Posts

Showing posts from 2018

குழந்தைகளை கற்பழித்தால் மரண தண்டனை - மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம்

குழந்தைகளை கற்பழிப்பு அல்லது கூட்டு கற்பழிப்பு செய்பவர்களுக்கு மரண தண்டனை - POCSO (Protection of Children from Sexual Offences) சட்டத்தில் திருத்தும் கொண்டுவர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் பழைய POCSO சட்டத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு மட்டுமே தண்டனை இருந்தது. இனி ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் சரிசம அளவிலான தண்டனை

கரும்பு விவசாயிகளுக்கு பெட்ரோல் விலை குறைவதும் ஒரு பிரச்சனை

Image
பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வருவதால் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் தேவை வெகுவாக குறையும் என கணிக்கப்படுகிறது... கவனிக்க: எத்தனால் அதிகம் கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.. எனவே உலகின் பெரிய கரும்பு உற்பத்தியாளரானா பிரேசில் 2019ல் கரும்புக்கு பதிலாக சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே சர்க்கரை விலை அடுத்த ஆண்டு குறையும். நம்ம விவசாயிகளுக்கு இதையெல்லாம் எடுத்துரைத்து நாம் அவர்களை தயார்செய்வதில்லை.. அவர்கள் வழக்கம் போல் கரும்பை உற்பத்தி செய்து விட்டு விலை கிடைக்கவில்லை என்று ரோட்டுக்கு வருவார்கள்...

அரசியல் அறிவோம்

BJP யின் பின்புலம் அல்லது பக்கபலம் ஹிந்துத்துவா.. எனவே ஹிந்துத்துவா சக்திகள் எந்த நாசகாரியம் செய்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.. திராவிட கட்சிகளின் பின்புலம் ஆதிக்க சாதியினர் (OBC communities), எனவே ஆதிக்க சாதியினர் ஆணவ கொலை செய்தால் கூட திராவிட கட்சிகள் கண்டுகொள்வதில்லை.. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் பின்புலம் அல்லது பக்கபலம் மைனாரிட்டி மக்கள் (கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள்), எனவே காங்கிரஸ்கார்கள் பெருகி வரும் மதமாற்றம் போன்றவற்றை பெரிதாக கண்டுகொள்வதில்லை... BJP காரன் நீதிமன்றமே சொன்னாலும் சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்பான்.. காங்கிரஸ் காரன் நீதிமன்றமே சொன்னாலும் முத்தலாக் நீக்கப்படக்கூடாது என்பான்.. திராவிட கட்சிகள் ஆணவ கொலையால் கலவரமே வந்தாலும் ஆதிக்க சாதி மீது கைவைக்க மாட்டான்... DOT #BJP #congress #dmk

Talgo ரயில் வேண்டாம், எங்களிடம் உள்ளது Train18

Image
2016 ஆகஸ்ட் மாதம், ஸ்வீடனின் Talgo நிறுவனம் 180 km வேகத்தில் பயணிக்கும் ரயிலை சொந்த செலவில் இந்தியாவிற்கு கொண்டுவந்து டெல்லி முதல் மும்பை வரை 12 மணிநேரத்தில் (தற்போதைய ரயிலின் பயண நேரம் 16 மணிநேரம்) வெற்றிகரமாக ஓட்டிக்காட்டி எங்கள் ரயிலை வாங்கிக்கொள்ளுங்கள் என்று இந்திய அரசை கேட்டது.. உங்கள் ரயில் வேணாம், எங்களுக்கு தேவையான ரயிலை நாங்களே தயாரித்து கொள்கிறோம் என்று அடுத்த 18 மாதத்தில் மேக் in இந்தியா திட்டத்தில் 100 கோடியில் Train18 ரயில் தயாரிக்கப்பட்டது...இது ஐரோப்பாவில் இருந்து வாங்கவிருந்த ரயிலை விட 40% குறைவான செலவில் செய்யப்பட்டுள்ளது சென்னை ICF ல் தயாரிக்கப்பட்ட Train18 ரயில் 180 KM வேகத்தில் பாயும் இந்தியாவின் அதிவேக ரயில் ! "Make In India" - நம்மாலும் முடியும் !!!  

மக்கா ஓடிவாங்கலே !! விவசாயத்தை காப்பாத்தீட்டு வந்துருவோம்

சம்பளகாரனுக்கு வருஷா வருஷம் சம்பளம் ஏறனும், வியாபாரி எவரும் நஷ்டத்துல ஒரு சோப்பு டப்பா கூட விற்க மாட்டீங்க ஆனா விவசாயி மட்டும் கடைசி வரைக்கும் நஷ்டத்துல 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் வெங்காயம் விற்று உங்களுக்கு சோறு போடணும் ??? சுயநலம் என்றால் என்ன என்பதை நம்ம மக்க கிட்ட தான் கத்துக்கனும் டோய்... இதுல Good morning, Good Afternoon அனுப்புற மாதிரி டெய்லி நாலுவாட்டி விவசாயத்த காப்பாத்தனூன்னு பேஸ்புக் போஸ்ட், அதுக்கு நாலு பேர் கண்ணீர் smiley வேற.... விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றாமல் விவசாயத்தை உணர்ச்சிகர பிரச்னையாக வைத்திருப்பதும், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கடன் தள்ளுபடி செய்து அடுத்த வருடம் மீண்டும் அவனை கடன்காரன் ஆக்குவது என எல்லாமே விவசாயத்தை அழிக்கும் செயல் தான்....வந்துருவோம்..

