Posts

Showing posts from 2019

ரயில் கட்டணம் உயர்வு - சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு எவ்வளவு உயர்வு ?

Image
நீண்ட இடைவேளைக்கு பின் ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது இந்திய அரசு ! சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு எவ்வளவு உயர்வு என்பதை விளக்கும் அட்டவணை கீழே

ஆன்லைன் விற்பனை - கடைக்கார்களின் லாபத்தை சாப்பிட துவங்கிவிட்டது

எனக்கு என்னவோ ஆன்லைன் விற்பனை எல்லாம் கடைகளை பெரிதாக பாதிக்காது என்றே தோன்றுகிறது. நான் இரண்டு முறை ஆன்லைனில் வாங்கி முயற்சி செய்தேன் எனக்கு பிடிக்கவில்லை எனவே நான் வாங்குவதை நிறுத்திவிட்டேன் என்று எனது கட்டுரையை படித்த நண்பர் ஒருவர் வாட்ஸப் செய்திருந்தார்... உண்மை தான் ஆன்லைன் விற்பனை இன்னும் கடைகளை அப்புறப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிடவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைகளின் லாப சதவீதத்தை ஆன்லைன் நிறுவனங்கள் சாப்பிட துவங்கிவிட்டன என்றே நினைக்கிறேன். இன்றும் மக்களில் பெரும்பாலானோர் சத்யா அல்லது வசந்த் அன் கோ போன்ற கடைகளில் சென்று டீவி வாங்கினாலும், கடையின் சேல்ஸ் மேன் சொல்லும் விலையை உடனே பிளிப்கார்ட் அல்லது அமேசான் தளத்தில் தட்டிப்பார்த்து பேரம் பேச துவங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு ஆன்லைனில் வாங்க தயக்கம் இருந்தாலும், ஆன்லைனில் அதே பொருள் சில 100 ரூபாய்கள் குறைத்து காண்பிப்பதை கண்ணால் பார்த்தபின் கடையில் அதிக விலை கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது கடைக்காரர்களின் லாபத்தை சாப்பிட துவங்கி விட்டது. எதிர்பார்த்த லாபம் வராவிடில் கடைகள் மூடப்படுவதும் நடக்

ஆன்லைன் வர்த்தகமும், இந்திய பொருளாதாரமும்

(இந்த கட்டுரை புதியதலைமுறை தமிழ் வார இதழின் 24 அக்டோபர் பதிப்பில் வெளிவந்தது..) இந்திய பொருளாதாரம் தேக்கநிலையை என்றொரு செய்தி ! பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனையில் ஆறே நாட்களில் சுமார் ₹ 19,000 கோடிக்கு வர்த்தகம் என்றொரு செய்தி ! இவை இரண்டையும் எப்படி பொருத்தி பார்ப்பது என்பதே பலரின் கேள்வி இரண்டு முக்கிய புரிதல்களுடன் இந்த செய்தியை அணுகவேண்டும் என்று நான் நினைக்கிறன். முதலாவது பிளிப்கார்ட், அமேசான் இரண்டு நிறுவனங்களுமே தங்களின் விற்பனையின் அளவை எக்காலத்திலும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை. ₹ 19,000 கோடி வரை விற்பனை என்பது யாரோ மூன்றாம் நபர் வெளியிட்டுள்ள கணிப்பு அல்லது அலசல் என்பதை நாம் கவனிக்கவேண்டும். உண்மையான விற்பனை இதைவிட அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து (slowdown) காணப்படுகிறது. ஆனால் அது 2008 ஆம் ஆண்டு நாம் சந்தித்ததை போன்ற மந்தநிலையாக (recession) மாறிவிடவில்லை .   உலகவங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட இந்திய பொரு

தேஜஸ் போர்விமானத்தின் கப்பற்படைக்கான விமானம் பரிசோதித்து பார்க்கப்பட்ட வீடியோ

இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர்விமானத்தின் கப்பற்படைக்கான விமானம் (Naval variant) நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.. விமானம் தாங்கி போர்கப்பல்களில் ஓடுதளத்தின் நீளம் மிகக்குறைவு. எனவே போர் விமானம் மிக விரைவாக தனது வேகத்தை குறைத்து 0 Km/hr க்கு கொண்டு வரவேண்டியது அவசியம். இதை தான் நேற்று பரிசோதித்து பார்த்துள்ளனர் என்று நினைக்கிறன். வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்....

