Posts

Showing posts with the label கல்வி

இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்கள் பொதுவானதாக இருக்கலாமே ?

நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் இயற்பியல் ஆசிரியர் புத்தகத்தின் இத்தனாம் பக்கத்தில் பிரிண்டிங் மிஸ்டேக் இருக்கு திருத்தி கொள்ளுங்கள் என்று ஸ்டைலாக சொ...

மருத்துவ நுழைவு தேர்வு - சில உண்மைகள்

Image
தேசிய அளவில் மருத்துவ நுழைவு தேர்வு பற்றிய ஒரு தவறான புரிதல் என்னவென்றால் அனைத்து மருத்துவ கல்லூரி இடங்களுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் என்பதே. உண்மை என்னவெனில் மொத்த மருத்துவ இடங்களில் வெறும் 15 சதவீத இடங்கள் மட்டுமே மருத்துவ நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் இருக்குமெனில் அதில் 15 சீட் மட்டுமே நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் மீதி இடங்கள் வழக்கம் போல் மாநில தேர்வில் (+12 தேர்வில்)  பெற்ற மதிப்பெண்ணை கொண்டே நிரப்பப்படும். கிராமபுறங்களில் படித்தவர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் தனியார் கல்லூரிகள் தங்கள் பண வேட்டை குறையும் என்பதற்காக கிளப்பி விடும் காரணங்கள் என்பதை நுழைவு தேர்வை எதிர்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட்

Image
தனது கனவுகளை நனவாக்க ஒரு குழந்தை  ! தனது கஷ்டத்தை தீர்க்க ஒரு குழந்தை என்று குழந்தைகள் பார்க்கப்பட்டது அந்த காலம். தனது பணத்தை வெளியுலகிற்கு காட்டவும் தனது தகுதியை வெளியுலகிற்கு காட்டவும்  இன்று குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் பொறியியலில் ஆர்வமே இல்லையென்றாலும் தனது ஸ்டேடஸ்க்காக(status) பொறியியல் படிக்கவைத்து பெரிய கல்லூரி என பல கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து பொறியியலுக்கு HYPE உருவாக்குவதே இந்த பெற்றோர் தான். என்மகன் சென்னையில் இந்த கல்லூரியில் படிக்குறான் நான் இந்தனை இலட்சம் கொடுத்து எனது மகனை கல்லூரியில் சேர்த்தேன் என்று கல்யாண வீடுகளில் பெருமை பேசும் பெற்றோர் பலர். இவர்களுக்கு சரியான ஒப்பீடு ரியல் எஸ்டேட் முதலாளிகள் தான் ! விலை போகாத நிலத்தை விலையேற்றி இன்று யாருமே நிலம் வாங்க முடியாத நிலைக்கு ஆளாக்கிய ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல் வேலைவாய்ப்பே இல்லையென்றாலும் பொறியியலுக்கு டிமாண்ட் உருவாக்குவது இவர்கள்தான். வரும் காலங்களில் ஆடி தள்ளுபடியில் இன்ஜினியரிங் சீட் விற்கப்பட்டால் ஆச்சர்யப்படாதீர்கள்.

யார் குற்றவாளி ?

Image
புரட்சி ! புரட்சி ! புரட்சி ! தூங்கிக்கொண்டு மட்டுமே இருக்கும் அரசு துறைகளுக்கு மத்தியில், முதல் துறையாக தமிழக கல்வி துறை விழித்து எழுந்து கொண்டுள்ளது..! ஆம் ! 1978 ஆம் ஆண்டு முதல் எழுத்து தேர்வாக இருந்துவந்த +1 வகுப்பின் தட்டச்சு (Typewriting) முதல் தாள் தேர்வு 2015 ஆம் கல்வி ஆண்டு முதல் செய்முறை தேர்வாக மாற்றப்படுமென அறிவித்துள்ளது. அதவாது தட்டச்சுக்கு எதுக்கு எழுத்து தேர்வு என்று யோசித்து முடிவெடுக்க 36 ஆண்டுகள் கடந்து விட்டன. Source: http://crsttp1.blogspot.in/2014/12/2_19.html இந்த செய்தி ஒன்றே போதும் நமது கல்வித்துறையின் இலட்சணத்தை சொல்வதற்கு. தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், மத்திய அரசு ஆசிரியருக்கு நிகரான ஊதியம் தரவேண்டும், எந்த தேர்வும் இல்லாமல் நேரடியாக வேலை தரவேண்டும் இன்னும் எத்தனையோ வேண்டும் என கூவும் எந்த ஆசிரியராவது 15 வருடங்களாக பக்கம் எண் கூட மாறாமல் பாழடைந்து கிடக்கும் +1, +2 வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும் என்று போராடியதுண்டா ? சம்பள உயர்வு கேட்டு தெருவில் இறங்குமுன் உங்கள் மனசாட்சியை கேளுங்கள் 20,000, 30000 என சம்...

