Posts

Showing posts with the label கலைஞர்

கலைஞரின் காமெடி அறிக்கை

Image
ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை முன் வரிசையில் அமரவைக்கவில்லை சொல்வது 93 வயதிலும் ஸ்டாலினுக்கு கட்சி தலைமை பதவியும் தராமல் முதல்வர் நாற்காலியும் தராமல் அவமதிக்கும் கலைஞர் ! குறிப்பு : தி.மு.க கட்சி ஸ்டாலினை எதிர்கட்சி தலைவராக கூட இன்னும் அறிவிக்கவில்லை. நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் பேசி முடிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஒருவேளை எதிர் கட்சி தலைவராகவும் கலைஞரே அமரலாம் யார் கண்டது !

மதுவிலக்கு என்னும் மாய அஸ்திரம் !

Image
மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்  இந்த வாசகம் இடம்பெறாத கட்சிகளின் தேர்தல் அறிக்கையே 2016 தேர்தலில் இல்லை. தி.மு.க மற்றும் மக்கள் நல கூட்டணியினர் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்றும், ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றும் அறிவித்துள்ளனர். மதுவிலக்கு கொண்டு வருவதினால் ஏற்படும் உடனடி பிரச்சனைகளான வருவாய் இழப்பு, மதுஅடிமைகளின் உடல் நலன், மது பழக்கத்திலிருந்து மீட்டலுக்கான மருத்துவ வசதி, கள்ள சாராய பிரச்சனைகள், கடத்தல் மது விற்பனையை தடுப்பது என பல சிக்கல்களை அரசு சமாளிக்க வேண்டிவரும். எனவே ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு என்பது தேர்தல் அறிக்கைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு என்பதே நிஜத்தில் சாத்தியம். ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதற்கு நிதிஷ் குமாரை உதாரணம் காட்டுவோர் பீகார் ஜார்கண்ட் மாநில எல்லை பகுதியில்  சாராயக்கடை அமைக்க ஏலம் பல கோடி ரூபாய்க்கு நடைபெற்றதையும், புதுச்சேரி தேர்தலில்  மதுவிலக்கு பற்றி எந்த கட்சியும் (தி.மு.க, அ.தி.மு.க உட்பட) வாய்திறக்காததையும், பீகார் முத...

இதில் யார் பலவீனமானவர் ?

மாநிலம் முழுவதும் நமக்கு நாமேன்னு சுத்தியாச்சு ! 18 கோடி செலவு செஞ்சு எல்லா பத்திரிக்கையிலும் முதல் பக்கம் விளம்பரம் கொடுத்தாச்சு ! பழைய நண்பர் காங்கிரஸ் உடன் கூட்டணி மீண்டும் வச்சாச்சு ! இதில் தே.மு.தி.க வும் கூட்டணிக்கு வந்தால் மட்டுமே ஜெயலலிதாவை வீழ்த்தி  ஆட்சியை பிடிக்க முடியும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருந்து பல்பு வாங்கிய தி. மு. க ! கடந்த கால தவறுகள் மீண்டும் செய்யாமல் சொந்த பலத்தில் தனித்து தேர்தலில்  போட்டி - விஜயகாந்த், பா.ம.க , பா.ஜ.க  கட்சிகள் ! இதில் யார் பலவீனமானவர் ? 

ஸ்டிக்கர் மட்டும் தான் புதுசு நண்பர்களே !

Image
சினிமா பார்த்துவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்த படியே ECR - OMR இணைப்பு சாலையில் நடத்து சென்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஜெயலலிதாவிற்கு புதன்கிழமை வரப்போகிற பிறந்தநாளுக்கு இன்றே வைக்கப்பட்ட பிறந்தநாள் ப்ளக்ஸ் பேனர்கள் பற்றி நண்பர் ஒருவர் கமெண்ட் அடிக்க மற்றொரு நண்பர் ஸ்டிக்கர் கலாச்சாரம் பற்றி குறிப்பிட அ.தி.மு.க அரசின் ஸ்டிக்கர் அரசியலை கலாயித்து தீர்த்தது நண்பர் பட்டாளம். இடம் :  Dr.  கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர்.  படிக்க தலைப்பு ! 

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி

Image
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பது எதிர்பார்த்த கூட்டணி தான். சரி, பழைய தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யை சற்று திரும்பிபார்போம் ! 19 மார்ச் 2013, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி தி. மு. க UPA 2 கூட்டணி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. ஜூன் 2013, கனிமொழியை மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்டியது தி. மு. க. அதுவும் கூட்டணி முறிந்த இரண்டரை மாதத்தில். காங்கிரஸ் போட்ட நிபந்தனை நீங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் கனிமொழிக்கு ஆதரவு தருகிறோம் என்பது. குடும்பமே கழகம் என்பதால் கழக நன்மை கருதி குடும்ப உறுப்பினர் கனிமொழிக்கு ராஜ்ய சபை எம்.பி பதவி வாங்கித்தந்தார் கலைஞர் . ஆகஸ்ட் மாதம் 2013, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவும் அளித்தார். ஆதாரம்: http://www.ndtv.com/south/congress-to-support-kanimozhi-for-a-second-term-in-rajya-sabha-526497 மார்ச் மாதம் கூட்டணி பிளவு ! ஜூன் மாதம்...

வல்லவனுக்கு வல்லவன் - #1 (சபாஸ் சரியான ஜோடி)

Image
வல்லவனுக்கு வல்லவன் தொடர் தமிழக மற்றும் இந்திய அரசியலில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாகும். படித்து விட்டு உங்கள் மேலான கமென்ட்களை பதிவிடவும். சபாஸ் சரியான ஜோடி எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதரின் மாயாஜாலத்தில் தமிழகம் அரசியல் சுழன்ற காலகட்டம் அது. ஆனால் அவருக்கு எதிர் கட்சியாக விளங்கிய கருணாநிதி அரசியலில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.  1977 - அதிமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக வெற்றியை பறித்து ஆட்சியை கைபற்றி இருந்தது. அப்பொழுது இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கூட்டணியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றார்கள். ஆனால் அதிமுக இந்திரா கூட்டணி சில மனகசப்பால் நீடிக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கலைஞர் உடன் கூட்டு சேர்ந்து பாராளமன்ற தேர்தலை சந்தித்தது.  எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திமுக இந்திரா கூட்டணி பாராளமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். பிரதமர் ஆனதும் இந்திரா செய்த முதல் வேலை எதிர் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சி களைப்பு.  தமிழகத்தில் கருணாநி...