வங்கிகள் இணைப்பும், வங்கி போட்டி தேர்வுகளின் எதிர்காலமும்

வங்கிகள் இணைப்பு இதோ அதோ என்று கடந்த வருடம் முழுவதும் இழுத்தடிக்கப்பட்டு நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது இங்கே கலை, அறிவியல் பட்டம்பெற்றவர் துவங்கி பொறியியல் பட்டம் பெற்றவர் வரை பல லட்சம் பேர் வங்கியில் தனக்கு ஒரு வேலை கிடைக்கும் என நம்பி லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படித்து வருகிறார்கள் சென்னை தி.நகருக்கு பாண்டி பசார் போல வங்கி தேர்வு பயிற்சி மையங்களும் ஒரு அடையாளமாக மாறிவருக்கின்றன என்றால் மிகையல்ல ஆனால் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் இனி எத்தனை பேரை வங்கிகள் புதிதாக பணியில் அமர்ந்தும் என்பதில் எனக்கு எதிர்மறையான நம்பிக்கையே உள்ளது பொதுவாக வங்கி இணைப்புகள் போன்ற செயல்பாடுகள் நடைமுறைக்கு வர ஒன்று அல்லது  இரண்டு வருடங்கள் முழுதாக ஆகலாம். அவை நிறைவு பெறும் வரை பெரிதாக ஆட்கள் நியமனம் இருக்காது. அதே போல் வங்கிகளின் கிளைகளின் எண்ணிக்கையும் குறையும் உதரணமாக திருவாரூரில் கனரா வங்கியும் சிண்டிகேட் வங்கியும் மிக அருகருகே அமைந்துள்ளன. இந்த இரண்டு வங்கிகளும் இணையப்போவதாக அரசு நேற்று அறிவித்துள்ளது. எனில் எதற்கு அருகருகே இரண்டு கிளைகள் ?? சரி புதிதாக கிளைகளை வராதா என்று நீங்கள்

86,000 கோடி கூடுதல் உபரி தொகையை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

ரிசர்வ் வங்கி அரசுக்கு 1,76,000 கோடி பணம் தருவதாக செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்பதை பற்றிய பதிவு தான் இது.. பொதுவாக ஆண்டுகாண்டு ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி தொகையை அரசுக்கு வழங்கும். அதில் இந்த ஆண்டு வழங்கவேண்டிய தொகை சுமார் ₹ 90,000 கோடி  இந்திய ரிசர்வ் வங்கி 28% உபரி நிதியை வைத்துள்ளது. உலக அளவில் பிறநாட்டு ரிசர்வ் வங்கிகள் 14% மட்டுமே உபரி நிதி வைத்துள்ளன. எனவே உங்களிடம் உள்ள உபரி தொகையை எங்களுக்கு தாருங்கள் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது இந்த கோரிக்கைக்கு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு உர்ஜித் பட்டேல் அவர்கள் சம்மதிக்கவில்லை. எனவே அவர் ராஜினாமா செய்யும் வரை இந்த கோரிக்கை கிடப்பில் இருந்தது.. பின்னர் திரு சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற பின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு பீமல் ஜலன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பணி ரிசர்வ் வங்கியின் உபரி தொகை அளவை எவ்வளவு வைத்திருப்பது என்று பரிந்துரை செய்வது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்ற ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கூடுதல் உபரி தொகையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கூடுத

எனக்கு செல்வி ஜெயலலிதா அவர்களை பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்

எனக்கு செல்வி ஜெயலலிதா அவர்களை பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு .. அவர் ஒரு தேசியவாதி (Nationalist). தேச நலனில் அக்கறை கொண்டவர். அதே சமயம் மாநில உரிமைகளுக்காக போராடியவர். அனைத்துத்தரப்பு மக்களுக்காகவும் திட்டங்களை வகுத்தார். அவர் ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ எந்த தொந்தரவும் இருந்ததில்லை. அவர்களில் பலரும் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் ஓட்டுக்களை பெறவேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை அவர் அவமதித்ததில்லை. எல்லோரையும் ஒன்றாக நடத்தினார்.. ஆனால் தமிழ்நாட்டில் இன்னொரு கட்சி மைனாரிட்டி சமூக ஓட்டை பெறவேண்டும் என்றால் ஹிந்துக்களை வசைபாடவேண்டும், ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை அவமதிக்கவேண்டும் என்று திட்டமிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது !!!!

பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் பிரிட்டன்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு ஆதரவாக இறுதியில் வாக்களித்தாலும், கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையே பிரிட்டன் எடுத்ததாக செய்திகள் வருகின்றன பிரிட்டனில் பாகிஸ்தான் மக்கள் அதிகம் வாழ்வதும் (சவுதிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் மக்கள் அதிகம் வாழும் நாடு பிரிட்டன்), அரசு பதவிகளில் பாகிஸ்தான் மக்கள் பலர் இருப்பதும் (லண்டன் நகரின் மேயர் கூட பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்தான்) பிரிட்டன் பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட காரணமாக இருக்கலாம்.. பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் பழைய கலவர வீடியோ ஒன்றை தற்பொழுது காஷ்மீரில் கலவரம் நடப்பது போல் திரித்து வெளியிட்டதும் , ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தின விழா லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றபொழுது அங்கு கூடிய பாகிஸ்தானியர் முட்டைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி விழாவை பாதியில் நிறுத்த வைத்தபொழுதும் லண்டன் போலீசார் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாதும் இந்தியாவிற்கு பிரிட்டன் மேல் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

BS IV தரத்தில் இருந்து BS VI க்கு மாறுவதால் பெட்ரோல் டீசல் விலை உயருமா ??

