Posts

Showing posts from September, 2020

தூவைநாதர் கோவில் - திருவாரூர் நகரின் மைய பகுதியில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்

Image
திருவாரூர் நகரின் மைய பகுதியில் பெரிய தேருக்கு மிக அருகில் (முருகன் தேருக்கு பக்கத்தில்) மோசமான நிலையில் இருக்கும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்தை பற்றிய பதிவு... ~~~ தூவைநாதர் கோவில் ~~~  இத்திருக்கோயில் குளத்தில் நீராடி இறைவன் மீது "தூவாயா தொண்டுசெய்" என்று துவங்கும் தேவாரப்பாடலை பாடி இழந்த கண்பார்வையை சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பபெற்றார்.. ஆரூர் அமர்ந்த தியாகராஜ சுவாமிக்கு நண்பரான சுந்தர மூர்த்தி நாயனார் நீராடிய திருக்குளத்தின் இன்றைய நிலை வெளியே சொல்வதற்கில்லை... பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒரு அறிவிப்பு பலகை கூட கிடையாது. திருவாரூரில் வாழும் பலருக்கே அது தெரியாது... "இறைவனே நேரில் வந்து அருள்வழங்கும் அளவுக்கு பக்தியில் திளைத்த சுந்தரமூர்த்தி நாயனார் நின்று மனமுருகி தேவாரம் பாடிய அதே இடத்தில் நாம் நிற்கிறோம் என்ற உணர்வே உடலில் சிலிர்ப்பை தருகிறது" அதேசமயம் இப்படி கொண்டாடப்படவேண்டிய கோவில் நகரின் மையப்பகுதியில் இருந்தும் கேட்பாரற்று பாழடைந்து கிடப்பது மனதை உறுத்துகிறது.. தூவைநாதர் கோவில் கூகிள் மேப் தளத்தில்  தூவாயா தொண்டுசெய் தேவாரப்பாடல்  ( https://shaivam.org/thirumur

கோவிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடுவது சரியா ??

கோவிலில்  அர்ச்சகர் தட்டில் எதுக்கு சார் காசு போடவேண்டும். அவர் என்ன கடவுளுக்கும் நமக்கும் இடையில் தூதுவரா என்று கேட்பவர்கள் உண்டு காலை 5 மணிக்கு நடை திறப்பில் இருந்து பால்நெய்வேதனம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை பூஜை, இரவு அர்த்தசாம பூஜை, பிரதோஷம், சதுர்த்தி என கோவிலின் எல்லா நடைமுறைகளும் யார் வந்தாலும் வராவிட்டாலும், மழை, புயல் காலமாக இருந்தாலும், கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன அந்த நடைமுறைகளை தினமும் செய்து வருபவர்கள் அர்ச்சகர்கள். அதற்கு நம்மால் முடிந்த காணிக்கையை கொடுக்கிறோம்.  ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம், மருத்துவ செலவுகள், பள்ளி படிப்பு செலவுகள், பெட்ரோல் விலை ஏற்றமெல்லாம் உண்டு. அவர்கள் பிழைப்பு என்பது அந்த தட்டில் விழும் பணத்தை நம்பி இருக்கிறது. முதலில் இந்த பூஜை பிரதோஷங்களே தேவையா என்று தானே கேட்கிறேன் என்று நீங்கள் கேட்பீர்கள் எனில் உங்களுக்கு கோவில் என்கிற அமைப்பின் வழியாக இறையை தேடமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு கோவில் அமைப்பின் மீதே நம்பிக்கையில்லை எனில் அதன் நடைமுறைகளை பற்றி பேச எந்த அனுமதியும்

நோபல் பரிசு வாங்க ஒபாமாவுக்கு தகுதி உண்டெனில் டிரம்ப்க்கு இல்லையா?

Image
நேற்று தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிப்பிரியும் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கார்டூனை ஷேர் செய்திருந்தார். அது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதை கிண்டல் அடிக்கும் ஒரு கார்ட்டூன்.. கார்ட்டூன் அல்லது meme வரைவதற்கு humour sense போதும் வரலாறு அல்லது உண்மையை படிப்பததெல்லாம் தேவையில்லை போலும்.. சரி இதற்கு முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் அமைதிப்போராளி பராக் ஒபாமாவின் கதையை பார்த்துவிட்டு ட்ரம்புக்கு நோபல் வாங்க தகுதி இருக்கிறதா என்பதை பற்றி பேசுவோம்.. ~~~~~~~அமைதி ஒபாமா~~~~~~~ அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றது 2009 ஜனவரியில். அதே 2009ல் அக்டோபர் மாதம் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.. அதாவது பதவியேற்ற 9 மாதத்தில் அவர் அமைதிக்கு பெரும்பாடு பட்டதாக சொல்லி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.. ஆனால் ஒபாமா ஆட்சியில் பிற நாட்டின் மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் எப்போதும் இருப்பதை விட சற்றும் குறையாமல் நடத்துவந்தன.. அவர் ஆட்சியில் நடந்த சில முக்கிய நடவடிக்கைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.. லிபியாவில் அதிபர் கடாபியை தூக்கியெறிய உள்நா