கோவிலில் அர்ச்சகர் தட்டில் எதுக்கு சார் காசு போடவேண்டும். அவர் என்ன கடவுளுக்கும் நமக்கும் இடையில் தூதுவரா என்று கேட்பவர்கள் உண்டு காலை 5 மணிக்கு நடை திறப்பில் இருந்து பால்நெய்வேதனம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை பூஜை, இரவு அர்த்தசாம பூஜை, பிரதோஷம், சதுர்த்தி என கோவிலின் எல்லா நடைமுறைகளும் யார் வந்தாலும் வராவிட்டாலும், மழை, புயல் காலமாக இருந்தாலும், கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன அந்த நடைமுறைகளை தினமும் செய்து வருபவர்கள் அர்ச்சகர்கள். அதற்கு நம்மால் முடிந்த காணிக்கையை கொடுக்கிறோம். ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம், மருத்துவ செலவுகள், பள்ளி படிப்பு செலவுகள், பெட்ரோல் விலை ஏற்றமெல்லாம் உண்டு. அவர்கள் பிழைப்பு என்பது அந்த தட்டில் விழும் பணத்தை நம்பி இருக்கிறது. முதலில் இந்த பூஜை பிரதோஷங்களே தேவையா என்று தானே கேட்கிறேன் என்று நீங்கள் கேட்பீர்கள் எனில் உங்களுக்கு கோவில் என்கிற அமைப்பின் வழியாக இறையை தேடமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு கோவில் அமைப்பின் மீதே நம்பிக்கையில்லை எனில் அதன் நடைமுறைகளை பற்றி ப...