BS VI பெட்ரோல் மற்றும் டீசலின் விலை BS IV தர பெட்ரோலை விட விலை அதிகம் ?? வாகனங்கள் உமிழும் புகையை கட்டுப்படுத்த அரசு BS எனப்படும் தரநிலையை பின்பற்றி வருகிறது.. 2000 ஆம் ஆண்டு BS I எனப்படும் Bharat Emission Stage 1 அமலுக்கு வந்தது.. BS II 2005 ஆம் ஆண்டும், BS III 2010 ஆம் ஆண்டும், BS IV 2017 ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.. இப்பொழுது நடைமுறையில் இருப்பது BS IV தான்.. அடுத்ததாக BS V க்கு பதிலாக நேரடியாக BS VI புகை வெளியீடு தரத்துக்கு மாற விருப்பதாக இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு அறிவித்தது.. இதன்படி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மற்றும் பைக்குகள் BS VI புகை உமிழ்வு தரத்துக்கு மாறவேண்டும்... BS IV தர வாகனங்களை விற்பனை செய்யமுடியாது.. எனவே கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் BS VI தரத்திலான வாகனங்கள் தயாரிக்க பல கோடி முதலீட்டில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. அதே போல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்றவையும் தங்கள் சுத்திகரிப்பு முறையில் சில மாற்றங்களை செய்த

RA&W உளவுத்துறையின் செயல்பாடுகளை முடக்கிய ஹமீத் அன்சாரி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் துணை குடியரசு தலைவருமான ஹமீத் அன்சாரி 1990 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் இந்திய தூதராக (Indian Ambassador for Iran) இருந்தார். அவர் தூதராக இருந்த காலகட்டத்தில் எப்படி இந்தியாவின் உளவு அமைப்பான RA&W வின் செயல்பாடுகளை முடக்கினார், ஈரானில் களப்பணியாற்றிவந்த RA&W வின் உளவாளிகளை ஈரானுக்கு காட்டிக்கொடுத்தார், RA&W வின் உளவாளிகள் ஈரான் அரசின் உளவுத்துறை கடத்தி சென்று கொடுமை செய்ய உதவியாக இருந்தார் மற்றும் கடத்தப்பட்ட அதிகாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என பெரிய தேச துரோக குற்றப்பட்டியலை பிரதமர் மோடியிடம் முன்னாள் RA&W அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.. 1990களுக்கு பிறகு தான் காஷ்மீர் பிரிவினைவாதிகள் வளர்ச்சி உச்சத்தை தொட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து காஷ்மீர் ஜிகாதிகளும் இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பிரிவினை வாதிகளுக்கு ஊக்கமும் நிதி வசதியும் செய்துகொடுத்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இதை 1990 களின் ஆரம்பத்திலேயே அறிந்த இந்திய அரசு, ஈரானில் இந்

பட்ஜெட் 2019 - என் புரிதல் (சரியாக செல்லாதவை)

வறுமையை ஒழிக்கவேண்டும், வளர்ச்சியை பெருக்கவேண்டும். அதற்கு திட்டங்கள் வேண்டும். திட்டங்களுக்கு செலவு செய்ய பணம் வேண்டும்.  பணத்திற்கு என்ன செய்யலாம் ??  இது வரை இருந்த எல்லா நிதியமைச்சரும் எதிர்கொண்ட பிரச்சனை இது தான்..  பணத்தை திரட்ட அரசு கடன் வாங்கலாம், பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தலாம், GST வரியை உயர்த்தலாம், பணக்காரனுக்கு அதிக வரி விதிக்கலாம், மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டலாம். இறக்குமதிக்கு வரியை உயர்த்தலாம். இவைதான் தான் காலம் காலமாக எல்லா நிதியமைச்சரும் நிதி திரட்ட செய்துவரும் நடவடிக்கைகள்.. இதே பாணியை அச்சு பிசுங்காமல் காப்பி அடித்துள்ளார் நிர்மலா சீதாராமன் அவர்கள். இதில் இருந்து நமக்கு தெரிவது அவரிடமும், அவரின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளிடமும் Out of Box ஐடியாக்கள் எதுவும் இல்லை என்பதே..... ஒரு உதாரணம் சொல்கிறேன் : "5% customs duty on imported books, to promote the domestic publishing and printing industry" - பட்ஜெட் 2019 இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி உயர்வு அறிவித்த நிர்மலா சீதாராமன், இந்த வரி உயர்வின் மூலம் இந்