அழிவின் விளிம்பில் BSNL

ஜியோ நிறுவனத்துக்கு உதவ மோடி அரசு BSNL க்கு 4G அலைக்கற்றை வழங்காமல் இழுத்தடிப்பது ஊரறிந்த உண்மை...இதை தான் Crony Capitalism என்று கூறுவார்கள்.. இதில் கவனிக்கதக்கது மற்றுமொரு செய்தி பிராட்பேண்ட் (broadband) சேவையில் 50 சதவீத சந்தையை வைத்திருப்பது BSNL நிறுவனம் தான். வரும் நாட்களில் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை துவங்கியதும் BSNL அழிவு தவிர்க்க முடியாதது ஆகிவிடும் ! குறிப்பு : நான் BSNL சேவை தரத்தை கடுமையாக விமர்சிப்பவன். ஊழியர்கள் அலட்சியம், லஞ்சம் தலைவிரித்தாடும் இடத்துக்கு சிறந்த உதாரணம் BSNL அலுவலகங்கள். ஒரு சில நேர்மையான ஊழியர்களை தவிர மற்ற எல்லாரும் எனக்கு என்ன என்றுதான் பணிசெய்கிறார்கள். இன்று அழிவு அவர்கள் நிறுவனத்தின் வாசல் வரை வந்துவிட்டது அறிந்ததும் ரோட்டுக்கு வந்து போராட முடிவு செய்திருக்கிறார்கள். இனியாவது வாடிக்கையாளரை மதித்து லஞ்சம் வாங்காமல் சேவை வழங்குவீர்களா ??

எனக்கு ஒரு டவுட்

எனக்கு ஒரு டவுட் டெல்டா மாவட்டம் திருவாரூர் எடுத்துக்கோங்க. இங்க ஊருக்கு வெளியே இருந்த விவசாய நிலத்தையெல்லாம் plot போட்டு விற்பனை செய்வதும் வாங்குவதும் யாரு ? வெளிநாட்டுல சம்பாதிச்சது, அரசு ஊழியர் கையில் எக்கச்சக்கமா புழங்குற பணம், IT மக்கள் சம்பாத்தியம், வியாபாரிகள் கிட்ட இருந்த கருப்பு பணம் இதெல்லாம் எதுல முதலீடு செஞ்சா double ஆகுன்னு கணக்கு போட்டு ஊருக்கு வெளில இருந்த விவசாய நிலத்தை எல்லாம் plot போட்டு வாங்கி ரியல் எஸ்டேட் வளர்த்தது கார்ப்பரேட்டா நம்ம லோக்கல் மக்களா ?? இதுல விவசாயம் காப்போம்ன்னு hashtag வேற டெய்லி போட்டுக்கவேண்டியது...

மொரீசியஸ் வழி பற்றி கேள்விபட்டதுண்டா ?

இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடு எது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் ! 10 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் ஒரு குட்டி ஆப்பிரிக்க தீவு நாடான மொரீசியஸ் தீவு தான் அது. ஆமாங்க 2001 முதல் 2011 வரை இந்தியாவில் குவிந்த மொத்த FDI எனப்படும் அந்நிய முதலீட்டில் 40 சதவீதம் மொரீசியஸ் தீவில் இருந்து வந்தது தான். ஆச்சர்யமா இருக்கா ? இந்தியாவில் இருக்கும் கருப்பு பண முதலைகள் பணத்தை வெளுப்பாக மாற்ற மொரீசியஸ் தீவில் இருந்துதான் முதலீடு செய்கின்றனர் என்பது ஊரறிந்த செய்தி.. கூகுளில் Mauritius route என்று தட்டி பாருங்கள். அத்தனை செய்தியும் கிடைக்கும்.. மோடி பதியேற்றபின் கருப்பு பணத்தை ஒழிக்க மொரீசியஸ் தீவுகளுடனான வரி ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து பணம் பரிமாற்றப்பட்டதால் அவை சரி செய்யப்பட்டன எடுக்கப்பட்டது.. இப்பொழுது மொரீசியஸ் தீவில் இருந்து வரும் முதலீடு படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.. கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அத்தனை எளிதானதள்ள.. ஆனால் இந்த அரசு மிக உறுதியாக நடவடிக்கைளை எடுத்துவருவது வரவேற்கதக்கது

மிஷன் இந்திரதனுஷ் - தடுப்பூசி போடுவதில் ஒரு புரட்சி

நாட்டில் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்த பெரிய அளவிலான குறைபாட்டை போக்க Mission Indradhanush என்கிற திட்டத்தை மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு துவங்கியது. இத்திட்டத்தின் இலக்கு 90% குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்குள் 12 முக்கியமான தடுப்பூசிகளை போடுவதாகும். இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. World's best 12 practices என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.. குழந்தைகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசி போடும் திட்டம் கூட 70 வருட காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாதது வெட்ககேடு. இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சி திட்டங்கள் அல்ல. ஆனால் இவைதான் நாளைய இந்தியாவை சிறப்பாக படைக்க உதவும். அதே சமயம் இது போன்ற மத்திய அரசின் சீரிய முயற்சி இல்லாத காலத்திலிருந்தே தமிழக அரசு தடுப்பூசி போடுவதில் ஆகச்சிறந்த மாநிலமாக விளங்கிவருவதை இங்கே குறிப்பிடவேண்டும்...

