Posts

Showing posts from January, 2014

அலெக்ஸாண்டரும் பூனையும்

Image
கவர்ன்மென்ட் ஆபீஸ்ல ஒரு செர்டிபிகேட் வாங்கவே paragaon ஆபீஸ் செப்பால் போடணும் , இப்படி பேர்வாங்குன நம்ம அரசாங்கம் திடிர்னு வேக வேலைசெய்யுது ? அதுவும் ஒரு தவறு செய்த தூதரக அதிகாரியை காப்பாற்ற  ? விசா  மோசடியில் ஈடுபட்ட  தூதரக அதிகாரி தேவயாணியை காப்பற்ற அமெரிக்க தூதரக பாதுகாப்பு ரத்து, தூதரக அதிகாரிகள் சிறப்பு சலுகைகள் ரத்து, நீ தேவயானிய ரிட்டன் அனுப்புறிய ? உன் தூதர நான் அனுப்புறேன் என்று புல்லட் ரயிலாக பாய்கிறது (மெட்ரோ லேட்டாகும், அதான் புல்லட் ) இந்திய அரசாங்கம். தேவயாணியை இந்திய கொண்டுவரலேனா பார்லிமென்ட் பக்கமே தல வச்சும் படுக்கமாட்டேன்னு சொல்ற வெளியுறவு துறை மந்திரி ? உலகின் முதலாளி என்று நினைத்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இதுவரை ஆமாம் சாமி மட்டும் போட்டு வந்த இந்தியாவா இது ? இந்தியாவிற்கு தெரியும் தன் பலம் என்னவென்று , அமெரிக்க இருக்கும் நிலையில் ஆசியாவில் இந்தியாவை விட்டால் எவரும் நேசக்கரம் நீட்ட தயாரில்லை. அதுவும் சீனாவுக்கு பக்கத்தில் ஒரு நண்பன் தலைகீழ நின்று தண்ணீர் குடித்தாலும் கிடைக்காது . ஆம் இந்தியா அவர்களுக்கு முக்கியம். அதை பயன்படுத்தித்தான் இந்திய தனது த

ஆம் ஆத்மி - அமெரிக்க தொடர்பு ? ஐந்தாம் படை போர்

ஐந்தாம் படை போர் : ஐந்தாம் படை போர் என்பது ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு நடத்தும் மறைமுக போர் அல்லது சதி என்று கூறலாம். ஐந்தாம் படை போர் என்றால் என்ன என்பதற்கு தினமலர் நாளிதழ் கூறிய விளக்கம் இதோ  ஐந்தாம் படை போர் போர்க்கள் பொதுவாக தொண்டு நிறுவனங்கள் (என் ஜி ஓ ), மனித உரிமை அமைப்புகள் கொண்டே அமைக்கப்படுகிறது. "உங்கள் நாட்டுக்கு எதிராக புரட்சி செய்யுங்கள் " என்று எந்த நாடும் சொல்லாது. அதற்கு பதிலாக "உங்கள் நாட்டில் மக்களின் உரிமைகள் போதுமானதாக இல்லை.அவற்றை அதிகரிக்கும் திட்டங்களில் ஈடுபடுங்கள். நாங்கள் நடத்தும் பயிற்சி பட்டறைகள், ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழி  முறைகள் பற்றி அறிந்துகொள்ளலாம்"என்று வலைவீசும். இவற்றில் சிக்குபவர்கள், வெளிநாடுகளில் சொல்லித்தந்த வழிமுறைகளை தங்கள் நாட்டில் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். 'மக்களுக்கான உரிமை போராட்டம்' என்ற பெயரில் அவை நடத்தப்படும் என்பதால் மக்கள் ஆதரவு பெருகும். இந்த போராட்டம் ஆளும்கட்சிக்கு தானே எதிராக உள்ளது என்று எண்ணி எதிர்கட்சியும்  நேரடியாகவோ, மறைமுகம

நாங்க ரொம்ப பிஸி

தப்போ சரியோ ! மெஜாரிட்டி இருந்தால் எதுவும் செய்யலாம் இதுவே ஜனநாயகத்தின் சறுக்கல். எதையும் செய்ய ஒரே தேவை மெஜாரிட்டி அவ்ளவே ! இஸ்ரோ (ISRO ) இந்தியாவின்  புகழை உலகை தாண்டி நிலவிலும் செப்டம்பரில் செவ்வாய் கோளிலும் நிலைநிறுத்த இருக்கும் பெருமைக்குரிய அமைப்பு. இந்தியாவிடம் விண்வெளி ராக்கெட்டுகளை அனுப்ப இரண்டு ஏவுதளம் உள்ளது. தற்பொழுது மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் தளம் அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது. நல்ல விஷயம்தான் செய்யலாமே என்றால் அங்கேதான் மனிதனின் இனப்பற்று, மாநிலப்பற்று, மானம்கெட்ட பற்றெல்லாம் பற்றிக்கொண்டது. இஸ்ரோ 3 வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேர்தெடுத்த இடம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம். தமிழ்நாடா ? செட் ஆகாதே என கூறுகிறது இஸ்ரோ விண்வெளி கமிட்டி. என் பாஸ் அப்படின்னு கேக்ககூடாது . இஸ்ரோ விண்வெளி கமிட்டி உறுப்பினர் மெஜாரிட்டி பெருமக்களுக்கு புடிக்கல . காரணம் பல லாபங்களை தரக்கூடிய ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொடுக்க ஆந்திரா விஞ்ஞானிகள் பெரும்பான்மை கொண்ட இஸ்ரோ விண்வெளி கமிட்டிக்கு மனசில்லை. அவர்களது எண்ணம் அந்த 3 வது ராக்கெட் ஏவுதளத்தையு

வரலாற்று பிழையா ? அல்லது சதியா ?

