Posts

Showing posts from October, 2018

இந்தியா ஜப்பான் - பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal)

சமீபத்தில் மோடி ஜப்பான் சென்றபொழுது இந்தியா ஜப்பான் இடையே $ 75 பில்லியன் (சுமார் ரூ.5¼ லட்சம் கோடி)  மதிப்புக்கு பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal) கையெழுத்தாகியுள்ளது. அதேபோல் ஜப்பான் இந்தியா இடையேயான வர்த்தகமும் அமெரிக்க டாலர் இல்லாமலே நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal) என்றால் என்ன ? 1990 ல் ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு 3 வார இறக்குமதியை மட்டுமே சமாளிக்கும் அளவுக்கு கீழே செல்ல இந்தியா IMF மற்றும் உலகவங்கியிடம் டாலருக்கு கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் இனிவரும் காலத்தில் இந்தியாவின் டாலர் கையிருப்பில் பெரிய சரிவு ஏற்பட்டால் நாம் ஜப்பான் ரிசர்வ் வங்கியிடம் சுமார் ரூ.5¼ லட்சம் கோடி வரை அமெரிக்க டாலர்களாகவோ அல்லது ஜப்பான் நாணயமாகவோ பெற்றுக்கொள்ளலாம் ! அதற்கு மாற்றாக இந்திய ரூபாயை ஜப்பானிடம் பரிமாறிக்கொள்ளலாம் ! இந்திய ரூபாய் பெரிய அளவில் சரிவை சந்தித்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் பெரிய வரப்பிரசாதமாகும் !

தோசை ஜாதியும், தோசை பொருளாதாரமும்

Image
சமீபத்தில் தோசையில் ஜாதி பார்ப்பது எப்படி என்று பேசினார் திராவிடர் கழக நிர்வாகி ஒருவர். அதே போல் தோசையை வைத்து பொருளாதாரத்தை எப்படி புரிந்துகொள்வது என்று பாடம் எடுக்கிறார் முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன். இரண்டு பேர் சொன்னதும் இண்டர்நெட்டில் தட்டினால் கிடைக்கும் ! எதை பார்ப்பது, எதை பின்பற்றுவது, எதை மனதில் ஏற்றுக்கொள்வது என்பது நம் கையில் !

தொழிலதிபர்னா திருடன் - இந்த அடிப்படையே தப்பு

Image
என்ன திமிர் பார்த்தீங்களா இந்த பெரிய மனுசனுக்கு ? இந்தியாவில் தொழில் உற்பத்தி செய்யவேண்டுமாம் !!! லூசு பய எப்ப பாத்தாலும் இந்தியா உருப்புடனும், தொழில் வளர்க்கணும், முதலாளிகளுக்கு தொழில் செய்ய உதவிசெய்யனுன்னு உளறிக்கிட்டு இருக்கான் ! இந்தியாவுக்கு எதுக்கு தொழிற்சாலை ??? தொழில் அதிபர் என்றாலே திருடனாச்சே !!!! தொழிலதிபர்னா திருடன்னு வளரும் சமுதாயத்தின் மனதில் வெற்றிகரமாக விதத்தாயிற்று ! என்ஜினீயர் படிக்குறவனே தொழிலுக்கு எதிராத்தான் facebook போஸ்ட் போடறான் ! அத என்ஜினீயரிங் பாடம் எடுக்குற வாத்தியார் ஷேர் பண்றார் !!!! இந்த அடிப்படையே தப்பு ! ஒன்று உண்மை சின்ன கடையோ பெரிய அம்பானியோ நாம் தொழில்முனைவோர்களை மதிக்காத வரை இங்கே எதுவும் மாறப்போவது இல்லை ! நம்ம எல்லா பிரச்சனைக்கும் அமெரிக்கா தான் காரணம், அம்பானி பெட்ரோல் விலையை ஏத்துறார், தொழிலதிபர்னா திருடன், CIA நெனச்ச இந்தியா இருக்காது இதெல்லாம் fantasy கதைகள். கேட்க சுவாரசியமா இருக்கும். கொஞ்சம் திறமையா வார்த்தை ஜாலத்தோட பேசுவரன் சொன்னா உண்மை மாதிரி கூட இருக்கும். ஆனால் எதுவும் உண்மை இல்லை ! தொழில்முனைவோர் தான் நமக்கு தேவை !