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வம்

இந்தியாவில் உற்பத்தியை துவங்க white goods என்று அழைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்களான வாஷிங் மெஷின், AC, பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் ஆர்வம்.. Bosch, Siemens, Haier, TCL, Panasonic, Godrej, BPL என அனைவரும் இந்தியாவில் உற்பத்தியை துவங்க முதலீடு. இறக்குமதியை குறைத்து உற்பத்தியை பெருக்க சமீபத்தில் இந்திய அரசு white goods களுக்கான இறக்குமதி வரியை (குறிப்பாக compressor கள்) இருமடங்காக உயர்த்தி அறிவித்தது. BSH நிறுவனம் சென்னையில் 800 கோடியில் பிரிட்ஜ் தயாரிப்பு, Midea குரூப் (சீன நிறுவனம்) 1350 கோடியில் compressor உற்பத்தி, Haier 3000 கோடியில் நொய்டாவில், TCL நிறுவனம் 2000 கோடியில் திருப்பதியில், Voltas நிறுவனம் 250 கோடி குஜராத்தில் உற்பத்தி திட்டங்கள் அறிவித்துள்ளன..

விவசாயத்தை காக்க விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுங்கள்

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.. சிறிய உதாரணம் சொல்கிறேன் : 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகபட்சமாக  விவசாயத்தில் 14% வளர்ச்சி  கண்ட மாநிலம் மத்திய பிரதேசம். இதற்கு காரணம் அரசாங்கம் நீர் சார்ந்த திட்டங்களிலும், பயிர் உற்பத்தியிலும் அதீத கவனம் செலுத்தியது தான். ஆனால் அதன் விளைவு இன்று வேறுமாதிரி வெளிப்பட்டிருக்கிறது. அதீத உற்பத்தி காரணமாக கருப்பு உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு வெறும் ₹ 4000 க்கு விற்பனை ஆகிறது. இது அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையான (MSP) ₹ 5600 க்கு 29% குறைவான விலையாகும். பூண்டு அதீத உற்பத்தி காரணமாக கிலோ ₹ 7 க்கு வாங்கப்படுவதாக குமுறுகின்றனர் விவசாயிகள். விலை இன்னும் வீழும் என்ற அச்சம் வேறு உள்ளது. உற்பத்தியில் மட்டும் அரசு பெரிய அளவில் கவனம் செலுத்த சந்தை படுத்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இன்று விவசாயிகளின் போராட்ட களமாக மாறியுள்ளது மத்திய பிரதேசம். சந்தை இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் , லாபம் வந்தால் தான் ஒரு தொழிலை செய்பவர் அதை தொடர்வார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விவசாயத்

துவங்கியது கங்கையில் கன்டெயினர் கப்பல் போக்குவரத்து !

நாட்டிலேயே முதல்முறையாக நீர்வழியில் சரக்குகளை அனுப்பும் திட்டம் கங்கை நதியில் நேற்று துவங்கப்பட்டுள்ளது. 16 கன்டெயினர்களை ஏற்றிய கப்பல் ஒன்று முதல் கப்பலாக கொல்கத்தாவில் இருந்து வாரணாசிக்கு கங்கை நதியில் நேற்று பயணத்தை துவங்கியது ! இந்த நீர்வழிக்கு NW 1 என்று பெயரிட்டுள்ளனர். NW என்பது National Waterway என்பதை குறிக்கும் ! நாடுமுழுவதையும் இணைக்கும் NH (National Highway) சாலைகள் போல நதிகளில் சரக்குகளை கொண்டுசெல்ல மோடி அறிவித்த திட்டம் தான் National Waterway ! நீர்வழி போக்குவரத்து மிகவும் சிக்கனமானது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததும் கூட ! இத்தனை வருடம் வெறும் பேச்சில், தேர்தல் வாக்குறுதியில் மட்டுமிருந்த இந்த திட்டம் நிதின் கட்கரியின் சீரிய முயற்சியால் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது ! #IndiaMarchingAhead https://yourstory.com/2018/11/inland-waterways-container-movement/

இன்கமிங் கால் பெறக்கூட இனி ரீச்சார்ஜ் கட்டாயம்

மாதாமாதம் ரீச்சார்ஜ் செய்யாத பலருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை அளித்துதான் வருகின்றன. அதற்கு காரணம் நீங்கள் ரீச்சார்ஜ் செய்யாவிட்டாலும் உங்களால் நிறுவனத்துக்கு வருமானம் வேறு வகையில் வந்துகொண்டு இருந்ததே. உதாரணமாக நீங்கள் ஒரு ஏர்டெல் எண்ணை ரீச்சார்ஜ் செய்யாமலே வைத்திருந்தாலும் அந்த ஏர்டெல் எண்ணுக்கு பிற நெட்ஒர்க்கிடம் இருந்து வரும் கால்களுக்கு அந்த நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு பணம் தரவேண்டும். இதைத்தான் IUC (interconnection usage charges) என்று சொல்வார்கள். கடந்த அக்டோபரில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) IUC கட்டணத்தை 57% குறைந்தது அதேபோல் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் IUC கட்டணத்தை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தது.  இதன்படி ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவது வீண் என்று ஆகிறது. எனவே இனி மாதாமாதம் குறைந்த பட்ச ரீச்சார்ஜ் செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. அது மாதம் 35 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்தியா ஜப்பான் - பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal)

