகையின் 12% சதவீதத்தை பணியாளர்களின் PF பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் அதே அளவு (12%) தொகையை நிறுவனமும் தன் பங்களிப்பாக பணியாளரின் PF கணக்கில் வரவு வைக்கும்.. (அதிகபட்சம் மாதம் ₹1,800) மார்ச் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் special allowance தொகையையும் Basic Pay யுடன் சேர்த்து கணக்கிட்டு அந்த தொகையில் 12 % PF பிடித்தம்செய்ய வேண்டும் என கூறியுள்ளது... உதாரணமாக ஒருவர் மாதம் ₹ 5,000 அடிப்படை ஊதியமும் (basic pay) மற்றும் ₹ 10,000 special allowance பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். (கவனிக்க: நிறுவனங்கள் செலவை குறைக்க ஊழியர் சம்பளத்தை Basic pay, special allowance என பலவாக பிரித்து தருகின்றன) பழைய PF கணக்கீட்டின் படி, அடிப்படை ஊதியம் ₹5,000 க்கு 12% அதாவது  ₹600 மட்டும் ஊழியர் சம்பளத்தில் PF பணமாக பிடித்தம் செய்யப்படும். அதேபோல் நிறுவனமும் தன் பங்களிப்பாக ₹600 தொகை

அபினந்தன் கதையில் அதிகம் பேசப்படாத பகுதி

அபினந்தனின் மொத்த எபிசோடில் அதிகம் பேசப்படாமல் (வேண்டுமென்றே?) தவிர்க்கப்படுவது அவர் சுட்டு வீழ்த்திய அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமான பகுதி தான்.. 1974 முதல் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்படும் F16 விமானம் தனது 45 வருட வரலாற்றில் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் . இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் இந்திய விமானப்படையும் அபினந்தனும். எல்லையில் ஒரு சண்டை அதில் ஒரு விமானம் இன்னொன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த கதை அத்தனை எளிதாக கடந்து சொல்லும் கதையல்ல.. விமானப்படையின் பலமென்பது விமானத்தின் பலம் மட்டும் அல்லவே.. அது விமானியின் பலத்தையும் சேர்த்தது என்று உலகிற்கு நிரூபித்த நொடி அது.. அபினந்தன் பறந்த MiG 21 விமானத்தின் செல்ல பெயர் "பறக்கும் சவப்பெட்டி" (Flying Coffin). 60 வருட பழைய சோவியத் டிசைனான MiG விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக நடந்த விபத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்ட இந்திய விமானிகள் உயிரை குடித்திருக்கிறது. MiG விமானத்துக்கு மாற்றாக இந்தியா திட்டம் தீட்டி இருக்கும் தேஜஸ் போர்விமானங்கள் இந்நேரம் பயன்பாட்டுக

சமூக ஊடகங்களில் தேவை கவனம்

Image
இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழின் 7 மார்ச் 2019 பதிப்பில் வெளிவந்தது.. என்னதான் 60+ வருடங்களாக ஜனநாயக நாடாக இருந்தாலும், ஓட்டு பெட்டியை தாண்டி சாதாரண மக்களுக்கு தங்கள் குரலை பதிவு செய்ய ஒருவாய்ப்பு சமீப ஆண்டுகளாகத்தான் கிடைத்துள்ளது. அதற்கு சமூக ஊடகங்களுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும். வெறும்  பொழுது போக்கு இடமாக  மட்டுமே  துவங்கப்பட்ட சமூ க ஊடகங்கள் இன்று ஆட்சி மாற்றத்தை கூட கொண்டுவரும் சக்திகளாக மாறிப்போயுள்ளன.  விஞ்ஞானம், சமையல், விவசாயம், முதலீட்டு ஆலோசனைகள், கேன்சருக்கான மருந்து (ஆமாங்க நம்புங்க), அரசியல், ஆபாசம் என எண்ணற்ற தலைப்புகளில் சமூக ஊடகங்களில் செய்திகள்  பரப்பப்படுகின்றன.  இப்படி குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட சமூக ஊடகங்களுடன் சில தீய செயல்களும் சேர்த்தே வளர்ந்துள்ளன.  மத, இன, மொழி சார்த்த உணர்ச்சிகளை தூண்டும் வன்முறையான பல பதிவுகள் கூட சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.  காரணம் சமூக ஊடகங்களுக்கு சென்சார் கிடையாது. மனம்போன போக்கில் யாரும் யாரைப்பற்றியும் என்னவேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் எழுதலாம் என்ற நிலைதான் அத