பெட்ரோல் விலை குறையுமான்னு தெரியனுமா? இதை படிங்க !

சவூதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், ஜமால் கசோக்கி (Jamal Khashoggi) சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் சவூதி அரசுக்கும், சவூதியின் ஏமன் படையெடுப்புக்கும் எதிராக கடும் விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இதன் காரணமாக சவூதியில் அவருக்கு மிரட்டல்கள் வரவே 2017ல் அமெரிக்காவில் குடியேறி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இணைந்தார். அங்கும் சவூதி அரசை விமர்சித்து தொடர்ந்து எழுதிவந்தார் ! துருக்கியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த ஜமால் தனது முந்தைய திருமண விவாகரத்து சான்றிதழ் தொடர்பாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரிலுள்ள உள்ள சவூதி தூதரகத்துக்குச் செப்டம்பர் 28ஆம் தேதி சென்றார். தூதரகத்துக்குள் சென்ற ஜமால் திரும்பி வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சவூதிக்கு அழுத்தம் கொடுக்க ஜமால் தூரகத்துக்குள்ளேயே கொடூரமாக கொல்லப்பட்டதை சவூதி ஒத்துக்கொண்டது ! இதனால் நெருங்கிய கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் சவூதி இடையேயான உறவில் பெரிய விரிசல் விழத்துவங்கியுள்ளது. தன்னிடம் அடைக்கலம் தேடிவந்தவனை தூதரகத்துக்குள் கொடூரமாக கொல்லப்பட்டத்தை அமெரிக்காவால் பொறுத்துக்கொள

ஏன் கோவிலில் சிலைகளை போட்டோ எடுக்க கூடாது ? நீங்கள் கொள்ளை அடிக்கவா ?

Image
கோவிலில் சிலைகளை போட்டோ எடுக்க கூடாது என்று அறநிலைய துறை அடம்பிடிப்பதே கோவில் சிலைகள் கொள்ளை போக துணை புரியத்தான் என்று நண்பர் சொன்னார். மீட்கப்பட்ட பல சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அறநிலைய துறைக்கே தெரியவில்லை. காரணம் அவை எங்கும் பதிவு செய்யப்படவில்லை. தங்க சிலையை போட்டோ எடுக்க கூடாது என்று சொல்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்கலாம். கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.  Source : DTNext Newspaper Article இவை எதுவும் கர்பகிரஹ சிலைகள் இல்லை, கோவிலில் ஆங்காங்கே தென்படும் சாதாரண சிலைகள் தான் ஆனால் இவைகள் சிலை மார்க்கெட்டில் சில கோடிக்கு ஏலம் போகிறது. இதை கூட போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். காரணம் அப்பொழுது தான் அவை தொலைந்து போனாலும் கண்டுபிடிக்க முடியாது. நாம் தினம்தினம் சென்று விழுந்து வணங்கும் சிலை ஒரிஜினல் என்பதற்கு எந்த கேரண்டியும் இல்லை மக்களே ! பக்தர்கள் விழித்துக்கொண்டு கோவிலை இந்து சமய அறநிலைய துறையிடம் இருந்து காப்பற்றினால் தான் உண்டு... ! விழித்துக்கொள்ளுவோம் !!!! ஒன்று அரசாங்கம் சிலைகளை பதிவு செய்யட்டும் அல்லது மக்களை போட்டோ எடுக்க அனுமதிக்கட்டும

அறிவியல் ரீவைண்ட் - சுத்தியல் vs இறகு எது தரையை முதலில் தொடும் ?