ஐரோப்பாவில் அனல் காற்று

ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசுகிறது. பாரீஸ் நகரில் அதிகபட்சமாக வெப்பம் 45.9 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்று காரணமாக 4000 பள்ளிகளை மூடியுள்ளது பிரான்ஸ் அரசு ! ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு அடித்த அனல் காற்றில் பிரான்சிஸ் மட்டும் 15,000 பேர் பலியாகினர் . இந்த ஆண்டு பலி எண்ணிக்கையை குறைக்க பிரான்ஸ் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.. இதே போல் அனல் காற்று தான் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் வீசி வருகிறது... - தினமலர் செய்தி எல்லாமே இந்தியாவில் தான் தவறாக நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தோஷ கடலில் குதிப்பதாக சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்..

ஐநாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா !!

செய்தி: வரலாற்றில் பெரிய திருப்பமாக பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் முன்மொழிந்த ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது... விளக்கம்: ஹமாஸ் இயக்கத்தின் ஆதரவு  கொண்ட ஷஹீத் (Shahed) என்கிற அமைப்பு ஐநாவில் பார்வையாளராக செயல்படுவதற்கு எதிராக இஸ்ரேல் ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த தீர்மானம் 28-14 என்கிற ஆதரவு-எதிர்ப்பு ஓட்டுக்களுடன் நிறைவேறியது. இதில் கவனிக்கதக்க செய்தி இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்ததே இந்தியாவிற்கு உலக அரங்கில் உதவி தேவைப்பட்டால் முதலில் ஓடிவரும் நாடுகள் என்றால் பிரான்சும், இஸ்ரேலும் தான் கார்கில் போரில் முக்கிய பங்காற்றிய லேசர் குண்டுகள் துவங்கி,  விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம் என பலதுறைகளில் இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவி செய்கிறது. ஆனால் நேரு காலம் துவங்கி பல பத்தாண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராகவே இந்தியா ஐநாவில் செயல்பட்டு வந்திருக்கிறது. இதற்கு காரணம் மிக எளிதானது உலக அரங்கில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை முஸ்லிம் நாடுகள்/மக்களிடம் அதிகம் உள்ளது. அதற்கு பல வரலாற்று காரணங்கள் உண்டு எனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கையும் இந்தி

நிறுவனங்கள் Form 16 வழங்க கடைசி தேதி நீட்டிப்பு

செய்தி : நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு Form 16 வழங்க கடைசி தேதியை 10 ஜூலை வரை நீடித்து வருமான வரித்துறை உத்தரவு... விளக்கம் : பொதுவாக நிறுவனங்கள் Form 16 படிவத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி. அதன் பின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஊழியர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்தமுறை Form 16 படிவத்தின் வடிவத்தை வருமான வரித்துறை சமீபத்தில் மாற்றியமைத்தது. எனவே புதிய வடிவத்தில் Form 16 தயாரித்து வழங்க நிறுவனங்களுக்கு 25 நாட்கள் (ஜூன் 15ல் இருந்து ஜூலை 10க்கு) காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பால் நமக்கு என்ன பிரச்சனை ? பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31. ஜூன் 15 க்குள் Form 16 வழங்கப்பட்டுவிடும் என்பதால் நமக்கு வருமான வரி தாக்கல் செய்ய 45 நாள் அவகாசம் இருக்கும். இந்த முறை ஜூலை 10 வரை Form 16 வழங்க காலக்கேடு நீடிக்கப்பட்டுள்ளதால் நமக்கு வருமான வரி தாக்கல் செய்ய வெறும் 20 நாள் காலக்கெடுவே மிச்சமிருக்கும். எனவே ஆடிட்டர்கள்/மற்றும் நேரடியாக வரி செலுத்துபவர்கள் பாடு கஷ்டம். எனினும் வருமான வரித்துறை கணக்கு தாக்

