Posts

Showing posts from November, 2015

தமிழகம் மிதக்கிறது !

Image
தமிழகம் மிதக்கிறது ! அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசைக்கு நீர் நிலைகளும் வடிகால்களும் இரையாகி, வெள்ள நீர் போக்கு தெரியாமல் நம் வீட்டுக்குள் வந்து நிற்கிறது. நவம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளக்காடு ஆனால் மார்ச்சில் குடிக்க தண்ணீர் இல்லை என குடங்களுடன் வீதியில் இறங்கவேண்டியுள்ளது. நமது ஆட்சியாளர்களும் திறமையற்றவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம் டாஸ்மாக் போராட்டம் தீவிரமாக நடத்து வந்தபொழுது மூன்று நாள் பழைய செய்தியான இளங்கோவன் ஜெயலலிதா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு போராட்டம் அறிவித்து டாஸ்மாக் போராட்டத்தையே திசை திருப்பிய திறமையான ஆட்சியாளர்கள் கொண்ட மாநிலம் நமது. எதிர்கட்சிகளும் ஒன்றும் ஒழுக்க சீலர்கள் அல்ல அவர்கள் தலையில் 2G கத்தி இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது அவர்கள் மாவட்ட செயலாளர்களும் ஆட்டம் போட வாய்ப்பை எதிர்பார்த்து தயாராகத்தான் உள்ளார்கள். மழைவந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு கேமராமேனையும் கூட்டி வந்து நம்மை சந்திப்பார்கள் . ஆனால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் நமது கட்சிகளிடம் கிடையாது. கடந்த 45 ஆண்டு த

மழைதான் 2016 தேர்தலின் துருப்புசீட்டு

Image
ஜெயலலிதா ஆட்சியில் எப்பொழுதுமே அவரது கடைசி 6 மாதங்கள் அவருக்கு சவாலாக அமைந்துவிடும். இந்த முறை எதிர் கட்சிகள் சிதறிக்கிடக்க, தாங்கள் செய்த நல திட்டங்கள் மற்றும் இலவசங்கள் எப்படியும் கைகொடுக்கும் என்ற துணிச்சலில் 234ம் நமதே என கோஷமிடுகிறது அதிமுக. ஆனால் ஜெயலலிதாவின் உண்மையான சவால் இந்த முறை எதிர் கட்சிகள் அல்ல வடகிழக்கு பருவமழை தான் ! நான்கரை வருடம் எதிர்கட்சிகளை வளரவிடாமல் அரசியல் செய்து அதில் வெற்றியும் பெற்ற ஜெயலலிதா வருண பகவானை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதே அவரது 2016 வெற்றியை தீர்மானிக்கப்போகிறது. ! குறிப்பாக திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னையை 2011 ல்  அதிமுக வசமாக்கினார் ஜெயலலிதா. ஆனால் இன்று மூழ்கி கிடக்கும் சென்னையை கரைசேர்க்காவிட்டால்  2016ல் அதிமுக மூழ்குவதை அவரால் வேடிக்கை மட்டும் தான் பார்க்கமுடியும்.  

திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு - திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் 2

Image
திருவாரூர் பற்றி நமது தளத்தில் ஏற்கனவே வெளிவந்து 3000 வாசகர்கள் மேல் படித்து மகிழ்ந்த  திருவாரூர் நீங்கள் அறியாத தகவல்கள் என்ற கட்டுரையின் அடுத்த பாகமே திருவாரூரில் பிரெஞ்சு படையெடுப்பு என்ற இந்த கட்டுரை. 18 ஆம் நூற்றாண்டு  நாம் 10 ஆம் வகுப்பில் மனப்பாடம் செய்து பாஸான கர்நாடக போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் இந்தியாவில் தங்கள் இருப்பை நிலைநாட்ட மோதிக்கொண்டனர். பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மெட்ராஸ், கடலூர் மற்றும் திருச்சி என மூன்று முக்கிய நகரங்கள் இருந்தன. அவற்றை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று பிரெஞ்சு படை திரட்டியது.  பிரெஞ்சு படைக்கு  தலைமை ஏற்ற தளபதி லாலே பிரிட்டிஷ் வசம் இருந்த கடலூர் கோட்டையை அசால்ட்டாக கைப்பற்றினார். லாலேவிற்கு அடுத்து இரண்டு வாய்ப்புகள் இருந்தன ஒன்று  வடக்கு திசையில் உள்ள மெட்ராஸ் நகரை நோக்கி படையெடுப்பது மற்றொன்று தெற்கு பக்கம் உள்ள திருச்சிநோபோலி (இன்றைய திருச்சி நகரம்) நோக்கி படையெடுப்பது.    பூவா தலையா போட்டு பார்த்து முடிவு எடுத்தாரா என்று நமக்கு தெரியாது லாலே தேர்ந்தெடுத்து திருச