Image
ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும், இறகையும் கீழேபோட்டால் சுத்தியல் தான் முதலில் தரையை தொடும். சுத்தியல் கனமானது என்பதால் தான் சீக்கிரம் விழுகிறது என்பதே பலரின் உடனடி புரிதல். ஆனால் உண்மை காரணம் அதுவல்ல ! கீழே விழும் பொழுது ஒரு பொருளுக்கு காற்று ஏற்படுத்தும் தடையே அது தரையை தொடும் நேரத்தை தீர்மானிக்கிறது ! இதை முதலில் உணர்ந்தவர் கலிலியோ கலீலி என்கிற மேதை ! கலிலியோ சொன்னது உண்மை என்று உணர்த்த நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய பொழுது ஒரு சோதனையை செய்து காட்டியது ! நிலவில் விண்வெளி வீரர் ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும், இறகையும் கீழே போடுவார். அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையை தொடும் ! பார்க்க நாசாவின்  வீடியோ

Online பூதம் வருகிறது சில்லறை வியாபாரிகளே !

பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஐந்து நாட்களில் சராசரியாக ஒரு நொடிக்கு 5 ஷூக்கள் விற்றதாக அறிவித்துள்ளது. அப்படியெனில் 5 நாட்களுக்கு 21.6 லட்சம்  ஷூக்கள் விற்கப்பட்டதாக பொருள். ஒரு கடையில் 10 ஷூ விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொண்டால் கூட இது 2.5 லட்சம் ஷூ கடைகளில் நடந்திருக்க வேண்டிய வியாபாரம்... சில்லறை வியாபாரிகள் தங்கள் வியாபார உத்திகளை புதுப்பித்துகொள்ள வேண்டிய நேரமிது.

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை பற்றி கேள்விபட்டீர்களா ? பெட்ரோலில் 10% வரை எத்தனால் கலக்க இந்தியாயாவில் அனுமதி உண்டு. அதே சமயம் இதுவரையில் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை மட்டும்தான் பெட்ரோலில் கலக்க இந்தியா அனுமதித்தது. ஆனால் இனி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், மழை-ஈரம்-பூஞ்சைகளால் சேதமடைந்த உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு, நகர்ப்புற திடக் கழிவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலைக் கூடப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது. வேளாண் கழிவுகளைக் கொள்முதல் செய்து அதிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதே சமயம் மூலப்பொருள் அதிகம் கிடைக்கும்பொழுது உயிரி எரிபொருளின் தயாரிப்பு விலையும் கணிசமாக குறையும் ! அதே போல் 12 உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவவும் இந்திய முடிவெடுத்துள்ளது ! பெட்ரோல் விலை அனைத்துத்தரப்பு மக்களையும் வதைக்கும் இந்த நேரத்தில், சமீபத்தில்அறிவித்த Bio Fuel Policy நமக்கு எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. Reference : https://tamil.thehindu.com

ஊர் பேசுது - மணல் வியாபாரம்

ஊர் பேசுது ! ஆற்றில் மணல் எடுத்தால் சுற்றுசூழல் பாதிக்கும் என்கிறது ஒரு தரப்பு ! ஆற்றுமணலை எடுத்து எடுத்து தான் நிலத்தடி நீர் கிழே செல்கிறது என்கிறார்கள் ! (கவனிக்க நாம் நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயமே செய்கிறோம்) மணல் எடுக்காவிட்டால் கட்டுமான துறை பாதிக்கும் என்கிறது இன்னொரு தரப்பு. சரி மணலை எடுக்கவேண்டாம் இறக்குமதி செய்யலாம் என்றால் இறக்குமதி செய்யப்படும் மணல் தரமானதாக இல்லை என்று ஏற்கனவே ஊருக்குள் பேச்சை கிளப்பிவிட்டாயிற்று. ஒருவரும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.. கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி ஒரு பெரிய பொருளாதார சக்கரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறோம். கட்டிட தொழிலாளி முதல் நாட்டின் பெரிய தொழில்களான சிமெண்ட், ஸ்டீல் அவ்வளவு ஏன் வீட்டுகடன் கொடுப்பதில் வங்கிகள் என கட்டுமான துறையின் மந்தமானது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது இன்னொரு தரப்பு ! திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுமான துறை மீளும், ரியல் எஸ்டேட் கிங் திமுக என 2021 க்காக ஏக்கமாக காத்திருக்குது இன்னொரு தரப்பு !