நேரு குடும்ப விசுவாசிகளால் மண்ணை கவ்விய காங்கிரஸ்

கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே.. ஆனால் அந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் எவ்வளவு முக்கிய காரணமோ அதே அளவு காரணம் சச்சின் பைலட்.. சச்சின் பைலட் ஒரே வருடத்தில் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துவந்தார். இத்தனைக்கும் அவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்.. தேர்தல் முடிந்ததும் வெற்றிக்கு கடுமையாக உழைத்த சச்சின் பைலட்டுக்கு தான் முதல்வர் பதவி என அனைவரும் எதிர்பார்த்தனர்.. ஆனால் சோனியா குடும்ப விசுவாசி என்ற ஒரே காரணத்திற்காக அசோக் கெலாட்க்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.. அதே போல் மத்திய பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் தேரியதற்கு காரணம் சிந்தியா என்பர் தான். ஆனால் முதல்வர் பதவி சோனியா குடும்பத்தின் விசுவாசி என்பதற்காக கமல்நாத்துக்கு வழங்கப்பட்டது... நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி பற்றி பேசிய ராகுல் காந்தி அசோக் கெலாட், கமல்நாத், சிதம்பரம் போன்றவர்கள் கட்சிக்கு உழைக்காமல் தங்கள் மகன்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க மட்டுமே உழைத்தனர் என்று காட்டமாக குறிப்பிட்டார்.. ஆனால் திறமைசாலிகளுக்கு

பானி பூரி விற்பது கேவலம் அல்ல

வடக்கே இருந்து வந்து பானி பூரி விற்கிறான் என அடுத்தவர் செய்யும் தொழிலை மட்டம் தட்டும் சிலருக்கு மனநோய் என்று தான் சொல்ல தோன்றுகிறது... வடமாநிலத்தில் இருக்கும் மக்களில் சில லட்சம் பேர் வாய்ப்பு தேடி இங்கே வருகிறார்கள் நான் மறுக்கவில்லை. வாய்ப்பு இருக்கும் இடத்தை தேடி நகர்வது தான் மனித இயல்பு. நம்ம மக்கள் பலர் கூட UAE, மலேசியா, சவுதி, அமெரிக்கா, UK என பல நாடுகளில் வேலை செய்கிறார்கள். இங்கே அத்துனை வாய்ப்பு கொட்டி கிடந்தால் ஏன் நம் மக்கள் அங்கெல்லாம் வேலைக்கு சென்று கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்று கேட்டால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும் ? இங்கே முடி திருத்தும் தொழில், டீ கடை துவங்கி மொத்த வியாபாரம் வரை மெதுவாக பல வடநாட்டவர் முன்னேறி வருவதெல்லாம் இந்த பேஸ்புக் போராளிகளுக்கு தெரியாது.. சுய தொழிலில் ஈடுபடுபவதை ஊக்குவிக்காத கல்வி திட்டத்தில் படித்து வந்த நம்மிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.. வருடத்துக்கு உங்கள் பணத்துக்கு 7% வட்டி என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் இப்பொழுது 6.5% வட்டியில் வைத்திருக்கும் FD யை முறித்து அடுத்த வங்கிக்கு வருடத்துக்கு 0.5% கூடுதல் வட்டிக்காக தூக்கி கொண்ட

இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்கள் பொதுவானதாக இருக்கலாமே ?

நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் இயற்பியல் ஆசிரியர் புத்தகத்தின் இத்தனாம் பக்கத்தில் பிரிண்டிங் மிஸ்டேக் இருக்கு திருத்தி கொள்ளுங்கள் என்று ஸ்டைலாக சொல்வார்.. அன்று அவரைப்பற்றி மற்ற பள்ளி நண்பர்களிடம் பெருமையாக நாங்கள் பேசுவதுண்டு.. ஆனால் இன்று யோசித்து பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.. எத்தனை வருடம் மாற்றமே காணாத ஒரு பாட புத்தகம் அது.. Physics, Chemistry, Maths புத்தகங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே புத்தகமாக இருந்தால் நலமோ என நான் நினைக்கிறேன்..

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா !!!

ஜெய்ஷ் இ முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா !!! பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி !! பின்னணி : இந்திய பாராளமன்றத்தின் மீதான தாக்குதல், மும்பை தாக்குதல், பதன்காட் மற்றும் புல்வாமா போன்ற கொடிய தாக்குதல்களை இந்தியாவில் நிகழ்த்திய JeM தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மூன்று முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்த தீர்மானங்களை சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தை கொண்டு முறியடித்தது புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியாவிற்கு ஆதரவாக பிரான்சும், ஜெர்மனியும் மசூத் அசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை நான்காவது முறையாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்தது இந்த தீர்மானத்துக்கு சீனா தவிர மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன ஆனால் சீனா மட்டும் தனது நண்பன் பாகிஸ்தானுக்கு சாதகமாக இந்த தீர்மானத்துக்கு தற்காலிகமாக தடை கொண்டுவந்தது. சீனாவின் பல சாலை திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மசூத் அஸார் தீவிரமாக பணி

