Posts

Showing posts from 2015

தமிழகம் மிதக்கிறது !

Image
தமிழகம் மிதக்கிறது ! அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசைக்கு நீர் நிலைகளும் வடிகால்களும் இரையாகி, வெள்ள நீர் போக்கு தெரியாமல் நம் வீட்டுக்குள் வந்து நிற்கிறது. நவம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளக்காடு ஆனால் மார்ச்சில் குடிக்க தண்ணீர் இல்லை என குடங்களுடன் வீதியில் இறங்கவேண்டியுள்ளது. நமது ஆட்சியாளர்களும் திறமையற்றவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம் டாஸ்மாக் போராட்டம் தீவிரமாக நடத்து வந்தபொழுது மூன்று நாள் பழைய செய்தியான இளங்கோவன் ஜெயலலிதா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு போராட்டம் அறிவித்து டாஸ்மாக் போராட்டத்தையே திசை திருப்பிய திறமையான ஆட்சியாளர்கள் கொண்ட மாநிலம் நமது. எதிர்கட்சிகளும் ஒன்றும் ஒழுக்க சீலர்கள் அல்ல அவர்கள் தலையில் 2G கத்தி இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது அவர்கள் மாவட்ட செயலாளர்களும் ஆட்டம் போட வாய்ப்பை எதிர்பார்த்து தயாராகத்தான் உள்ளார்கள். மழைவந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு கேமராமேனையும் கூட்டி வந்து நம்மை சந்திப்பார்கள் . ஆனால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் நமது கட்சிகளிடம் கிடையாது. கடந்த 45 ஆண்டு த

மழைதான் 2016 தேர்தலின் துருப்புசீட்டு

Image
ஜெயலலிதா ஆட்சியில் எப்பொழுதுமே அவரது கடைசி 6 மாதங்கள் அவருக்கு சவாலாக அமைந்துவிடும். இந்த முறை எதிர் கட்சிகள் சிதறிக்கிடக்க, தாங்கள் செய்த நல திட்டங்கள் மற்றும் இலவசங்கள் எப்படியும் கைகொடுக்கும் என்ற துணிச்சலில் 234ம் நமதே என கோஷமிடுகிறது அதிமுக. ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான சவால் இந்த முறை எதிர் கட்சிகள் அல்ல வடகிழக்கு பருவமழை தான் ! நான்கரை வருடம் எதிர்கட்சிகளை வளரவிடாமல் அரசியல் செய்து அதில் வெற்றியும் பெற்ற ஜெயலலிதா வருண பகவானை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே அவரது 2016 வெற்றியை தீர்மானிக்கப்போகிறது. ! குறிப்பாக திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையை 2011 ல்  அதிமுக வசமாக்கினார் ஜெயலலிதா. ஆனால் இன்று மூழ்கி கிடக்கும் சென்னையை கரைசேர்க்காவிட்டால்  2016ல் அதிமுக மூழ்குவதை அவரால் வேடிக்கை மட்டும் தான் பார்க்கமுடியும்.  

திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் 2

Image
திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின் அடுத்த பாகமே திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு என்ற இந்த கட்டுரை. 18 ஆம் நூற்றாண்டு  நாம் 10 ஆம் வகுப்பில் மனப்பாடம் செய்து பாஸான கர்நாடக போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட மோதிக்கொண்டனர். பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மெட்ராஸ், கடலூர் மற்றும் திருச்சி என மூன்று முக்கிய நகரங்கள் இருந்தன. அவற்றை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரெஞ்சு படை திரட்டியது.  பிரெஞ்சு படைக்கு  தலைமை ஏற்ற தளபதி லாலே பிரிட்டிஷ் வசம் இருந்த கடலூர் கோட்டையை அசால்ட்டாக கைப்பற்றினார். லாலேவிற்கு அடுத்து இரண்டு வாய்ப்புகள் இருந்தன ஒன்று  வடக்கு திசையில் உள்ள மெட்ராஸ் நகரை நோக்கி படையெடுப்பது மற்றொன்று தெற்கு பக்கம் உள்ள திருச்சிநோபோலி (இன்றைய திருச்சி நகரம்) நோக்கி படையெடுப்பது.    பூவா தலையா போட்டு பார்த்து முடிவு எடுத்தாரா என்று நமக்கு தெரியாது லாலே தேர்ந்தெடுத்து திருச

இந்தியா ஒளிர்கிறது ?

