Posts

Showing posts from December, 2017

2ஜியும் மோடிஜியும்

Image
வழக்கு தொடங்கப்பட்ட பொழுது காட்டிய வேகத்தை CBI வழக்கை நிரூபிக்க காட்டவில்லை என்கிறார் நீதிபதி.. தவறே நடக்கவில்லை என்பதல்ல தீர்ப்பு, தவறு நடந்திருக்கலாம் ஆனால் CBI நிரூபிக்க தவறி விட்டது என்பதே தீர்ப்பு.. CBI என்பது இங்கே மோடி அரசை தான் குறிக்கிறது... BJP இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை.. திமுக விற்கு சாதகமாக நடந்தது.. தப்பிக்க விட்டது அவ்வளவு தான் சங்கதி. BJP யின் இந்த செயல்பாடு அவர்கள் செய்த பெரிய அரசியல் பிழையாக எதிர்கால வரலாற்றில் இடம்பெறலாம்.. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என யாரும் இந்த வழக்கை நிரூபிக்க பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்றும் சொல்லலாம்..

FRDI Bill 2017 - சர்ச்சையும் உண்மையும்

Image
(கொஞ்சம் நீண்ட கட்டுரை பொறுமையுடன் படிக்கவும்) 1991 க்கு முன்பு வரை பெரிய தொழில்கள், வங்கிகள் எல்லாம் அரசாங்கத்தின் வசம்தான் இருந்தது. 1991 உலகமயமாக்கலுக்கு பிறகு சோப்பு தயாரிப்பு முதல் ISRO வின் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரை அனைத்திலும் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுவிட்டது. உற்பத்தி நிறுவனங்கள் விபத்து, போட்டிநிறுவனங்களிடம் சந்தை இழப்பு (உதாரணமாக RCom, Tata Docomo) , சந்தையின் தேவைக்கு ஏற்ப புதுப்பித்து கொள்ளாமை (அம்பாசடர் கார் ஜாம்பவான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்), ஊழல் புகார் (சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்), அலட்சியம் (BSNL) போன்ற ஏதேனும் காரணத்தால் தொழில் நொடித்து போகலாம். நொடித்து போகும் அல்லது திவாலாகும் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாவிட்டால் வங்கிகள் அந்த கடனை வாரா கடன்  (Bad Loans/ Non Performing Asset) என்று அறிவிக்கின்றன. இப்படி வங்கிகளுக்கு வரவேண்டிய வாராக்கடன் அளவு மட்டும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்.  இந்த வாரக்கடனை தொகையை வசூல் செய்ய மத்திய அரசு கொண்டுவந்ததே IBC எனப்படும் Insolvency & Bankruptcy code அல்லது திவால் சட்டம். இ

திவால் சட்டத்தில் தேவையான மாற்றம்

Image
பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC (Insolvency & Bankruptcy Code) எனப்படும் திவால் சட்டத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டை இப்பொழுது அடைக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனத்தை நடத்தும் முதலாளிகள் (promoter) வேண்டுமென்றே பெரிய கடன் தொகையை பெற்று (வங்கி அதிகாரிகளும் இதில் உடந்தை) பின் அந்த நிறுவனம் நஷ்டம் என்று கணக்கு காட்டி பணத்தை சுருட்டி சென்றதால் வங்கிகளின் வாரா கடன் அளவு பலமடங்காக அதிகரித்தது. இந்திய வாராக்கடன்களின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய். இதை சரி செய்ய கொண்டுவரப்பட்டதே IBC என்ற திவால் சட்டம். இந்த சட்டப்படி கடனை திரும்பி செலுத்தாத நிறுவனத்தை வங்கிகள் திவால் என அறிவித்து ஏலம் விடுவதன் மூலமோ அல்லது மற்றவருக்கு  நிறுவனத்தை விற்பதன் மூலமோ தங்கள் கடன் தொகையை திரும்ப பெறலாம். source: google ஆனால் இந்த சட்டத்தில் இருந்த ஒரு ஓட்டையை தான் பெரிய அளவில் முதலாளிகள் பயன்படுத்த முயன்றனர். ஏற்கனவே நிறுவனத்தை திவாலுக்கு தள்ளிய முதலாளி மீண்டும் ஏலத்தில் பங்கேற்று தனது நிறுவனத்தை தானே குறைந்த விலைக்கு ஏலமெடுத்த கூத்து நடைபெற்றது