Image
ஒருநாள் பொழுது போகாமல் விக்கிபீடியாவில் நேரம் செலவிட்ட பொழுது கிடைத்த தகவல் என்னை மிரளவைத்தது. நான் படித்தது ராஜேந்திர சோழனை பற்றி . ராஜேந்திர சோழன் ராஜராஜனின் மகன் கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியவன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவனது போர் வெற்றிகள் பேசப்பட்டதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று கூறலாம். அவன் பெற்ற வெற்றிகள் இவை  இலங்கை தீவு முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டது. பாண்டியர்களும், சேரர்களும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் . ஆந்திரா, ஒரிசாவை ராஜ்யமாக கொண்ட சாளுக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். கங்கை நதி வரை சோழர்களால் கைப்பற்றப்பட்டது . கங்கையில் இருந்து எடுத்து வந்த நீரை கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோவில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கூகுள் மேப் உதவியுடன் தேடியபொழுது கிடைத்த தகவல் கங்கை நதிக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கும் உள்ள தொலைவு 2648 கீ . மீ . ஸ்ரீவிஜய நாடு (தற்போதைய மியன்மார் ) தோற்கடிக்கப்பட்டது. சுமத்ரா தீவு தோற்கடிக்கப்பட்டது. சீனாவிடம் வியாபார தொடர்பு மேற்கொள்ளப்பட்டது , சீனாவின் தூதர்கள் இராஜராஜன் மற்றும் ரா

தோழனே நீ எங்கே ?????

( இந்திய பொருளாதாரம் தங்கத்தின் முதலீடு செய்வதால் ஏற்படும் விளைவு, இலங்கை பிரச்னையில் தமிழக மாணவர் போராட்டம் இரண்டையும் சேர்த்து என் நண்பனுக்கு நான் எழுதும் கடிதம் போல இந்த கட்டுரையை எழுதினேன் ) இலங்கை பிரச்சனைக்கு குரல் கொடுக்க என்னை அழைத்த தோழனே நீ எங்கே ????? உன்னைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் நீ எங்கே? நீர்த்து போன தீர்மானத்துக்கு 1 மாதம் போராடிய என் தோழனே நீ எங்கே ??? இப்பொழுது இந்திய பொருளாதாரம் படுத்துவிட்டது .மக்களோ தங்கத்தில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை பின்நோக்கி இழுக்கிறார்கள் . அரசாங்கமோ செய்வது அறியாது நிற்கிறது  உன்னை தேடியபொழுது டாலர் விலை 58.66 Rs . நீ கிடைக்கும் பொழுது அது 60 ஆக கூட ஆகிவிடும் .. எங்கே இருக்கிறாய் நீ ?? கல்லூரி விடுமுறையில் காணாமல் போனாயோ ???????? என் அப்பாவிடம் தங்கத்தில் முதலிடு செய்யாதீர்கள்  என்றேன் என்னை முறைத்து ஏன்  என்று கேட்டார்கள் ????? அரைமணிநேரம் எனக்கு தெரிந்த கதையை சொன்னேன் கதை கேட்பது போல் கேட்டவர்கள் மீண்டும் செய்தார்கள் தங்கத்தில் முதலீட்டை ............. அவர்களுக்கு அது புரியவில்லை

Nammalvar about Artificial Fertilizers

Image
ரசாயன உரம் பற்றி நம்மாழ்வார் : ரசாயன உரம் பற்றி இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியது : "இரண்டாம் உலகப்  போருக்கு பின், பல பன்னாட்டு நிறுவனங்களில் விற்காத வெடிகுண்டுகளின் மூலபொருளான அமோனியா முதலான ரசாயனக் கலவைகளை விற்றுப் பணமாக்க அதே ரசாயனம் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை வேளாண் உலகில் உலகெங்கும் விதைத்த காலம் முதல் இந்தியாவின் வேளாண்மை கடன்கராத் தொழிலாயிற்று". நன்றி "தி இந்து தமிழ் " நாளிதழ் Indian organic farming scientist G. Nammalvar once quoted artificial fertilizers like below : " After Second World war, many multinational companies, to sell their unsold products like ammonia etc which are once sources of explosives in war time,  advertise them as the manure/fertilizers to increase the production in Agriculture. From that day, Agriculture in India changed to debtor business"   Courtesy "The Hindu Tamil" Newspaper