Image
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு உணவகத்தில் இருந்து வீட்டுக்கு அரசாங்கம் போட்டு தந்த பளபளப்பான நான்கு வழி சாலையின் ஓரமாய் நடத்து வந்துகொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருத்த பெரியவர் (வயது உறுதியாக 70க்கு மேல் இருக்கும்) மயங்கி சரிவதை கண்ட  எனக்கும் நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஓடிசென்று அவரை தூக்கி ஓரமாக நிழலில் உட்காரவைத்தோம். எங்களுடன் உதவிக்கு வந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க  அவரையும் அறியாமல் பசிக்குது என்றார். 10 அடி தூரத்தில் ஹோட்டல் ஆனால் அவரால் நடக்க முடியவில்லை. ஓடி சென்று 4 இட்லி வாங்கிவந்தோம். அவருக்கு இருக்கும் பசியில் பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து வரும் மோசமான வாடையை அவர் பொருட்படுத்தவில்லை. உங்க வீட்ல உள்ளவங்க போன் நம்பர் இருந்த சொல்லுங்க ஐயா நாங்க அவங்கள வரசொல்றோன்னு சொன்ன பொழுது போன் நம்பர் கொடுத்தா செத்து போன உன் பொண்டாட்டி கிட்ட பேசப்போறியா என்று பெத்த மகன்கள் கேட்டதாக சொன்னார் பெரியவர். பாவம் அவர் மகன், மனிதனை என்றும் இளமையாய் வைத்திருக்கும் சோமரசம் போன்ற மருந்துகள் இன்னும் கண்டு பிடிக்கப் படவ

கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது ?

Image
ஒரு விஷத்தை பற்றி  கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது என்று ஆராயவேண்டும் என்று ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு. உதாரணமாக மூன்று வித்தியாசமான நிகழ்வுகளை நான் அலச விரும்புகிறேன் : உதாரணம் #1: புலி படத்தை எடுத்துக்கொள்ளலாம். புலி படம் ப்ளாப் என்பது படம் பார்க்காத எனக்கும் இப்பொழுது மனதில் பதிந்து விட்டது. காரணம் தெரியவில்லை. எல்லாரும் சொல்றாங்க எனக்கும் அப்படியே ! உதாரணம் #2: சரி இன்னொரு சீரியஸான நிகழ்வை அலசுவோம். விஜயகாந்த் வெறும் நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த வரை அவரை தலையில் வைத்து கொண்டாடியது தி.மு.க வின் குடும்ப சேனலான  சன் டிவி. நடிகர் சங்க கடன்களை அடைக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் ஐடியாவை புகழ்ந்து விஜயகாந்தை உச்சத்துக்கு எடுத்து போனதில்  சன் டிவி பங்கு கனிசமானது. சரி அதே விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் . அசுர வேகமாக வளர்ந்தார். எதிர்கால முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெரும் அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றார். ஆனால் கலைஞர், ஜெயலலிதா இருவர் மட்டுமே எப்பொழுதும் தமிழக முதல்வர் வேட்பாளர்கள் என்பதை நிலை நாட்ட விஜயகாந்த் டம்மி

