எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

டேவிட் பிரவுன் ஆராய்ச்சி முடிவுகள் 


டேவிட் பிரவுன் Ganesh: Studies of an Asian God என்ற தனது புத்தகத்தில் மிக விரிவாக வாதாபி விநாயகர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு  திருவாரூர் மற்றும் திருச்செங்காட்டங்குடி விநாயகர் சிலைகளின் படத்தை ஒப்பிட்டு ராபர்ட் பிரவுன் என்ற ஆராய்ச்சியாளரின் கருத்தையும் பதிவிட்டுள்ளார். 

thiruvarur vathapi ganapathi
திருச்செங்காட்டங்குடி (இடது) , திருவாரூர் வாதாபி விநாயகர் (வலது) 
மூலம் : Ganesha : Studies of an Asian God புத்தகம் 
புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன 

The Vatapi Ganapathi is still in worship at the Ganapatheswara Temple, Thiruccengattangudi. That It is a seventh century Chalukyan image, the one brought back by Cirutondaa from Badami appears, however, unlikely. Judging by the photograph, the image fits best stylistically with 10th 11th century Chola representation of Ganesha...

The copy from Thiruvarur is even further stylistically from the supposed Chalukyan prototype though it is difficult to draw the precise conclusion with the photograph.

முழுவதும் படிக்க Ganesh: Studies of an Asian God - Google Books தளத்திலுருந்து பக்கம் எண் 143.

காஞ்சி பெரியவர் கருத்து 


விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்ததை பற்றி குறிப்பிடும் பொழுது காஞ்சி பெரியவர் வாதாபி கணபதி பற்றிய தனது ஆராய்ச்சியை குறிப்பிடுகிறார். 

அதில் திருவாரூரில் உள்ள வாதாபி கணபதியின் வடிவமைப்புத்தான் சாளுக்கியர் கால வடிவமைப்பு என்றும் திருச்செங்காட்டாங்குடி வாதாபி கணபதி சாளுக்கியர் பாணியில் அமையவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

முடிவுரை:


வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் தனது விருப்பத்திற்கு சொல்லப்பட்டதாகவே அமைந்துள்ளது. சரியான கல்வெட்டு குறிப்புக்கள் இல்லாத பொழுது வரலாற்று கதைகள் உண்மை தன்மை கேள்விக்குறியே !

வாதாபி கணபதி கதையில் திருவாரூரில் உள்ள கணபதி சிலை சாளுக்கிய அமைப்பில் இடம்பெற்றிருப்பதை பல ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் எவராலும் இது பரஞ்ஜோதியால் நிறுவப்பட்ட சிலை என்று முடிவுக்கு வரமுடியவில்லை. 

திருசெங்காட்டங்குடி சிலையோ சோழர் கால பாணி சிலையாகும். எனினும் திருசெங்காட்டங்குடி  பரஞ்ஜோதியின் சொந்த ஊர் என்பதால் அவர் விநாயகரை அங்கே பிரதிஷ்டை செய்திருக்க வாய்ப்பு அதிகம். 

இப்போதைக்கு தெளிவாக தெரிந்த ஒரே தகவல், வாதாபியில் இருந்து ஒரு விநாயகர் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டார் என்பதே ! மேலும் ஆராய்ச்சிகள் தொடரும் பொழுது இன்னும் தெளிவான ஒரு முடிவு கிடைக்கலாம். 

காத்திருப்போம் !  


Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

அவளும் ! நானும் ! நீங்களும் !