Posts

Showing posts from June, 2016

முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ ?

Image
திருடனோ தீவிரவாதியோ சுட்டு கொல்லப்பட்டால் ஓடிவரும் எந்த மனித உரிமை அமைப்பும், திருடன் அல்லது தீவிரவாதியால் போலீஸ்காரர்கள் மடியும் பொழுது வரமாட்டார்கள். பீப் சாங் போட்டால் பற்றிக்கொண்டு கொண்டு வரும் மாதர் சங்கம் எதுவும், பெண்களுக்கு ஆண்களை விட ஊதியம் குறைவாக தரப்படும்பொழுதோ, ஸ்வாதி போன்றவர்கள் வெட்டி கொல்லப்படும் பொழுதோ எங்கே போவார்கள் என்று தெரியாது. கோவில்பட்டியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வரும் அதுவும் விடியற்காலை மூன்று மணிக்கு. ஆனால் அதே ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் பெப்சி மற்றும் கோலா நிறுவனம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானம் தயாரித்து விற்றால் சொரணை இல்லாமல் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நாம். முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ என எண்ண தோன்றுகிறது ! கண்முன்னே நடக்கும் இந்த நிகழ்வுகளை சேர்த்து பார்ப்பதில் தான் நமது கல்வி அறிவு மண்ணை கவ்வுகிறது தவறு என்று தெரியும் ஆனால் நான் மாறினால் எல்லாம் மாறிவிடுமா என்று படித்த மேதாவிகள் தான் கேட்கிறார்கள். நாம் மேதாவிகள் அல்ல பன்னாட்டு நிறுவன ஆய்வகத்தின் எலிகள் ! இறுதியாக ஒரு வார்த்தை ம

கல்வி கடன்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு

Image
ஸ்டேட் பேங்கில் வாங்கப்பட்ட கல்வி கடனில் வசூல் செய்வது கடினம் என்று முடிவு செய்யப்பட்ட கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது ஸ்டேட் பேங்க் நிர்வாகம். தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் வாங்கிய கடன் தொகை 17000 கோடி. இதில் 1875 கோடி கடன் மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு 381 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது. இனி இந்த கடனை மாணவர்களிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வசூல் செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பொதுவாக கடனை வசூல் செய்ய எத்தனை தூரத்திற்கு செல்லும் என்பதற்கு  குண்டர்கள் வைத்து மிரட்டுவது முதல் போலீஸை ஏவி விவசாயியை தாக்கிய வரை பல உதாரணங்கள் உண்டு. ஊரே என்ஜினீயரிங் படித்து இன்று அதில் பாதிப்பேருக்கு மேல் சரியான வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில் மாணவர்கள் எப்படி கடனை திருப்பி செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. விஜய் மல்லையாவை பிடிக்க துப்பில்லாத இந்த அரசாங்கமும் அரசு வங்கிகளும் சாமானியர் பாக்கெட்டில் கைவைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் . நமது மோசமான கல்வித்திட்டத்தில் இருந்தும் சாமானியரை சுரண்ட

உமேஷ் சச்தேவுக்கு நமது வாழ்த்துக்கள் !

Image
டைம் இதழ் வெளியிட்ட ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியன் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ். இவர் தனது நண்பர் ரவி சாரோகியுடன் இணைந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் ஒரு மொழியில் பேசப்படும் தகவலை 25 மொழிகளில் மொழிபெயர்கவும், 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியுடன் மாற்றித்தரும் தன்மை கொண்டது. இவரை பற்றிய செய்தி அனைத்து ஆங்கில நாளிதல்களிலும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வெளியிடப்பட தமிழ் ஊடக உலகமோ வழக்கம் போல் கலைஞர் இராமதாஸ் வெற்று அறிக்கைகளையும், கபாலி பட அப்டேட்களையும் ஒரு பக்க அளவுக்கு வெளியிட்டு தங்கள் தரத்தை நிரூபித்துள்ளன. இன்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், உமேஷ் சச்தேவ் பற்றி  முகநூலில் பதிவிட்ட பிறகே தமிழ் நாளிதழ்கள் உமேஷ் சச்தேவ் பற்றிய செய்திகளை வெளியிடத்தொடங்கியுள்ளன. தமிழ் செய்தி தொலைகாட்சிகள் வெட்டி அரசியல் பேசும் சீமான், நாஞ்சில் சம்பத் போன்றவர்களின் பேட்டிகளை தவிர்த்து சுந்தர் பிச்சை, உமேஷ் சச்தே

2016 சென்னை புத்தக கண்காட்சி

Image
சென்னை தீவு திடலில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 39 வது புத்தக கண்காட்சிக்கு சென்று வந்த அனுபவத்தை பகிர்கிறேன் ! மெரினா வழியாக ப்ராட்வே திசையில் செல்லும் எல்லா பேருந்துகளும் தீவு திடலில் நின்று செல்கின்றன ! சுமாரான கூட்டம் ! சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ் ! 60 வருடங்களை கடந்தும் இன்னும் பொன்னியின் செல்வன் தான் பல புத்தக கடைகளின் முகப்பில் முதல் புத்தகமாக நம்மை வரவேற்கிறது ! விகடன், கிழக்கு பதிப்பாக புத்தகங்களை பல கடைகளில் பார்க்கமுடிந்தது. ஆங்கில புத்தக கடைகளில் சிவா முத்தொகுதி (Shiva Trilogy) புத்தகத்தை பரவலாக பார்க்கமுடிந்தது ! பொன்னியின் செல்வன், முகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் , கோபிநாத், அப்துல் கலாம், ஜி. ராமகிருஷ்ணன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு , சுஜாதா புத்தகங்கள், யவன ராணி, சென்னையின் கதை  இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்கள் தோரயமாக 90 சதவீத கடைகளில் நீங்கள் பார்த்து சலித்து போக வாய்ப்புண்டு ! பல கடைகள் வெளியே இருந்து பார்த்தாலே இந்த புத்தகங்கள் தான் பரவலாக பார்வைக்கு அடுக்கி