கர்நாடகா தண்ணி தர்லேன்னு திட்டற தமிழர்களே இத முதல்ல படிங்க

Image
இது ஆந்திர மாநிலத்தின் கதை  கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டம்  கால்வாய் நீளம் - 174 KM திட்ட செலவு - 1300 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - மே மாதம் 2014 முடிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 2015 இது தமிழகத்தின் கதை  காவிரி வைகை இணைப்பு திட்டம்  கால்வாய் நீளம் - 225 KM திட்ட செலவு - 2800 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - 2008 முடிக்கப்பட்ட ஆண்டு - ??????? (முடிச்சா தான) திட்டம் முடிக்கப்படாததிற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் நிதி இல்லை! ஆனால் தமிழக அரசு 2012 -13 ஆம் ஆண்டு செலவிட்ட தொகைகள் இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி இலவச வேட்டி சேலை 300 கோடி சரி நம்ம மக்களும் அடுத்த தேர்தலுக்கு பிரிஜ், வாஷிங் மெசின் தருவாங்களான்னு வாய பொளந்து காத்துட்டு இருக்க கூட்டம் தான ! நதியா எனச்சா ? என்ன விவசாயம் செத்தா என்ன ? சிவகார்த்திகேயன அடிச்சுபுட்டாங்கலாம்ல ?? அது என்ன மேட்டர்ன்னு அலசி ஆராய்வோம்.  ஆதாரங்கள் :  http://www.dinamalar.com/news_detail.asp?id=1347852 http://www.thehindu.com/news/national/tamil-nadu/the-canal-connectin

வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)

Image
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும். சபாஸ் சரியான ஜோடி எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.  1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள். ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது.  எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு.  தமிழகத்தில் கருணாநிதியின் நெருக்குதலால் எம்.ஜி.ஆர் ஆட்சியு

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Image
நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ?  பாஸ் என்கிற பாஸ்கரன் திரைபடத்தில் சந்தானம் பேசிய நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? வசனம் மூலம் புகழ் பெற்றது அப்பாடக்கர் என்கிற வார்த்தை.  நீ என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா ? உண்மைலேயே அப்பாடக்கர் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அப்பாடக்கர் வார்த்தை உருவான சுவாரசிய கதை இதோ.  அமிர்தலல் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) என்பவர் மிக பெரிய சமூக சீர்திருத்தவாதி. குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.  சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக  தக்கர் பாபா என்று அழைத்தனர். (குஜராத்தியில்  பாபா என்றால் அப்பா என்று பொருள்). தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். நாளடைவில் மெட்ராஸ் மக்கள் யாரையும் பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட   பெரிய அப்பா தக்கரா ? என்று கேட்க தொடங்கினர். பின்னாளில் அப்பா தக்கரா என்ற வார்த்தை மருவி அப்பாட

முதுகில் குத்தும் நண்பன் !

Image
இந்தியாவும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டுக்கு பிறகு நெருங்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகே பாகிஸ்தானுக்கு ஜாலரா அடிப்பதை குறைத்து கொண்டது அமெரிக்கா. இன்று ஓபாமாவும் மோடியும் செல்பி நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அமெரிக்கா என்றுமே வியாபார நோக்கத்தை மட்டுமே முன் நிறுத்தும் நண்பன் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2022 ஆம் ஆண்டுக்குள் சூரிய சக்தியை கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவை 20,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த முடிவெடுத்துள்ளது. முடிவு எடுக்கப்பட்டது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில். அமெரிக்கா இதற்கு உச்சி குளிர வாழ்த்து சொல்லியது. (காரணம் இல்லாமலா ?)ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றதும் சூரிய கொள்கையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே கொள்கை மாற்றமாகும். (Make in India). நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய செல்லை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு மானிய சலுகை எல்லாம் கிடைக்கும். இந்தியாவிலேயே சோலார் பே

இந்தியன் டிக்ஸனரி - டிராபிக் சிக்னல்

Image
இந்தியர்கள் தாங்களாக ஒரு  டிக்ஸனரி உருவாக்கினாள் அது எப்படி இருக்கும் என்ற கற்பனையே "இந்தியன் டிக்ஸனரி"  என்ற தொடர்.  இந்த தொடரின் முதல் வார்த்தை டிராபிக் சிக்னல்: டிராபிக் சிக்னல்  (Traffic Signal)  சிவப்பு விளக்கு - டிராபிக் போலீஸ் நிற்கிறாரா என்று பார்த்து விட்டு இல்லையெனில் தாரளமாக கடந்து செல்லலாம் .   மஞ்சள் விளக்கு - உங்கள் வாகனத்தை உச்ச வேகத்தில் செலுத்தி சிக்னலை கடக்கவும் .  பச்சை விளக்கு - ஹாரனில் இருந்து கை எடுக்காதே ! ப்ரேக்கில் கால் வைக்காதே !