சமீபத்தில் மோடி ஜப்பான் சென்றபொழுது இந்தியா ஜப்பான் இடையே $ 75 பில்லியன் (சுமார் ரூ.5¼ லட்சம் கோடி)  மதிப்புக்கு பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal) கையெழுத்தாகியுள்ளது. அதேபோல் ஜப்பான் இந்தியா இடையேயான வர்த்தகமும் அமெரிக்க டாலர் இல்லாமலே நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பண பரிமாற்ற ஒப்பந்தம் (Currency Swap Deal) என்றால் என்ன ? 1990 ல் ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு 3 வார இறக்குமதியை மட்டுமே சமாளிக்கும் அளவுக்கு கீழே செல்ல இந்தியா IMF மற்றும் உலகவங்கியிடம் டாலருக்கு கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் இனிவரும் காலத்தில் இந்தியாவின் டாலர் கையிருப்பில் பெரிய சரிவு ஏற்பட்டால் நாம் ஜப்பான் ரிசர்வ் வங்கியிடம் சுமார் ரூ.5¼ லட்சம் கோடி வரை அமெரிக்க டாலர்களாகவோ அல்லது ஜப்பான் நாணயமாகவோ பெற்றுக்கொள்ளலாம் ! அதற்கு மாற்றாக இந்திய ரூபாயை ஜப்பானிடம் பரிமாறிக்கொள்ளலாம் ! இந்திய ரூபாய் பெரிய அளவில் சரிவை சந்தித்துவரும் நிலையில் இந்த ஒப்பந்தம் பெரிய வரப்பிரசாதமாகும் !

தோசை ஜாதியும், தோசை பொருளாதாரமும்

Image
சமீபத்தில் தோசையில் ஜாதி பார்ப்பது எப்படி என்று பேசினார் திராவிடர் கழக நிர்வாகி ஒருவர். அதே போல் தோசையை வைத்து பொருளாதாரத்தை எப்படி புரிந்துகொள்வது என்று பாடம் எடுக்கிறார் முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன். இரண்டு பேர் சொன்னதும் இண்டர்நெட்டில் தட்டினால் கிடைக்கும் ! எதை பார்ப்பது, எதை பின்பற்றுவது, எதை மனதில் ஏற்றுக்கொள்வது என்பது நம் கையில் !

தொழிலதிபர்னா திருடன் - இந்த அடிப்படையே தப்பு

Image
என்ன திமிர் பார்த்தீங்களா இந்த பெரிய மனுசனுக்கு ? இந்தியாவில் தொழில் உற்பத்தி செய்யவேண்டுமாம் !!! லூசு பய எப்ப பாத்தாலும் இந்தியா உருப்புடனும், தொழில் வளர்க்கணும், முதலாளிகளுக்கு தொழில் செய்ய உதவிசெய்யனுன்னு உளறிக்கிட்டு இருக்கான் ! இந்தியாவுக்கு எதுக்கு தொழிற்சாலை ??? தொழில் அதிபர் என்றாலே திருடனாச்சே !!!! தொழிலதிபர்னா திருடன்னு வளரும் சமுதாயத்தின் மனதில் வெற்றிகரமாக விதத்தாயிற்று ! என்ஜினீயர் படிக்குறவனே தொழிலுக்கு எதிராத்தான் facebook போஸ்ட் போடறான் ! அத என்ஜினீயரிங் பாடம் எடுக்குற வாத்தியார் ஷேர் பண்றார் !!!! இந்த அடிப்படையே தப்பு ! ஒன்று உண்மை சின்ன கடையோ பெரிய அம்பானியோ நாம் தொழில்முனைவோர்களை மதிக்காத வரை இங்கே எதுவும் மாறப்போவது இல்லை ! நம்ம எல்லா பிரச்சனைக்கும் அமெரிக்கா தான் காரணம், அம்பானி பெட்ரோல் விலையை ஏத்துறார், தொழிலதிபர்னா திருடன், CIA நெனச்ச இந்தியா இருக்காது இதெல்லாம் fantasy கதைகள். கேட்க சுவாரசியமா இருக்கும். கொஞ்சம் திறமையா வார்த்தை ஜாலத்தோட பேசுவரன் சொன்னா உண்மை மாதிரி கூட இருக்கும். ஆனால் எதுவும் உண்மை இல்லை ! தொழில்முனைவோர் தான் நமக்கு தேவை !

பெட்ரோல் விலை குறையுமான்னு தெரியனுமா? இதை படிங்க !

சவூதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், ஜமால் கசோக்கி (Jamal Khashoggi) சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் சவூதி அரசுக்கும், சவூதியின் ஏமன் படையெடுப்புக்கும் எதிராக கடும் விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இதன் காரணமாக சவூதியில் அவருக்கு மிரட்டல்கள் வரவே 2017ல் அமெரிக்காவில் குடியேறி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இணைந்தார். அங்கும் சவூதி அரசை விமர்சித்து தொடர்ந்து எழுதிவந்தார் ! துருக்கியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த ஜமால் தனது முந்தைய திருமண விவாகரத்து சான்றிதழ் தொடர்பாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரிலுள்ள உள்ள சவூதி தூதரகத்துக்குச் செப்டம்பர் 28ஆம் தேதி சென்றார். தூதரகத்துக்குள் சென்ற ஜமால் திரும்பி வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சவூதிக்கு அழுத்தம் கொடுக்க ஜமால் தூரகத்துக்குள்ளேயே கொடூரமாக கொல்லப்பட்டதை சவூதி ஒத்துக்கொண்டது ! இதனால் நெருங்கிய கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் சவூதி இடையேயான உறவில் பெரிய விரிசல் விழத்துவங்கியுள்ளது. தன்னிடம் அடைக்கலம் தேடிவந்தவனை தூதரகத்துக்குள் கொடூரமாக கொல்லப்பட்டத்தை அமெரிக்காவால் பொறுத்துக்கொள

ஏன் கோவிலில் சிலைகளை போட்டோ எடுக்க கூடாது ? நீங்கள் கொள்ளை அடிக்கவா ?

Image
கோவிலில் சிலைகளை போட்டோ எடுக்க கூடாது என்று அறநிலைய துறை அடம்பிடிப்பதே கோவில் சிலைகள் கொள்ளை போக துணை புரியத்தான் என்று நண்பர் சொன்னார். மீட்கப்பட்ட பல சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அறநிலைய துறைக்கே தெரியவில்லை. காரணம் அவை எங்கும் பதிவு செய்யப்படவில்லை. தங்க சிலையை போட்டோ எடுக்க கூடாது என்று சொல்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்கலாம். கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.  Source : DTNext Newspaper Article இவை எதுவும் கர்பகிரஹ சிலைகள் இல்லை, கோவிலில் ஆங்காங்கே தென்படும் சாதாரண சிலைகள் தான் ஆனால் இவைகள் சிலை மார்க்கெட்டில் சில கோடிக்கு ஏலம் போகிறது. இதை கூட போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். காரணம் அப்பொழுது தான் அவை தொலைந்து போனாலும் கண்டுபிடிக்க முடியாது. நாம் தினம்தினம் சென்று விழுந்து வணங்கும் சிலை ஒரிஜினல் என்பதற்கு எந்த கேரண்டியும் இல்லை மக்களே ! பக்தர்கள் விழித்துக்கொண்டு கோவிலை இந்து சமய அறநிலைய துறையிடம் இருந்து காப்பற்றினால் தான் உண்டு... ! விழித்துக்கொள்ளுவோம் !!!! ஒன்று அரசாங்கம் சிலைகளை பதிவு செய்யட்டும் அல்லது மக்களை போட்டோ எடுக்க அனுமதிக்கட்டும

அறிவியல் ரீவைண்ட் - சுத்தியல் vs இறகு எது தரையை முதலில் தொடும் ?

Image
ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும், இறகையும் கீழேபோட்டால் சுத்தியல் தான் முதலில் தரையை தொடும். சுத்தியல் கனமானது என்பதால் தான் சீக்கிரம் விழுகிறது என்பதே பலரின் உடனடி புரிதல். ஆனால் உண்மை காரணம் அதுவல்ல ! கீழே விழும் பொழுது ஒரு பொருளுக்கு காற்று ஏற்படுத்தும் தடையே அது தரையை தொடும் நேரத்தை தீர்மானிக்கிறது ! இதை முதலில் உணர்ந்தவர் கலிலியோ கலீலி என்கிற மேதை ! கலிலியோ சொன்னது உண்மை என்று உணர்த்த நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய பொழுது ஒரு சோதனையை செய்து காட்டியது ! நிலவில் விண்வெளி வீரர் ஒரே நேரத்தில் ஒரு சுத்தியலையும், இறகையும் கீழே போடுவார். அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையை தொடும் ! பார்க்க நாசாவின்  வீடியோ

Online பூதம் வருகிறது சில்லறை வியாபாரிகளே !

பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஐந்து நாட்களில் சராசரியாக ஒரு நொடிக்கு 5 ஷூக்கள் விற்றதாக அறிவித்துள்ளது. அப்படியெனில் 5 நாட்களுக்கு 21.6 லட்சம்  ஷூக்கள் விற்கப்பட்டதாக பொருள். ஒரு கடையில் 10 ஷூ விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொண்டால் கூட இது 2.5 லட்சம் ஷூ கடைகளில் நடந்திருக்க வேண்டிய வியாபாரம்... சில்லறை வியாபாரிகள் தங்கள் வியாபார உத்திகளை புதுப்பித்துகொள்ள வேண்டிய நேரமிது.