இனி டீசல் கார்கள் விற்பனை செய்வதில்லை - மாருதி துணிச்சல் முடிவு

இந்தியாவில் அதிக கார்களை விற்கும் மாருதி நிறுவனம் ஏப்ரல் 1, 2020 முதல் டீசல் கார்களை விற்பதில்லை என அறிவித்துள்ளது. BS-VI எனப்படும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்த ஏப்ரல் 1 முதல் அமலில் வரவுள்ளன. ஏற்கனவே மாருதி வசம் இருக்கும் டீசல் என்ஜின்களை BS-VI விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க அதிக செலவு பிடிக்கும் என மாருதி கருதுகிறது. மாருதியின் மொத்த கார் விற்பனையில் 23% டீசல் கார்கள் என்பதை கொண்டே மாருதி எடுத்திருக்கும் முடிவின் வீரியத்தை புரிந்துகொள்ளலாம். பெட்ரோல் மற்றும் டீசல் இடையே விலை வேறுபாடு பெரிய அளவில் இல்லாததால் டீசல் கார்களை விரும்புபவர்கள் பெட்ரோல் காருக்கு மாறுவார்கள் என மாருதி நம்பியிருக்கலாம். வரும் ஆண்டுகளில் CNG மற்றும் எலெட்ரிக் கார்கள் விற்பனையில் மாருதி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

தீவிரவாதத்தை ஒடுக்கும் பொறுப்பு அரசை விட குடும்ப அமைப்புக்கே அதிகம்

இலங்கையில் நடத்த தீவிரவாத தாக்குதல் பலவகையில் இந்தியாவிற்கு கவலையளிக்கும் செய்தியாகும். கோவையில் சமீபத்தில் ISIS அமைப்புடன் தொடர்புள்ளதாக கைதுசெய்யப்பட்ட 6 பேரிடம் NIA அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கயிருப்பதை பற்றி தகவல் கிடைக்க அதை வைத்தே இந்திய அரசு இலங்கை அரசுக்கு பல முறை எச்சரிக்கை செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. ஆனால் இலங்கை அரசு அந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தியுள்ளது... ISIS தீவிரவாத இயக்கம் மனிதகுலத்துக்கே எதிரானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதன் கொடூர கொலை கரங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு அருகில் வரை வந்துவிட்டது கவலையளிக்கிறது.. ஒரு நக்ஸல் தீவிரவாதி உருவாவதற்கு அவனது வறுமை, அரசின் ஒடுக்குமுறை, சுரண்டல், கல்லாமை போன்றவற்றை காரணமாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் இலங்கையில் தாக்குதல் நடத்திய எவருக்கும் அப்படியான மோசமான சமூக சூழலோ, கல்வி குறைபாடோ, பொருளாதார பிரச்சனைகளோ இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக தாக்குதல் நடத்திய ஒரு தீவிரவாதி தனது கல்லூரி படிப்பு முழுவதையும் மேலைநாடுகளில் கற்றுள்ளார் எனில் கல

Decathlon கடையில் ஏன் Puma, Adidas ஷூக்கள் கிடைப்பதில்லை ?

Image
#Decathlon கடைக்கு செல்லும் பலரும் அடிக்கடி கூறும் ஒரு குறை அங்கே Decathlon னின் சொந்த தயாரிப்பு/பிராண்ட் பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. வேறு பிராண்ட் பொருட்களை அவர்கள் விற்பதில்லை என்பது இதன் காரணத்தை விளக்க இந்த சின்ன பதிவு ! Decathlon ஒரு பிரெஞ்சு நிறுவனம். இந்தியாவில் கடை திறக்கும் எந்த ஒரு அந்நிய நிறுவனமும் Multi Brand Retail எனப்படும் பல பிராண்ட் பொருள்களை விற்கும் கடையை திறக்க அனுமதி இல்லை வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை விற்பனை கடை திறந்து இங்கே இருக்கும் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளின் வியாபாரத்தை பாதிக்காமல் இருக்க இப்படி ஒரு சட்டம் அமலில் உள்ளது. ஆனால் சட்டம் கொண்டுவரும் பொழுது வால்மார்ட் கடை திறக்க கூடாது என்று கொண்டுவர முடியாதே. எனவே இந்த சட்டம் எல்லா அந்நிய நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த சட்டப்படி அந்நிய நாட்டு நிறுவனம் இந்தியாவில் மொத்த வியாபாரம் செய்யலாம் (Whole sale) அல்லது தங்களின் பிராண்ட் பொருட்களை மட்டும் கடை வைத்து (Single Brand Retail) விற்பனை செய்யலாம் இதே விதி Van Heusen, Puma, Adidas, Jockey, Rolex, IKEA, Dominos, Samsung போன்ற நிறுவனங்கள

ஏன் வெற்றி பெறுகிறது பிஜேபி ?