2015 திரும்பி பார்க்கிறோம் !

2015 ல் இதுவரை நடந்த நிகழ்வுகள் அதற்கு இந்திய மக்கள் கொடுத்த ரியாக்சன்கள் (Reactions) ஆகியவற்றின் தொகுப்பு 2015 திரும்பி பார்க்கிறோம் தோனி ஓய்வு   வருந்தினோம், மறந்தோம் ஜனவரி 26 ஒபாமா வருகை வரவேற்றோம், மறந்தோம் அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை பெருமைபட்டோம் மறந்தோம் டெல்லியில் அரவிந்த் கெஜர்வால் வெற்றி ஆச்சர்யப்பட்டோம் , மறந்தோம் உலகமே திணறிய பொழுது , ஏமன் மண்ணில் இருந்து நமது சகோதரர்கள் வெற்றிகரமாக மீட்பு கர்வம் கொண்டோம் , மறந்தோம் உலக கோப்பை தோல்வி கோலி , அனுஷ்காவை திட்டி தீர்த்தோம் மறந்தோம் 20 தமிழகர்கள் ஆந்திரா வனப்பகுதியில் சுட்டுக்கொலை செய்தியை படிக்க மறந்தோம் IPL பார்த்தோம் நேபாள் பூகம்பம் கண்ணீர் விட்டோம் மறந்தோம் ஜெயலலிதா விடுதலை குமாரசாமிக்கு கும்பிடு போட்டோம் மறந்தோம் மியான்மார் எல்லையில் இந்திய இராணுவம் அதிரடி தாக்குதல் மீசையை முருக்கின

ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட்

Image
தனது கனவுகளை நனவாக்க ஒரு குழந்தை  ! தனது கஷ்டத்தை தீர்க்க ஒரு குழந்தை என்று குழந்தைகள் பார்க்கப்பட்டது அந்த காலம். தனது பணத்தை வெளியுலகிற்கு காட்டவும் தனது தகுதியை வெளியுலகிற்கு காட்டவும்  இன்று குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் பொறியியலில் ஆர்வமே இல்லையென்றாலும் தனது ஸ்டேடஸ்க்காக(status) பொறியியல் படிக்கவைத்து பெரிய கல்லூரி என பல கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து பொறியியலுக்கு HYPE உருவாக்குவதே இந்த பெற்றோர் தான். என்மகன் சென்னையில் இந்த கல்லூரியில் படிக்குறான் நான் இந்தனை இலட்சம் கொடுத்து எனது மகனை கல்லூரியில் சேர்த்தேன் என்று கல்யாண வீடுகளில் பெருமை பேசும் பெற்றோர் பலர். இவர்களுக்கு சரியான ஒப்பீடு ரியல் எஸ்டேட் முதலாளிகள் தான் ! விலை போகாத நிலத்தை விலையேற்றி இன்று யாருமே நிலம் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கிய ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல் வேலைவாய்ப்பே இல்லையென்றாலும் பொறியியலுக்கு டிமாண்ட் உருவாக்குவது இவர்கள்தான். வரும் காலங்களில் ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட் விற்கப்பட்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.

அப்துல் கலாமுக்கு என்ன வேலையோ ?

Image
தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மறைவு ! அப்துல் கலாம் சொன்ன வழியில் நடந்து நாட்டைத்தான் உருப்புட செய்யப்போவதில்லை அட்லீஸ்ட் Whatsapp குரூப்களுக்கு அவரது படத்தையும் பெயரையும்வைப்போம் என நாங்கள் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். இனி வருடாவருடம் ஜூலை கடைசியில் Facebook, Whatsapp குரூப்களில் தவறாமல் கலாம் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்  அவ்வளவுதான் தமிழக இளைஞர்கள் சக்தி. புலி படமோ தல 56 வது படமோ வெளிவந்தால் அப்துல் கலாமுக்கு Facebook,Whatapp ல் என்ன வேலையோ ? #RIPAbdulKalamQuotes #RIPAbdulKalamDreams - விக்கி 

இந்திய செய்தி சேனல் பார்க்க போறிங்களா ? எச்சரிக்கை !

