Posts

Showing posts from May, 2019

நேரு குடும்ப விசுவாசிகளால் மண்ணை கவ்விய காங்கிரஸ்

கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே.. ஆனால் அந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் எவ்வளவு முக்கிய காரணமோ அதே அளவு காரணம் சச்சின் பைலட்.. சச்சின் பைலட் ஒரே வருடத்தில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துவந்தார். இத்தனைக்கும் அவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்.. தேர்தல் முடிந்ததும் வெற்றிக்கு கடுமையாக உழைத்த சச்சின் பைலட்டுக்கு தான் முதல்வர் பதவி என அனைவரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் சோனியா குடும்ப விசுவாசி என்ற ஒரே காரணத்திற்காக அசோக் கெலாட்க்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.. அதே போல் மத்திய பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் தேரியதற்கு காரணம் சிந்தியா என்பர் தான். ஆனால் முதல்வர் பதவி சோனியா குடும்பத்தின் விசுவாசி என்பதற்காக கமல்நாத்துக்கு வழங்கப்பட்டது... நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி பற்றி பேசிய ராகுல் காந்தி அசோக் கெலாட், கமல்நாத், சிதம்பரம் போன்றவர்கள் கட்சிக்கு உழைக்காமல் தங்கள் மகன்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க மட்டுமே உழைத்தனர் என்று காட்டமாக குறிப்பிட்டார்.. ஆனால் திறமைசாலிகளுக்கு

பானி பூரி விற்பது கேவலம் அல்ல

வடக்கே இருந்து வந்து பானி பூரி விற்கிறான் என அடுத்தவர் செய்யும் தொழிலை மட்டம் தட்டும் சிலருக்கு மனநோய் என்று தான் சொல்ல தோன்றுகிறது... வடமாநிலத்தில் இருக்கும் மக்களில் சில லட்சம் பேர் வாய்ப்பு தேடி இங்கே வருகிறார்கள் நான் மறுக்கவில்லை. வாய்ப்பு இருக்கும் இடத்தை தேடி நகர்வது தான் மனித இயல்பு. நம்ம மக்கள் பலர் கூட UAE, மலேசியா, சவுதி, அமெரிக்கா, UK என பல நாடுகளில் வேலை செய்கிறார்கள். இங்கே அத்துனை வாய்ப்பு கொட்டி கிடந்தால் ஏன் நம் மக்கள் அங்கெல்லாம் வேலைக்கு சென்று கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்று கேட்டால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும் ? இங்கே முடி திருத்தும் தொழில், டீ கடை துவங்கி மொத்த வியாபாரம் வரை மெதுவாக பல வடநாட்டவர் முன்னேறி வருவதெல்லாம் இந்த பேஸ்புக் போராளிகளுக்கு தெரியாது.. சுய தொழிலில் ஈடுபடுபவதை ஊக்குவிக்காத கல்வி திட்டத்தில் படித்து வந்த நம்மிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.. வருடத்துக்கு உங்கள் பணத்துக்கு 7% வட்டி என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் இப்பொழுது 6.5% வட்டியில் வைத்திருக்கும் FD யை முறித்து அடுத்த வங்கிக்கு வருடத்துக்கு 0.5% கூடுதல் வட்டிக்காக தூக்கி கொண்ட

இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்கள் பொதுவானதாக இருக்கலாமே ?

நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் இயற்பியல் ஆசிரியர் புத்தகத்தின் இத்தனாம் பக்கத்தில் பிரிண்டிங் மிஸ்டேக் இருக்கு திருத்தி கொள்ளுங்கள் என்று ஸ்டைலாக சொல்வார்.. அன்று அவரைப்பற்றி மற்ற பள்ளி நண்பர்களிடம் பெருமையாக நாங்கள் பேசுவதுண்டு.. ஆனால் இன்று யோசித்து பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.. எத்தனை வருடம் மாற்றமே காணாத ஒரு பாட புத்தகம் அது.. Physics, Chemistry, Maths புத்தகங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே புத்தகமாக இருந்தால் நலமோ என நான் நினைக்கிறேன்..

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா !!!

ஜெய்ஷ் இ முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா !!! பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி !! பின்னணி : இந்திய பாராளமன்றத்தின் மீதான தாக்குதல், மும்பை தாக்குதல், பதன்காட் மற்றும் புல்வாமா போன்ற கொடிய தாக்குதல்களை இந்தியாவில் நிகழ்த்திய JeM தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மூன்று முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்த தீர்மானங்களை சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தை கொண்டு முறியடித்தது புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியாவிற்கு ஆதரவாக பிரான்சும், ஜெர்மனியும் மசூத் அசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை நான்காவது முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்தது இந்த தீர்மானத்துக்கு சீனா தவிர மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன ஆனால் சீனா மட்டும் தனது நண்பன் பாகிஸ்தானுக்கு சாதகமாக இந்த தீர்மானத்துக்கு தற்காலிகமாக தடை கொண்டுவந்தது. சீனாவின் பல சாலை திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மசூத் அஸார் தீவிரமாக பணி