கோவிலில் அர்ச்சகர் தட்டில் காசு போடுவது சரியா ??

கோவிலில்  அர்ச்சகர் தட்டில் எதுக்கு சார் காசு போடவேண்டும். அவர் என்ன கடவுளுக்கும் நமக்கும் இடையில் தூதுவரா என்று கேட்பவர்கள் உண்டு

காலை 5 மணிக்கு நடை திறப்பில் இருந்து பால்நெய்வேதனம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை பூஜை, இரவு அர்த்தசாம பூஜை, பிரதோஷம், சதுர்த்தி என கோவிலின் எல்லா நடைமுறைகளும் யார் வந்தாலும் வராவிட்டாலும், மழை, புயல் காலமாக இருந்தாலும், கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன

அந்த நடைமுறைகளை தினமும் செய்து வருபவர்கள் அர்ச்சகர்கள். அதற்கு நம்மால் முடிந்த காணிக்கையை கொடுக்கிறோம். 

ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம், மருத்துவ செலவுகள், பள்ளி படிப்பு செலவுகள், பெட்ரோல் விலை ஏற்றமெல்லாம் உண்டு. அவர்கள் பிழைப்பு என்பது அந்த தட்டில் விழும் பணத்தை நம்பி இருக்கிறது.

முதலில் இந்த பூஜை பிரதோஷங்களே தேவையா என்று தானே கேட்கிறேன் என்று நீங்கள் கேட்பீர்கள் எனில் உங்களுக்கு கோவில் என்கிற அமைப்பின் வழியாக இறையை தேடமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு கோவில் அமைப்பின் மீதே நம்பிக்கையில்லை எனில் அதன் நடைமுறைகளை பற்றி பேச எந்த அனுமதியும் இல்லை என்பதே சரி. 

காரணம் கோவில் என்பது 𝗽𝘂𝗯𝗹𝗶𝗰 𝗽𝗹𝗮𝗰𝗲 அல்ல. அது 𝗽𝗿𝗶𝘃𝗮𝘁𝗲 𝗽𝗹𝗮𝗰𝗲 𝗼𝗳 𝘄𝗼𝗿𝘀𝗵𝗶𝗽. கோவிலின் நடைமுறைகள், அதன் விழாக்கள், சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் செல்லும் இடம். அங்கே நம்பிக்கை இல்லாதவருக்கு என்ன வேலை ??
சோ ராமசாமி அவர்கள் சொன்னது போல் 𝗜𝗳 𝘆𝗼𝘂 𝗱𝗼𝗻'𝘁 𝗯𝗲𝗹𝗶𝗲𝘃𝗲 𝗶𝘁, 𝘆𝗼𝘂 𝗵𝗮𝘃𝗲 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗿𝗶𝗴𝗵𝘁 𝘁𝗼 𝗸𝗲𝗲𝗽 𝘆𝗼𝘂𝗿𝘀𝗲𝗹𝗳 𝗮𝘄𝗮𝘆.

யாரும் கோவிலுக்கு வந்து இந்த நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்ற கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லை எனில் போகாதீர்கள்.

~~~~~~~~~~

சின்ன கோவிலில்கள் குறிப்பாக கிராமத்து கோவில்களில் யாருமே தரிசனம் செய்ய வராவிட்டாலும் விளக்கு எரிவது அங்கே பணிபுரியும் அர்ச்சகர்களால் தான்.
அவர்களுக்கு வருமானம் இருக்காது என்று தெரிந்து தான், அரசர்கள் கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கி அதில் வரும் வருமானத்தை வைத்து கோவில் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்தார்கள். இன்று கோவில் நிலங்கள் பலவும் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே அந்த கோவில் அர்ச்சகர்களை காக்கும் பொறுப்பு நம்முடையதே. இல்லாவிடில் அந்த கோவில்கள் சிதிலமடைந்து வீழ்வதை ஒருவரும் தடுக்கமுடியாது போகும்.
எனவே கூட்டம் அதிகம் வரும் பெரிய கோவில்களில் அர்ச்சகர் தட்டில் பணம் போடாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் சின்ன கோவில்கள், குறிப்பாக கிராமத்து கோவில்களுக்கு செல்லும் பொழுது அங்கே பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு தாராளமாக தட்டில் பணம் வைப்பது என்று முடிவு செய்துள்ளேன். பார்ப்போம்..

~~~~~~~~~~

அர்ச்சகர்களில் சிலர் பிற சமூகத்தினரை மதிப்பதில்லை. கோவிலில் மந்திரங்களை அபிஷேகங்களை கூட ஒழுங்காக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எனக்கும் உண்டு...

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)