Image
யாகூப் மேமன் குற்றவாளி என பலமுறை தனது தீர்ப்பில் சுட்டிகாட்டிய உச்ச நீதிமன்றம் அவருக்கு எந்த கருணையும் காட்டாமல் தீர்ப்பை உறுதி செய்த பின்னரே யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது ! இதை பற்றி செய்தி வெளியிட்ட தமிழ் ஹிந்து நாளிதழின் இணைய தளம், யாகூப் மேமன் தூக்கு நிறைவற்றப்பட்டது என்ற செய்திக்கு கீழேயே யாகூப் மேமன் நல்லவர் என்பது போன்றதொரு கட்டுரையையும் பிரசுரித்தது.. எனில் நீங்கள் நாட்டுமக்களுக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ? யாகூப் மேமன் என்ற ஒரு நல்லவன் உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பால் தூக்கில் இடப்பட்டார் என்றா ??  மீடியாவின் TRP பசி TRP வெறியாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் கையாளப்பட்ட ஹிந்து முஸ்லிம் பிரிவினை அரசியலை விட மோசமான பிரிவினை அரசியலை இப்பொழுது தங்கள் பிழைப்புக்காக மீடியாக்கள் கையாள்கிறார்கள் . இந்திய மக்கள் மதங்களை தாண்டி என்றுமே நல்லவர்களை கொண்டாடவே செய்கிறார்கள். அதற்கு திரு. அப்துல் கலாம் ஐயா ஒரு சிறந்த உதாரணம். மீடியா விளையாடும் ஹிந்து முஸ்லிம் விளையாட்டில் நாம் விழுந்து விடக்கூடாது. மீடியாவின் செய்திகளை எச்சரிக்கையுடனேயே அணு

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைப்பது எப்படி ?

Image
மத்திய அரசு  ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு முகாம்களும் தொகுதி வாரியாக ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டது.  நீங்கள் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து விட்டீர்களா ?  இணைக்காவிட்டால் கவலைப்படவேண்டாம்.  ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை  ஆன்லைனிலும் ஏன் மொபைலிலும் கூட  செய்யலாம்.  அதற்கான வழிமுறைகள் இதோ ! http://electoralsearch.in/  தளத்துக்கு செல்லவும்.  முதலில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை (EPIC Number ) கொண்டோ அல்லது தகவல்களை கொண்டோ உங்கள் வாக்காளர் விவரங்களை தேடவும் (Search). உங்கள் வாக்காளர் தகவல்கள் கீழே காட்டப்படும். அதில் FEED AADHAAR NO. என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் தகவல்களை தரவும். ஆதார் தகவல்களை உள்ளீடு செய்த பின் submit செய்யவும்.  உங்கள் ஆதார் கார்டு வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில் சந்தேகம் இருப்பின் அல்லது மேலே தரப்பட்ட தகவல் போதுமானதாக இல்லையெனில் கீழே கொடுக்கப்பட்டு

என்னதான் இருக்கு இந்தியாவில் ?

