செய்தித்தாள்களில் வரும் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா ??
செய்தித்தாள்களில் வரும் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா ?? அவை எங்கே சாலை பணிகள் நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஒரு வழியாகும். உதாரணமாக கடந்த இரண்டு நாட்களாக தினத்தந்தி மற்றும் தினமலர் நாளிதழில் வெளியான நெடுஞ்சாலைத்துறையின் விளம்பரங்கள் மூலம் நாம் அறிந்திடும் செய்தி : சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத்தின் கீழ் கும்பகோணம் - மன்னார்குடி (ஆலங்குடி வழி) மற்றும் கும்பகோணம் - சீர்காழி சாலைகளை விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன என்பதே.. நில கையகப் பணிகள் முடிந்தால் அடுத்து டெண்டர் விடப்பட்டு சாலை போடும் பணிகள் துவங்கும்.. இனி செய்தித்தாளில் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்தால் படித்துவிடுங்கள்..