ஹிந்துத்துவா கொள்கை மோசமானது, நாட்டை துண்டாடிவிடும், கலவரம் வரும், அதை வைத்துதான் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைகிறார் என்று பல இடதுசாரிகள், பெரியாரியம் பேசுபவர்கள் பதிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் மேற்குவங்கத்தின் கதையை எடுத்து கொள்வோமே பிஜேபி இந்த முறை மேற்கு வங்கத்தில் கனிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிகிறது. பிஜேபி வெற்றி பெற்றதும் நமது லிபரல் போராளிகள் வழக்கம்போல் பாருங்க மோடி ஹிந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டி மேற்குவங்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என பதிவிடுவார்கள் ஆனால் அவர்கள் மம்தாவின் கடந்த கால செயல்பாடு தான் மோடிக்கு மேற்குவங்கத்தில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என்பதை ஒப்புக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தான் அவர்களின் தோல்வியின் ஆரம்ப புள்ளி... பங்களாதேஷில் இருந்து சட்டத்துக்கு புறம்பான வகையில் இடம்பெயர்ந்து வரும் முஸ்லீம் மக்களுக்கு மம்தா பானர்ஜி அதீத சலுகை காட்டுதல், இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி ரேஷன் கார்டு, பிற அரசு சலுகை வழங்கப்படுவதல், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைத்தால் என மம்தா முஸ்லீம்கள் வாக்குவங்கியை கவர பல

வாராக்கடன் மீட்பில் பின்னடைவு

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாராக்கடன் பிரச்னையை கையாள பிப்ரவரி 12 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.. கடன் வாங்கியவர்கள், வங்கிகள் என பல நிலைகளில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சுற்றறிக்கையை நேற்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.. ரிசர்வ் வங்கிக்கு இதுபோன்றதொரு சுற்றறிக்கையை அனுப்ப சட்டரீதியாக அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது... பிப்ரவரி 12 சுற்றறிக்கையின் சில முக்கிய பகுதிகள் கிழே * 2,000 கோடிக்கு மேல் கடன் பாக்கியுள்ள நிறுவனம் கடனை தவணையை கட்ட குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நாள் தாமதமானாலும் அந்த நிறுவனத்தை திவால் சட்டத்தின் அடிப்படையில் NCLT எனப்படும் திவால் வழக்குகளை தீர்க்கும் நீதிமன்றதத்திக்கு எடுத்து செல்லவேண்டும் * அவ்வாறு எடுத்துச்செல்லப்படும் நிறுவனத்தை அடுத்த 180 நாட்களுக்குள்  கடனில் இருந்து மீட்க வழியிருக்கிறதா (Resolution plan) என ஆராய வேண்டும் * அப்படி வழி ஏதும் இல்லையெனில் அந்த நிறுவனத்தை திவால் என அறிவித்து நிறுவனத்தை ஏலம் விடுவதன் மூலமோ அல்லது பகுதியாக சொத்துக்களை விற்பதன் மூலமோ கடனை வங்கிகள் மீட்டுக்கொள்ளலாம் (500

Mindtree நிறுவனத்தை வாங்கும் முனைப்பில் எல்&டி நிறுவனம்

சமீபத்தில் எல்&டி (L&T) நிறுவனம் 9,000 கோடி மதிப்பிலான நிறுவன பங்குகளை பங்குசந்தையில் இருந்து திருப்பி வாங்கிக்கொள்ள (Share Buyback) மேற்கொண்ட முயற்சியை பங்குச்சந்தை நெறியாளர் அமைப்பான செபி (SEBI) சில காரணங்களுக்காக தடைசெய்தது செபியின் தடையால் துவண்டிருந்த எல்&டி நிறுவனத்தை Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள Mindtree தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் 20% பங்குகளை விற்க விரும்புவதாக கூறினார் நேற்று சித்தார்தாவின் 20% பங்குகளை எல்&டி நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால் எல்&டி நிறுவனம் இத்தோடு நிற்காமல் Mindtree நிறுவனத்தின் முழுவதும் கட்டுப்படுத்தும் அளவுக்கான (51% +) பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது Mindtree நிறுவனர்கள் நிறுவனம் தங்கள் கைகளை விட்டுப்போவதை விரும்பவில்லை. இந்த கையகப்படுத்துதலை முறியடிப்போம் என அவர்கள் பேட்டியளித்துள்ளனர் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்திவருபவர்களின் விருப்பமில்லாமல் மற்றொரு நிறுவனம் வலுக்கட்டாயமாக மேற்க்கொள்ளும் கையாகப்படுத்துதல் முயற்சியை Hostile Takeover என்று வர்ணிப்பர் இந்தியாவில் பல ஆண்டுக

உங்களின் Take Home சம்பளம் குறையப்போகிறது கேள்விப்பட்டீர்களா?