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை

இந்தியாவின் New Bio Fuel Policy/புதிய உயிரி எரிபொருள் கொள்கை பற்றி கேள்விபட்டீர்களா ? பெட்ரோலில் 10% வரை எத்தனால் கலக்க இந்தியாயாவில் அனுமதி உண்டு. அதே சமயம் இதுவரையில் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை மட்டும்தான் பெட்ரோலில் கலக்க இந்தியா அனுமதித்தது. ஆனால் இனி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், மழை-ஈரம்-பூஞ்சைகளால் சேதமடைந்த உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு, நகர்ப்புற திடக் கழிவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலைக் கூடப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது. வேளாண் கழிவுகளைக் கொள்முதல் செய்து அதிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதே சமயம் மூலப்பொருள் அதிகம் கிடைக்கும்பொழுது உயிரி எரிபொருளின் தயாரிப்பு விலையும் கணிசமாக குறையும் ! அதே போல் 12 உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவவும் இந்திய முடிவெடுத்துள்ளது ! பெட்ரோல் விலை அனைத்துத்தரப்பு மக்களையும் வதைக்கும் இந்த நேரத்தில், சமீபத்தில்அறிவித்த Bio Fuel Policy நமக்கு எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. Reference : https://tamil.thehindu.com

ஊர் பேசுது - மணல் வியாபாரம்

ஊர் பேசுது ! ஆற்றில் மணல் எடுத்தால் சுற்றுசூழல் பாதிக்கும் என்கிறது ஒரு தரப்பு ! ஆற்றுமணலை எடுத்து எடுத்து தான் நிலத்தடி நீர் கிழே செல்கிறது என்கிறார்கள் ! (கவனிக்க நாம் நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயமே செய்கிறோம்) மணல் எடுக்காவிட்டால் கட்டுமான துறை பாதிக்கும் என்கிறது இன்னொரு தரப்பு. சரி மணலை எடுக்கவேண்டாம் இறக்குமதி செய்யலாம் என்றால் இறக்குமதி செய்யப்படும் மணல் தரமானதாக இல்லை என்று ஏற்கனவே ஊருக்குள் பேச்சை கிளப்பிவிட்டாயிற்று. ஒருவரும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.. கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி ஒரு பெரிய பொருளாதார சக்கரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறோம். கட்டிட தொழிலாளி முதல் நாட்டின் பெரிய தொழில்களான சிமெண்ட், ஸ்டீல் அவ்வளவு ஏன் வீட்டுகடன் கொடுப்பதில் வங்கிகள் என கட்டுமான துறையின் மந்தமானது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது இன்னொரு தரப்பு ! திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுமான துறை மீளும், ரியல் எஸ்டேட் கிங் திமுக என 2021 க்காக ஏக்கமாக காத்திருக்குது இன்னொரு தரப்பு !

பங்குச்சந்தை வீழ்ச்சி - திட்டமிட்ட சதியா ??

பங்குசந்தைகளில் பணம் போட்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் கடத்த 15 நாட்களாகவே பங்குகளின் விலை கணக்கு வழக்கு இல்லாமல், துறை வித்தியாசம் இல்லாமல் வீழ்ச்சி கண்டுவருகிறது. வீழ்ச்சிக்கு பலமான காரணம் எதுவும் எவரும் சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த Sunday Guardian கட்டுரையில் பங்குசந்தைகளில் செயற்கையாக ஒரு வீழ்ச்சியை உருவாக்க சதி நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீழ்ச்சி அக்டோபர் காலகட்டத்தில் நடக்கும் என்றும் இதன் மூலம் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி தோற்கடிக்க முன்னாள் அமைச்சர்  (ப சிதம்பரம்) திட்டம் தீட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை இணைப்பு - https://www.sundayguardianlive.com/news/12638-cabal-plans-october-meltdown-share-prices-rout-bjp

பழக்க வழக்கங்களுக்கும் உண்டு மரணம்

இன்றைக்கு வித்தியாசமாக அல்லது முகம் சுளிக்க வைக்கக்கூடியதாக அமையும் மாற்றங்கள் நாளை சாதரணமாகிப்போகலாம் ! இன்றைக்கு இருப்பவர்கள் புலம்புவார்கள் நாளைக்கு வருபவருக்கு அது என்னவென்று கூட தெரியாமல் போகும் ! அதுதான் இயற்கையின் நீதி ! 100 வருடங்களுக்கு முன் நாம் பிறந்திருந்தால் நாமும் வெள்ளைக்காரனுக்கு அடிமைகள் ! அந்த தலைமுறைக்கு அடிமையாக இருப்பதன் வலி தெரியும் ! அவர்களுக்கு ஆகஸ்ட் 15 தின் பெருமை தெரியும் ! இன்றைய தலைமுறையிடம் அது பெரிதாக எதிரொலிக்க வாய்ப்பில்லை.. ! இதே உதாரணம் பெண்கள் மறுமணம், நாகரீக உடை அணிவது, அனைவரும் செருப்பு அணிவது, அனைவரும் சட்டை போடுவது என எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தும் ! #Sabarimala #TripleTalaq

