கர்நாடக இசையின் பிறப்பிடம் திருவாரூர் - திருவாரூர் நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் 3

இந்தியாவில் சங்கீதம் என்றால் இரண்டை முக்கியமாக குறிப்பிடுவர். ஒன்று ஹிந்துஸ்தானி சங்கீதம் மற்றொன்று கர்நாடக சங்கீதம்.

இதில் கர்நாடக சங்கீதம் தென் இந்தியாவை மையமாக கொண்டதாகும். சரி கர்நாடக சங்கீதத்துக்கும் சோழ நாட்டில் உள்ள திருவாரூருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ?

கர்நாடக சங்கீதத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை அளித்த  மூன்று இசை மேதைகள் தியாகராசர்சியாமா சாஸ்திரிகள்முத்துச்சாமி தீட்சிதர். இவர்களை கர்நாடக இசை மும்மூர்த்திகள் என்று அழைப்பர்.

இவர்கள் மூவருக்கும் ஒரு அதிசயக்கதக்க ஒற்றுமை உண்டு. மூவருமே பிறந்தது திருவாரூரில் தான்.

மூவர் பிறந்த வீடுகளும் திருவாரூரில் இன்றும் அவர்களின் நினைவாக போற்றி பாதுகாக்கப்படுகின்றன

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் 
பல கர்நாடக இசை மேதைகளும், சுற்றுலா பயணிகளும் இந்த இடங்களை பார்த்து செல்கின்றனர்.

மூன்று இடங்களுமே திருவாரூர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் அமைந்துள்ளது.

தியாகராஜா சுவாமிகள் வீடு - புது தெரு, திருவாரூர்
ஷ்யாமா சாஸ்திரிகள் நினைவு வீடு - மேட்டுத் தெரு, திருவாரூர்
முத்துசுவாமி தீட்சிதர்பிறந்த இடம் - வடக்கு வடம்போக்கி தெரு, திருவாரூர் 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)