இனி PF (Provident Fund) பிடித்த தொகை அதிகமாகப்போகிறது கேள்விப்பட்டீர்களா ?? தொடர்ந்து படியுங்கள்.. பொதுவாக பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் அடிப்படை ஊதிய (basic pay) தொகையின் 12% சதவீதத்தை பணியாளர்களின் PF பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் அதே அளவு (12%) தொகையை நிறுவனமும் தன் பங்களிப்பாக பணியாளரின் PF கணக்கில் வரவு வைக்கும்.. (அதிகபட்சம் மாதம் ₹1,800) மார்ச் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் special allowance தொகையையும் Basic Pay யுடன் சேர்த்து கணக்கிட்டு அந்த தொகையில் 12 % PF பிடித்தம்செய்ய வேண்டும் என கூறியுள்ளது... உதாரணமாக ஒருவர் மாதம் ₹ 5,000 அடிப்படை ஊதியமும் (basic pay) மற்றும் ₹ 10,000 special allowance பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். (கவனிக்க: நிறுவனங்கள் செலவை குறைக்க ஊழியர் சம்பளத்தை Basic pay, special allowance என பலவாக பிரித்து தருகின்றன) பழைய PF கணக்கீட்டின் படி, அடிப்படை ஊதியம் ₹5,000 க்கு 12% அதாவது  ₹600 மட்டும் ஊழியர் சம்பளத்தில் PF பணமாக பிடித்தம் செய்யப்படும். அதேபோல் நிறுவனமும் தன் பங்களிப்பாக ₹600 தொகை

அபினந்தன் கதையில் அதிகம் பேசப்படாத பகுதி

அபினந்தனின் மொத்த எபிசோடில் அதிகம் பேசப்படாமல் (வேண்டுமென்றே?) தவிர்க்கப்படுவது அவர் சுட்டு வீழ்த்திய அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமான பகுதி தான்.. 1974 முதல் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்படும் F16 விமானம் தனது 45 வருட வரலாற்றில் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் . இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் இந்திய விமானப்படையும் அபினந்தனும். எல்லையில் ஒரு சண்டை அதில் ஒரு விமானம் இன்னொன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த கதை அத்தனை எளிதாக கடந்து சொல்லும் கதையல்ல.. விமானப்படையின் பலமென்பது விமானத்தின் பலம் மட்டும் அல்லவே.. அது விமானியின் பலத்தையும் சேர்த்தது என்று உலகிற்கு நிரூபித்த நொடி அது.. அபினந்தன் பறந்த MiG 21 விமானத்தின் செல்ல பெயர் "பறக்கும் சவப்பெட்டி" (Flying Coffin). 60 வருட பழைய சோவியத் டிசைனான MiG விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக நடந்த விபத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்ட இந்திய விமானிகள் உயிரை குடித்திருக்கிறது. MiG விமானத்துக்கு மாற்றாக இந்தியா திட்டம் தீட்டி இருக்கும் தேஜஸ் போர்விமானங்கள் இந்நேரம் பயன்பாட்டுக

சமூக ஊடகங்களில் தேவை கவனம்

Image
இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழின் 7 மார்ச் 2019 பதிப்பில் வெளிவந்தது.. என்னதான் 60+ வருடங்களாக ஜனநாயக நாடாக இருந்தாலும், ஓட்டு பெட்டியை தாண்டி சாதாரண மக்களுக்கு தங்கள் குரலை பதிவு செய்ய ஒருவாய்ப்பு சமீப ஆண்டுகளாகத்தான் கிடைத்துள்ளது. அதற்கு சமூக ஊடகங்களுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும். வெறும்  பொழுது போக்கு இடமாக  மட்டுமே  துவங்கப்பட்ட சமூ க ஊடகங்கள் இன்று ஆட்சி மாற்றத்தை கூட கொண்டுவரும் சக்திகளாக மாறிப்போயுள்ளன.  விஞ்ஞானம், சமையல், விவசாயம், முதலீட்டு ஆலோசனைகள், கேன்சருக்கான மருந்து (ஆமாங்க நம்புங்க), அரசியல், ஆபாசம் என எண்ணற்ற தலைப்புகளில் சமூக ஊடகங்களில் செய்திகள்  பரப்பப்படுகின்றன.  இப்படி குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட சமூக ஊடகங்களுடன் சில தீய செயல்களும் சேர்த்தே வளர்ந்துள்ளன.  மத, இன, மொழி சார்த்த உணர்ச்சிகளை தூண்டும் வன்முறையான பல பதிவுகள் கூட சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.  காரணம் சமூக ஊடகங்களுக்கு சென்சார் கிடையாது. மனம்போன போக்கில் யாரும் யாரைப்பற்றியும் என்னவேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் எழுதலாம் என்ற நிலைதான் அத