Image
கோகினூர் வைரம் நம்மலோடது தெரியுமா ? , வெள்ளக்காரங்க நம்கிட்ட இருந்து கப்பல் கப்பலா தங்கத்த அள்ளிட்டு போனாங்கலாம் என இந்தியாவின் பழைய செல்வ செழிப்பை பற்றி பலர் பெருமை பேசுவதை கேட்டிருப்போம். அப்படி என்னதான் இருந்தது இந்தியாவில் ? இந்திய அரசர்களிடம் இருந்த தங்கத்தையும், கோவில் நகைகளையும் பார்த்து மட்டுமா உலகம் இந்தியாவை செல்வா செழிப்பான நாடாக எடைபோட்டது ? வெறும் அரசர்கள் வைத்திருந்த செல்வத்தை கொள்ளையடிக்கவா  வெள்ளைக்காரன் 200 வருடங்கள் இங்கேயே தங்கினான் ? அப்படித்தான் இந்தியர்கள் நினைக்கிறார்கள் . ஆனால் உலகத்தின் இந்தியா மீதான பார்வை வேறு. நம் வரலாற்று புத்தகங்கள் ஒன்றை  விளக்க தவறிவிட்டன இந்தியாவின் செல்வம் அதன் அரசர்களிடமும் கோவில்களிலும் கொட்டிக்கிடந்த தங்கம் அல்ல இந்திய மக்களின் உழைக்கும் குணம். இப்படி யோசித்து பாருங்கள் கடந்த 10 வருடங்களில் மட்டும் எத்தனை ஊழல்கள் அரசாங்கத்துக்கு எத்தனை இலட்சம் கோடி இழப்புகள் எத்தனை கறுப்பு பண பதுக்கல்கள், இத்தனை இருந்தும் இந்திய பொருளாதாரம் தான்  இன்று  உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு பெட

சம்பளத்தோடு ஆபரேஷன் - தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்

Image
லட்ச லட்சமாக பணம்கொடுத்து வைத்தியம் பார்த்தவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். வைத்தியமும் பார்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்த தஞ்சாவூர் கதை பற்றி கேள்விபட்டதுண்டா? தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்  தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு நிபுணர் குழு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றது.  காரணம், சரஸ்வதி மஹால் ஆவணங்களில்   நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே  44 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ததற்கான குறிப்புக்கள் உள்ளன. அவற்றில் 6  குறிப்புக்கள்  மோடி ஸ்கிரிப்ட் (Modi  Scripts)   எனப்படும் மராத்தா மொழியிலும், 38 குறிப்புக்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. சிகிச்சை எடுத்து கொண்டவர்களின் வயது 5 முதல் 60. அந்த ஆவணங்களோடு 18 படங்களும் கிடைத்தன. ( சில படங்கள் உங்கள் பார்வைக்கு )   இந்த படங்கள் கண் நோயையும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் தெளிவாக விளக்கியுள்ளன. "கார்னியா (Cornea), லென்ஸ் (lens), கண்ஜெக்டிவ் (Conjective) " போன்ற பல நவீன கால வார்த்தைகளும் இந்த குறிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது . இந்தனை நேர்த்தியாக வைத்தியம் பார்த்த  மருத்துவர் ஒ

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

Image
திருவாரூரில் தங்க கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் தேருக்கு 10 சக்கரங்கள் இருந்தன என்பது உங்களுக்கு தெரியுமா ? திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் : திருவாரூர் தங்க கோவில் : திருப்பதி கோவில் தங்கத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு பெயர் போனது. திருப்பதியை போன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை கோபுரமும் தங்கத்தால் செய்யப்பட்டது.  ஆச்சர்யமாக உள்ளதா ? தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவாரூரில் பிறந்த பரவை என்ற நாட்டிய பெண்ணின் மேல் காதல். அவளுக்கு திருவாரூர் கோவில் என்றால் அத்தனை பிரியம். அவள் வேண்டுகோளுக்காக ராஜேந்திரன் திருவாரூர் கோவில் விமானம் மற்றும் கருவறை சுவர்களை தங்கத்தால் வேய்ந்தான். தங்கமா ? திருவாரூர் கோவில்லையா ? யார்கிட்ட விட்ரிங்க ரீல் என்று கூறுவோருக்கு ராஜேந்திரன் செய்த கல்வெட்டு வரிகள்  " உடையார் வீதிவிடங்கதேவர் குடத்திலும் வாய்  மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்தான் " தங்கம் காலபோக்கில் பலரால் அழிக்கப்பட்டுள்ளது. இன்று மிஞ்சம் இருப்பது கற்கோவில் மட்டுமே. இந்தியா