Posts

Showing posts from March, 2015

சென்னை MTCக்கு ஆண்கள் சார்பாக ஒரு கோரிக்கை

Image
சென்னைக்கு வந்த பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது. முதலாவது பேருந்தில் இடது புறம் இருக்கை முழுவதும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, இரண்டாவது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்  அமரும் ஆண்களை " எழுந்திரிங்க இது லேடீஸ் சீட் " என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை விட்டுக்கொடுக்காமல் கேட்டுப்பெறுவது (நம்ம ஊர்ல பொண்ணுங்க தைரியமா இது லேடீஸ் சீட் எழுந்திரிங்க என்று குரல் கொடுத்து நான் பார்த்தது இல்லை). ட்ரைனிங் பீரியட் பொழுது ஆபீஸ் நடந்து போகும் தொலைவில் இருந்ததால் பேருந்தில் பயணம் என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான். சமீப மாதங்களில் பேருந்தில் ஆபீஸ் சொல்லவேண்டிய  சூழல்.ஆபீஸுக்கு பேருந்தில்  பயணிக்கும் பொழுது மற்றுமொரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்தது. இடது பக்கம் பெண்கள் இருக்கை பலவும் காலியாக இருக்க பெண்கள் வலது பக்கம் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து  இருந்தார்கள். ஆண்கள் பலர் நின்று கொண்டே பயணம் செய்தார்கள். அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தங்களில் காலியாக இருந்த பெண்கள் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. கடைசி வரை ஆண்கள் நின்றுகொண்டே பயணித்தார்கள். இதை பலநாள் க

யார் குற்றவாளி ?

Image
புரட்சி ! புரட்சி ! புரட்சி ! தூங்கிக்கொண்டு மட்டுமே இருக்கும் அரசு துறைகளுக்கு மத்தியில், முதல் துறையாக தமிழக கல்வி துறை விழித்து எழுந்து கொண்டுள்ளது..! ஆம் ! 1978 ஆம் ஆண்டு முதல் எழுத்து தேர்வாக இருந்துவந்த +1 வகுப்பின் தட்டச்சு (Typewriting) முதல் தாள் தேர்வு 2015 ஆம் கல்வி ஆண்டு முதல் செய்முறை தேர்வாக மாற்றப்படுமென அறிவித்துள்ளது. அதவாது தட்டச்சுக்கு எதுக்கு எழுத்து தேர்வு என்று யோசித்து முடிவெடுக்க 36 ஆண்டுகள் கடந்து விட்டன. Source: http://crsttp1.blogspot.in/2014/12/2_19.html இந்த செய்தி ஒன்றே போதும் நமது கல்வித்துறையின் இலட்சணத்தை சொல்வதற்கு. தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், மத்திய அரசு ஆசிரியருக்கு நிகரான ஊதியம் தரவேண்டும், எந்த தேர்வும் இல்லாமல் நேரடியாக வேலை தரவேண்டும் இன்னும் எத்தனையோ வேண்டும் என கூவும் எந்த ஆசிரியராவது 15 வருடங்களாக பக்கம் எண் கூட மாறாமல் பாழடைந்து கிடக்கும் +1, +2 வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும் என்று போராடியதுண்டா ? சம்பள உயர்வு கேட்டு தெருவில் இறங்குமுன் உங்கள் மனசாட்சியை கேளுங்கள் 20,000, 30000 என சம்பளம் பெரு

குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை

Image
ஜெய்ப்பூருக்கு  பிங்க் சிட்டி என பெயர் வந்த கதை தெரியுமா உங்களுக்கு ? அதற்கு நாம் 139 வருடங்கள் பின்னே செல்லவேண்டும். ஆண்டு 1876 , இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியா நாட்டில், வெள்ளையரோடு நட்பு பாராட்டிய சில இந்திய அரசர்களும் ஓரமாக ஆட்சி செய்து கொண்டுதான் இருந்தனர். இந்த நிலை 1947 வரை தொடர்ந்தது. ஜெய்ப்பூர் மஹாராஜா ராம்சிங் பிரிட்டிஷ் அரசோடு நட்பு பாராட்டி வந்தார். 1876 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் மற்றும் விக்டோரியா மஹாராணி ஜெய்ப்பூருக்கு வருகை தந்தனர். அவர்களின் மனம் கவர்ந்து பிரிட்டிஷ் உடனான தனது நட்பை விரிவு படுத்த வேண்டும் என்று யோசித்த மகாராஜாவிற்கு கன நேரத்தில் தோன்றியது தான் பிங்க் சிட்டி ஐடியா. பார்த்தார் மனிதர்  ஜெய்ப்பூர் நகர் முழுவதையும் பிங்க் நிறத்தால் வண்ணம் பூச உத்தரவிட்டார். காரணம், பிங்க் நிறம் விருந்தோம்பலை மற்றும் வரவேற்பை  குறிக்கும் நிறமாகும். மக்கள் முழுமனதோடு இந்த உத்தரவை செய்தார்கள் என்று சொல்வதற்கில்லை.ராஜா உத்தரவு என்பதால் ஊர் முழுவதும்  பிங்க் நிறமாக வண்ணம் பூசப்பட்டது. அவளாவே  (அரசாங்க