புரட்சி ! புரட்சி ! புரட்சி ! தூங்கிக்கொண்டு மட்டுமே இருக்கும் அரசு துறைகளுக்கு மத்தியில், முதல் துறையாக தமிழக கல்வி துறை விழித்து எழுந்து கொண்டுள்ளது..! ஆம் ! 1978 ஆம் ஆண்டு முதல் எழுத்து தேர்வாக இருந்துவந்த +1 வகுப்பின் தட்டச்சு (Typewriting) முதல் தாள் தேர்வு 2015 ஆம் கல்வி ஆண்டு முதல் செய்முறை தேர்வாக மாற்றப்படுமென அறிவித்துள்ளது. அதவாது தட்டச்சுக்கு எதுக்கு எழுத்து தேர்வு என்று யோசித்து முடிவெடுக்க 36 ஆண்டுகள் கடந்து விட்டன. Source: http://crsttp1.blogspot.in/2014/12/2_19.html இந்த செய்தி ஒன்றே போதும் நமது கல்வித்துறையின் இலட்சணத்தை சொல்வதற்கு. தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும், போனஸ் வேண்டும், மத்திய அரசு ஆசிரியருக்கு நிகரான ஊதியம் தரவேண்டும், எந்த தேர்வும் இல்லாமல் நேரடியாக வேலை தரவேண்டும் இன்னும் எத்தனையோ வேண்டும் என கூவும் எந்த ஆசிரியராவது 15 வருடங்களாக பக்கம் எண் கூட மாறாமல் பாழடைந்து கிடக்கும் +1, +2 வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும் என்று போராடியதுண்டா ? சம்பள உயர்வு கேட்டு தெருவில் இறங்குமுன் உங்கள் மனசாட்சியை கேளுங்கள் 20,000, 30000 என சம்...