Rafale deal in simple words - Part 2

Here is one simple example of how Rafale's offset deals gonna change India's defence sector completely ! Dassault agreed to revive the Kaveri engine project of India's DRDO as part of the offset clause, which is a huge win for India's defence production. lets see how What is Kaveri Engine ? Kaveri Engine (GTX-35VS) project was initially started in 1989 as Engine for Tejas flight (India's first indigenous Light combat jets). Even after several delays, DRDO failed to produce the Kaveri Engine, as it lacks thrust to push the aircraft. Delay in Kaveri Engine project also delayed Tejas production. So India separated Kaveri Engine & Tejas as two separate projects. Currently Tejas is fitted with engine from General Electric (GE) company as stop gap arrangement. By 2014, After spending more than 2100 crores, DRDO even planned to drop the Kaveri Engine project. But Rafale deal gave new life for Kaveri Engine. How Rafale deal going to save Kaveri Engine pro

Rafale deal in simple words - Part 1

Till 2014 - India planned to buy 126 jets & Rafale was chosen by Indian army as the best fighter jet. 126 jets means 7 squadron. Each squadron contains 18 jets. In the planned 126 jets - 18 will be bought in Flyaway condition & manufactured in France + 108 should be manufactured in HAL Why 18 was planned to be manufacture in France ? India wanted Dassault to manufacture all Rafale jets in India but manufacturing & tech transfer needs time. But air force running short in numbers on active jets. So it want 1 squadron (18 in jets) as immediate requirement to counter Pakistan. So we planned to buy 18 in flyaway condition. Why deal was on hold ? India wanted Dassault to guarantee quality of all 126 jets (including the 108 to be manufactured in HAL) which Dassault was not agreeing. Dassault was very adamant that they will only give guarantee for 18 to be manufacture by them in France but not for the 108 manufactured by HAL So the deal was put on hold till Modi came to power. Whe

மாலத்தீவு தேர்தல் - வெற்றி பெற்றது இந்தியா !!☺

மாலத்தீவில் நடத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாகும்.. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிபர் சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டு இந்தியாவை எதிர்த்தார்.. இந்த தேர்தலின் மூலம் தங்களுக்கு சாதமான ஒருவரை மாலத்தீவில் ஆட்சியில் அமர்த்துகிறது இந்தியா... ஸ்ரீலங்காவில் மஹிந்தா ராஜபக்சே சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்ததாள் அவரை தோற்கடிக்க இந்திய உளவு அமைப்பான RAW இலங்கையில் இறங்கி வேலைசெய்ததும், ராஜபக்சே தான் தோல்வியுற இந்திய உளவுத்துறையே காரணம் என்று பேட்டியளித்ததும் இந்தியாவின் பெரிய அண்ணன் மொமெண்ட்ஸ்களில் சில...

வங்கிகள் இணைப்பு அறிவிப்பு - வங்கித்தேர்வுக்கு படிப்போர் உஷார்

தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மூன்றையும் இணைக்க அரசு முடிவு செய்துவிட்டது. தேனா வங்கி மோசமான நிதி நெருக்கடி மற்றும் வாரக்கடன் பிரச்னையில் உள்ளது. பேங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி ஓரளவுக்கு நல்ல நிதிநிலையில் உள்ளன.. எனவே இந்த இணைப்பு சரியாகவேபடுகிறது. ஏற்கனவே SBI வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளும் இணைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்பொழுது அடுத்த 3 வங்கிகள் இணைக்கப்படுகிறது. இந்த trend தொடரத்தான் போகிறது. இன்னும் சில வங்கிகளை இணைக்கும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இந்த இணைப்புகளில் ஒரே side effect புதிய வேலைவாய்ப்புகள்.. உதாரணமாக ஒரே ஊரில் தேனா, விஜயா, பரோடா வங்கிகளுக்கு கிளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இணைப்புக்கு பிறகு இவைமூன்றும் ஒரே வங்கி தான். ஒரே வங்கிக்கு ஒரு ஊரில் எதற்கு மூன்று கிளைகள் ??  எனவே சில கிளைகள் மூடப்படும் ஏற்கனவே இருக்கும் 3 வங்கி ஊழியர்களை இணைக்கப்பட்ட புதிய வங்கியில் ஏதாவது பணியில் அமர்த்தவே வங்கிகள் திண்டாடும். இதில் எங்கே புதிய ஆட்கள் எடுக்க ?? வங்கி தேர்வே லட்சியமாக கொண்டு படிப்போர் இதைப்போன்ற நாட்டு நடப்புகளையும் படிக்கி

100 சதவீதம் மின்மயமாகிறது ரயில் பாதைகள்

இந்திய ரயில்வேயின் மொத்த ரயில் பாதையையும் மின்சார ரயில் பாதையாக மாற்ற மத்திய அரசு முடிவு.. ஏற்கனவே 46% சதவீத ராயில்பாதை மின்மயமாக்கப்பட்டுவிட்டது. 20,000 கிமீ தூரத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன.. மீதம் இருக்கும் 13,675 கிமீ தூரத்தியும் மின்மயமாக்க முடிவு.. 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டம்.. 100% மின்மயமாக்களுக்கு பின் ரயில்வேயின் செலவுகள் வருடத்துக்கு 13,510 கோடி வரை மிச்சமாகும் என கருதப்படுகிறது.  அதே போல் 2.83 பில்லியன் லிட்டர் டீசல் இறக்குமதியும் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டீசல் என்ஜின்களை மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் மாற்றும் நடவடிக்கைகளும் துவக்கம்.. இன்றைய தேதிக்கு ரயில்வே துறை டீசல் என்ஜின்களையே நம்பியுள்ளது .. டீசல் விலை ஏறும் பொழுதெல்லாம் ரயில்வேயின் வருவாயும் பாதிக்கப்படுகிறது..

