Posts

Showing posts from July, 2017

சென்னை ஓபன் இனி இல்லை !

Image
சென்னை ஓபன் இனி இல்லை ! இனி அது மஹாராஷ்டிரா ஓபன் ! காரணம் நிதி இல்லையாம் ! சென்னை ஓபன் தமிழ்நாட்டுக்கு அத்தனை முக்கியமா? உலகத்தில் நடக்கும் டென்னிஸ் தொடர்களில் 4 கிராண்ட்ஸ்லாம் (Grand slam) போட்டிகளுக்கு அடுத்து 5வது பெரிய டென்னிஸ் தொடர் ATP World Series. சென்னை ஓபன் ATP World Series தொடரில் ஒன்று. இந்தியாவில் நடக்கும் ஒரே ATP World Series போட்டி நம்ம சென்னை ஓபன் மட்டும் தான். சென்னையில் 22 வருடமாக தொடர்ந்து நடைபெற்றுவந்த சென்னை ஓபன் போட்டியை அடுத்த வருடம் நடத்த நடவடிக்கை கூட எடுக்க வக்கில்லாத அரசு நம்ம எடப்பாடி அரசு ! ஜெயலலிதா இருந்த வரை விளையாட்டு துறைக்கு பெரிய அளவில் உதவி செய்துவந்தார். இதை நான் சொல்லவில்லை பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சொன்னார். 2013 ஆம் ஆண்டு World Chess championship போட்டியை சென்னையில் நடத்த பெரிய அளவில் முயற்சி மேற்கொண்ட ஜெயலலிதா 29 கோடி நிதி ஒதுக்கி Vishwanath Anand vs Magnus Carlsen போட்டியை இந்தியா பெருமைப்படும் வண்ணம் நடத்தி நினைத்ததை முடித்துக்காட்டினார். இந்தியாவில் போட்டி என்றவுடன் தயங்கிய Magnus Carlsen னை சென்னைக்கு வரவழைக்க

Cascading effect of having an ugly Government (ஒரு திறமையற்ற அரசால் ஏற்படும் விளைவுகள்) - Episode 2

Image
ஏற்கனவே கணித்தது போல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த மருத்துவ படிப்பில் state board மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்படியும் நீதிமன்ற வழக்கில் இந்த இடஒதுக்கீடு தோற்கும் என்று தெரிந்தே தான் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீட்டை அறிவித்தது. இப்போ ஈஸியா அறிக்கை விடலாம் நாங்க மாணவர்களுக்காக இடஒதுக்கீடு கொண்டுவந்தோம் ஆனால் நீதிமன்றத்தின் தடுத்து விட்டது என்று. ரமணா படத்தில் வரும் டாக்டர் மாதிரி அமைச்சர் பேட்டி கொடுப்பார் "சாரி நாங்க எவ்வளவோ try பண்ணோம் state board மாணவர்கள காப்பாத்த முடியல"

Cascading effect of having an ugly Government (ஒரு திறமையற்ற அரசால் ஏற்படும் விளைவுகள்) - Episode 1

Image
தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வில் state boardல் படித்தவர்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக கோர்ட்டில் உள்ள வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. (தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வராது என்று நான் நினைக்கிறேன்) எனவே மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு திட்டமிட்ட படி நடைபெறாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மருத்துவ கலந்தாய்வு முடிந்தால் தான் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். எல்லாவருடமும் ஜூலை 13 தேதிக்கு பாதி பொறியியல் கலந்தாய்வே முடிந்திருக்கும். இப்பொழுது பொறியியல் கலந்தாய்வு தேதி கூட அறிவிக்கப்படவில்லை. பொறியியல் துறையில் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. நிறுவனங்கள் மாணவர்களை தட்டி கழிக்க history of arrear இருக்கக்கூடாது. குறைந்தது 70 சதவீத CGPA இருக்கவேண்டும் போன்ற பல criteria களை முன்வைக்கின்றன. பொறியியல் கலந்தாய்வு தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே கல்லூரிகள் திறப்பதும் தாமதமாகும். பொறியியல் படிப்பில் முதல் வருடத்தில் அதிலும் குறிப்பாக M1 மற்றும் M2 போன்றவற்றில் தான் பலரும் arrear வைப்பார்கள். இப்பொழுது கல்லூரிகள் திறப்பது தாமதமானாலும் semester தேர

உணவு விற்பனையில் அந்நிய நேரடி முதலீடு

Image
இந்திய அரசு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் (Food only Retail) சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்நிய நாட்டு நிறுவனங்கள் கடைகளாகவோ (Brick and Mortar stores) அல்லது இணைய கடைகளாகவோ (online shops) உணவு துறையில் இந்தியாவில் கால்பதிக்க முடியும். ஆனால் ஒரேயொரு நிபந்தனை இந்தியாவில் மட்டுமே அவர்கள் கொள்முதல் செய்யமுடியும். (அதாவது காய்கறி பழங்களை குஜராத்திலோ மதுரையிலோ வாங்கி விற்கலாம் ஆனால் ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கையில் வாங்க முடியாது) மேலே சொன்ன முதலீடு வாய்ப்பை பயன்படுத்தி அமேசான், Bigbasket, Grofers போன்ற பல நிறுவனங்கள் இந்திய உணவு துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு எதிர்வினையாற்றும் முன் கீழே உள்ள இரண்டு செய்திகளை படியுங்கள்.  செய்தி 1: விவசாய தற்கொலை பற்றி செய்தி அதிகம் செய்தி வந்த கடந்த ஆண்டு வெளியான கீழே உள்ள செய்தி உங்களுக்கு அதிர்ச்சி தரலாம் " Total food grain production is estimated at an all-time high of 272 million tonnes in 2016-17, 8% higher than last year, and surpassing the previous record