Posts

Showing posts from August, 2019

வங்கிகள் இணைப்பும், வங்கி போட்டி தேர்வுகளின் எதிர்காலமும்

வங்கிகள் இணைப்பு இதோ அதோ என்று கடந்த வருடம் முழுவதும் இழுத்தடிக்கப்பட்டு நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது இங்கே கலை, அறிவியல் பட்டம்பெற்றவர் துவங்கி பொறியியல் பட்டம் பெற்றவர் வரை பல லட்சம் பேர் வங்கியில் தனக்கு ஒரு வேலை கிடைக்கும் என நம்பி லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படித்து வருகிறார்கள் சென்னை தி.நகருக்கு பாண்டி பசார் போல வங்கி தேர்வு பயிற்சி மையங்களும் ஒரு அடையாளமாக மாறிவருக்கின்றன என்றால் மிகையல்ல ஆனால் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் இனி எத்தனை பேரை வங்கிகள் புதிதாக பணியில் அமர்ந்தும் என்பதில் எனக்கு எதிர்மறையான நம்பிக்கையே உள்ளது பொதுவாக வங்கி இணைப்புகள் போன்ற செயல்பாடுகள் நடைமுறைக்கு வர ஒன்று அல்லது  இரண்டு வருடங்கள் முழுதாக ஆகலாம். அவை நிறைவு பெறும் வரை பெரிதாக ஆட்கள் நியமனம் இருக்காது. அதே போல் வங்கிகளின் கிளைகளின் எண்ணிக்கையும் குறையும் உதரணமாக திருவாரூரில் கனரா வங்கியும் சிண்டிகேட் வங்கியும் மிக அருகருகே அமைந்துள்ளன. இந்த இரண்டு வங்கிகளும் இணையப்போவதாக அரசு நேற்று அறிவித்துள்ளது. எனில் எதற்கு அருகருகே இரண்டு கிளைகள் ?? சரி புதிதாக கிளைகளை வராதா என்று நீங்கள்

86,000 கோடி கூடுதல் உபரி தொகையை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

ரிசர்வ் வங்கி அரசுக்கு 1,76,000 கோடி பணம் தருவதாக செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்பதை பற்றிய பதிவு தான் இது.. பொதுவாக ஆண்டுகாண்டு ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி தொகையை அரசுக்கு வழங்கும். அதில் இந்த ஆண்டு வழங்கவேண்டிய தொகை சுமார் ₹ 90,000 கோடி  இந்திய ரிசர்வ் வங்கி 28% உபரி நிதியை வைத்துள்ளது. உலக அளவில் பிறநாட்டு ரிசர்வ் வங்கிகள் 14% மட்டுமே உபரி நிதி வைத்துள்ளன. எனவே உங்களிடம் உள்ள உபரி தொகையை எங்களுக்கு தாருங்கள் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது இந்த கோரிக்கைக்கு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு உர்ஜித் பட்டேல் அவர்கள் சம்மதிக்கவில்லை. எனவே அவர் ராஜினாமா செய்யும் வரை இந்த கோரிக்கை கிடப்பில் இருந்தது.. பின்னர் திரு சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற பின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு பீமல் ஜலன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பணி ரிசர்வ் வங்கியின் உபரி தொகை அளவை எவ்வளவு வைத்திருப்பது என்று பரிந்துரை செய்வது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்ற ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கூடுதல் உபரி தொகையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கூடுத

எனக்கு செல்வி ஜெயலலிதா அவர்களை பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்

எனக்கு செல்வி ஜெயலலிதா அவர்களை பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு .. அவர் ஒரு தேசியவாதி (Nationalist). தேச நலனில் அக்கறை கொண்டவர். அதே சமயம் மாநில உரிமைகளுக்காக போராடியவர். அனைத்துத்தரப்பு மக்களுக்காகவும் திட்டங்களை வகுத்தார். அவர் ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ எந்த தொந்தரவும் இருந்ததில்லை. அவர்களில் பலரும் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் ஓட்டுக்களை பெறவேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை அவர் அவமதித்ததில்லை. எல்லோரையும் ஒன்றாக நடத்தினார்.. ஆனால் தமிழ்நாட்டில் இன்னொரு கட்சி மைனாரிட்டி சமூக ஓட்டை பெறவேண்டும் என்றால் ஹிந்துக்களை வசைபாடவேண்டும், ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை அவமதிக்கவேண்டும் என்று திட்டமிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது !!!!

பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் பிரிட்டன்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு ஆதரவாக இறுதியில் வாக்களித்தாலும், கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையே பிரிட்டன் எடுத்ததாக செய்திகள் வருகின்றன பிரிட்டனில் பாகிஸ்தான் மக்கள் அதிகம் வாழ்வதும் (சவுதிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் மக்கள் அதிகம் வாழும் நாடு பிரிட்டன்), அரசு பதவிகளில் பாகிஸ்தான் மக்கள் பலர் இருப்பதும் (லண்டன் நகரின் மேயர் கூட பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்தான்) பிரிட்டன் பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட காரணமாக இருக்கலாம்.. பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் பழைய கலவர வீடியோ ஒன்றை தற்பொழுது காஷ்மீரில் கலவரம் நடப்பது போல் திரித்து வெளியிட்டதும் , ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தின விழா லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றபொழுது அங்கு கூடிய பாகிஸ்தானியர் முட்டைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி விழாவை பாதியில் நிறுத்த வைத்தபொழுதும் லண்டன் போலீசார் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தாதும் இந்தியாவிற்கு பிரிட்டன் மேல் அதிருப்தியை அதிகரித்துள்ளது.