Posts

Showing posts from September, 2016

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

Image
டேவிட் பிரவுன் ஆராய்ச்சி முடிவுகள்  டேவிட் பிரவுன் Ganesh: Studies of an Asian God என்ற தனது புத்தகத்தில் மிக விரிவாக வாதாபி விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு  திருவாரூர் மற்றும் திருச்செங்காட்டங்குடி விநாயகர் சிலைகளின் படத்தை ஒப்பிட்டு ராபர்ட் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளரின் கருத்தையும் பதிவிட்டுள்ளார்.  தி ருச்செங்காட்டங்குடி (இடது) , திருவாரூர் வாதாபி விநாயகர் (வலது)  மூலம் : Ganesha : Studies of an Asian God புத்தகம்  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன  The Vatapi Ganapathi is still in worship at the Ganapatheswara Temple, Thiruccengattangudi. That It is a seventh century Chalukyan image, the one brought back by Cirutondaa from Badami appears, however, unlikely. Judging by the photograph, the image fits best stylistically with 10th 11th century Chola representation of Ganesha... The copy from Thiruvarur is even further stylistically from the supposed Chalukyan prototype though it is difficult to draw the precise conc

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

Image
வாதாபி கணபதியின் கதை : பல்லவர்களுக்கும் (காஞ்சியை தலைமையிடமாக கொண்ட தமிழ் மன்னர்கள்) சாளுக்கிய மன்னனா புலிகேசிக்கும் (கர்நாடக மன்னர்கள்) கி.பி  642ல்  சாளுக்கிய தலைநகரான வாதாபியில் போர் நடைபெற்றது. மூலம் : Google தளம்   பல்லவர்கள் படைக்கு பரஞ்ஜோதி என்ற சோழநாட்டு வீரர் தளபதியாக செயல்பட்டு போரை நடத்தினார். போரில் புலிகேசி கொல்லப்பட, பல்லவ படைகள் பெரு வெற்றியடைந்தன. போர் முடிவில் சாளுக்கிய தலைநகர் வாதாபி சூறையாடப்பட்டது. பல்லவ தளபதி பரஞ்சோதி (பின்னர் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்) போர் வெற்றியின் நினைவாக வாதாபியில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை கொணர்ந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக கர்ணபரம்பரையாக சொல்லப்படுகிறது. (இந்த கதைக்கு வரலாற்று சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை) இதே கதையை கொஞ்சம் மாற்றி பரஞ்சோதி தான் கொண்டுவந்த விநாயகர் சிலையை திருவாரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் எது உண்மை ?  பல்லவ சாளுக்கிய போரை மையப்படுத்தி எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் நூலில் எழுத்தாளர் கல்கி வாதாபி கணபதி திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை ச