மூன்றாவது கோணம் - ஸ்டாம்ப் பேட் சொல்லும் உண்மை

Image
நான்கு வருடம் கழித்து பள்ளி செல்லும் வாய்ப்பு . சுதந்திர இந்தியாவின் ஜனநாயக திருவிழாவில் என்னுடைய பங்களிப்பை செய்ய திருவாரூர் அரசு தொடக்க பள்ளிக்கு சென்றிருந்தேன். நேர்முகத் தேர்விற்கு செல்வது போல் சொல்லமுடியாத பதட்டம் என்னை தொற்றிகொண்டது. இத்தனைக்கும் திருவாரூர் வாக்குசாவடி பதட்டமான வாக்குசாவடி பட்டியலில் கூட இல்லை ஆனால் எனக்கு ஏனோ பதட்டத்தை தவிர்க்க முடியவில்லை. கூட்டம் கொஞ்சம் இருந்தது . எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் இரண்டையும் நீட்டினேன். எனது பெயரை சரி பார்த்த பின்னர் கையெழுத்திட சொன்னார்கள். கையெழுத்து போடும் பொழுதுதான் கவனித்தேன் பக்கத்தில் இருந்த ஸ்டாம்ப் பேடை . கையெழுத்து போடா தெரியாதவர்கள் கைநாட்டு வைப்பதற்கு  . சுதந்திரம் கிடைத்து 67 வருடம் முடிந்த பின்னும் எல்லா இந்தியர்களுக்கும்  கல்வியை நம்மால் வழங்க முடியவில்லை. வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதன் சாட்சியாக ஸ்டாம்ப் பேட்  தெரிந்தது. -  விக்கி 

மிச்சங்களும் எச்சங்களும் - ( தமிழ் புத்தாண்டு சிறப்பு கட்டுரை )

Image
கொல்கத்தா வில்லியம் கோட்டை அன்று கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் தலைவர் மிஸ்டர் மெக்காலே இன்னும் வரவில்லை. அவருக்காக காத்திருக்காமல் கூட்டம் தொடங்கியது. இல்லை உங்கள் கூற்றை ஒப்பு கொள்ளவே முடியாது என்றார் திரு. வில்சன் நீங்கள் ஒப்பு கொள்ளாவிட்டால் என்ன? இது மெக்காலேயின் முடிவு என்றது எதிர் தரப்பு குரல். வில்சனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவரது வெள்ளை நிற மூக்கு சிவந்து அவரது கோபத்தை கூட்டத்திற்கு அப்பட்டமாக காட்டியது. வில்சன் இந்திய மொழிகள் பலவற்றை நன்றாக கற்றவர். இந்தியர்களுக்கு கல்வி இந்திய மொழிகளில் தான் கற்று தரப்படவேண்டும் என்று உறுதியாக நம்பியவர். இதற்காக விரிவான ஆய்வு செய்து அவர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை பற்றித்தான் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. தனது கோபத்தால் பயன் இல்லை என்பதை உணர்ந்த வில்சன் பின்வருமாறு கூறினார் . "உங்கள் மெக்காலே இந்தியாவிற்கு புதியவர், அவருக்கு இந்தியாவை பற்றி ஒன்றும் தெரியாது. இந்திய மக்களின் தேவை அவருக்கு தெரியாது .ஆங்கிலம் மட்டுமே போதும் என்பது அடி முட்டாள...