மக்கா ஓடிவாங்கலே !! விவசாயத்தை காப்பாத்தீட்டு வந்துருவோம்

சம்பளகாரனுக்கு வருஷா வருஷம் சம்பளம் ஏறனும், வியாபாரி எவரும் நஷ்டத்துல ஒரு சோப்பு டப்பா கூட விற்க மாட்டீங்க ஆனா விவசாயி மட்டும் கடைசி வரைக்கும் நஷ்டத்துல 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் வெங்காயம் விற்று உங்களுக்கு சோறு போடணும் ???

சுயநலம் என்றால் என்ன என்பதை நம்ம மக்க கிட்ட தான் கத்துக்கனும் டோய்...

இதுல Good morning, Good Afternoon அனுப்புற மாதிரி டெய்லி நாலுவாட்டி விவசாயத்த காப்பாத்தனூன்னு பேஸ்புக் போஸ்ட், அதுக்கு நாலு பேர் கண்ணீர் smiley வேற....

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றாமல் விவசாயத்தை உணர்ச்சிகர பிரச்னையாக வைத்திருப்பதும், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், கடன் தள்ளுபடி செய்து அடுத்த வருடம் மீண்டும் அவனை கடன்காரன் ஆக்குவது என எல்லாமே விவசாயத்தை அழிக்கும் செயல் தான்....வந்துருவோம்..

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

சங்கதாரா புத்தக விமர்சனம்