இஸ்ரோ விஞ்ஞானி உளவாளியாக, திருடர்கள் முதல்வர்களாக !

வெளிநாட்டுக்கு இஸ்ரோ வின் ரகசியங்களை விற்க முயன்றதாக போலியாக குற்றம்சாட்டப்பட்டு கொடுமைசெய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பி நாராயணன் இஸ்ரோ வின் கிரையோஜெனிக் (Cryogenic) என்ஜின் தயாரிப்பு பிரிவின் தலைவர். அப்துல்கலாம் மற்றும் விக்ரம்சாராபாயுடன் இணைத்து பணியாற்றியவர். நம்பி நாராயணன் கைதால் இஸ்ரோ வின் GSLV ராக்கெட் தயாரிப்பு பணிகள் 19 வருடம் தாமதமானது. இது நமது நாட்டுக்கு எத்தனை பெரிய இழப்பு. இஸ்ரோ இன்றும் GSLV ராக்கெட்டில் பெரிய வெற்றியை பெறவில்லை. தொலைதூரம் அனுப்பவேண்டிய செயற்கைகோள்களுக்கு நாம்இன்னும் ஐரோப்பாவின் ஏரியான் ராக்கெட்டுகளை வாடகைக்கு பயன்படுத்துகிறோம்.  ஒருவேளை நம்பி நாராயணன் பொய்வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் பெரிய செயற்கைகோள்களை நாம் நமது GSLV ராக்கெட்டிலேயே செலுத்திக்கொண்டிருப்போம். எத்தனை கோடி நமக்கு மிச்சமாகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள் ??? எனவே நம்பி நாராயணன் கைதால் இந்தியாவும் இஸ்ரோவோம் இழந்தது பல.. ஆனால் இந்த வழக்கால் பயனடைத்தவர்களும் இருக்கிறார்க

சரியான திசையில் இந்தியா !

இந்திய அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பாதி போலியானவை ! கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற மட்டுமே உருவாக்கப்பட்ட, காகிதத்தில் மட்டுமே இருக்கும் shell கம்பெனிகள்.. இந்திய அரசு இவர்களுக்கு செக் வைக்க முடிவுசெய்தது ! இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களின் டைரக்டர்களும், board memberகளும் தங்களது ஆதார் எண், இருப்பிட தகவல், செல்போன் நம்பர், ஈமெயில் என அனைத்து தகவல்களையும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அரசாங்கத்துக்கு தரவேண்டும் என்று உத்தரவிட இன்று வரை பாதி நிறுவனங்கள் மட்டுமே தகவல்களை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளன. மீதி இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் போலியானவை ! அவர்களின் நிறுவன பதிவு விரைவில் ரத்து செய்யப்படும் ! ஏற்கனவே 2.26 லட்சம் நிறுவங்களின் பதிவை ஏற்கனவே ரத்துசெய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் ! ஆம் இந்தியா சரியான திசையில் தான் செல்கிறது ! #boardroomcleanup https://www.news18.com/news/business/almost-half-of-all-corporate-directors-may-not-actually-exist-govts-boardroom-cleanup-shows-1866323.html 

1$ = ₹70 - நல்லதா ? கெட்டதா ?

Image
பொருளாதாரம் மோசமாக இருந்து நாட்டின் நாணயமும் வீழ்ச்சி அடைந்தால் நாம் மோசமான நிலைமையில் இருப்பதாக பொருள் ! பொருளாதாரம் நன்றாக இருந்து நாட்டின் நாணயம் வீழ்ச்சி அடைந்தால் அது நாட்டுக்கு பெரிய வரப்பிரசாதம் ! பொருளாதாரம் நன்றாக இருக்கும் பொழுது நாட்டில் உள்ள தொழில் உற்பத்தி நன்றாக இருக்கும். உற்பத்தி நன்றாக இருந்தால் ஏற்றுமதி நன்றாக இருக்கும். ஏற்றுமதி நடைபெற்றால் தான் வேலைவாய்ப்பு பெருகும் ! உதாரணத்திற்கு மாருதி நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கார் ஒன்றை $5000 க்கு ஏற்றுமதி செய்வதாக வைத்துக்கொள்வோம். 1$ = ₹65 என்று வைத்துக்கொண்டால் மாருதி நிறுவனத்திற்கு ஒரு காருக்கு ₹ 3,25,000 ரூபாய் கிடைக்கும். இதுவே 1$ = ₹70 என்று வைத்துக்கொண்டால் ₹ 3,50,000 ரூபாய் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருந்தால் மாருதி நிறைய கார்களை உற்பத்தி செய்யும் ! நிறைய லாபமும் கிடைக்கும். நாட்டின் $ இருப்பும் உயரும். அதைவைத்து இறக்குமதியை கையாளலாம் ! (TCS, இன்போசிஸ் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்களும் ஏற்றுமதி நிறுவனங்கள் தான்) பொருளாதாரம் நன்றாக இருக்கும் பொழுது நாணய மதிப்பு சரிவடைந்தால் நாட்டுக்கு அது பலவகைய