எழுச்சி ! எழுச்சி !

கூடங்குளம் போராட்டம், காவிரி பிரச்சனை, மீத்தேன், ஜல்லிக்கட்டு, முல்லைப்பெரியாறு, இன்று ஹைட்ரோகார்பன் திட்டம் என மக்கள் எழுச்சி கொண்டு போராடும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அதிசய ஒற்றுமை உண்டு கவனித்தீர்களா ? - இவை எல்லாமே அரசாங்க திட்டங்கள் !
ஏன் மணல் கொள்ளைக்கு எதிராக எந்த மக்கள் எழுச்சியும் நடக்கமாட்டேன் என்கிறது ? ஏன் கல்வி கொள்ளைக்கு எதிராக அரசியல் கட்சிகள் வாயை திறக்கமாட்டேன் என்கின்றன ? ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மோடிக்கு லெட்டர் எழுதும் எடப்பாடி சார் மணல் கொள்ளை எதிர்த்து ஏன் வாயை திறக்க மாட்டேன் என்கிறார் ?

நெடுவாசலில் நின்றபடி வைகோ ஆவேசமாக கத்துகிறாரே மணல் கொள்ளைக்கு எதிராக இதே வைகோ கத்த தயாரா?

மணல் கொள்ளை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் எழுச்சி
நன்றி தமிழ் மீம்ஸ்
அரசியல் கட்சிகள் தங்கள் வருமானத்தை பாதிக்கும் எந்த பிரச்சனைகளிலும் மக்களை போராடவிடுவதில்லை ! நாம் எழுச்சி எழுச்சி என்று சொல்லிக்கொள்ளும் எல்லா போராட்டமும் அரசியல் கட்சியையும் அதன் வருமானத்தையும் நேரடியாக பாதிக்காத திட்டங்களே !

எளிதாக சொன்னால் தங்கள் பிழைப்பை பாதிக்காத போராட்டங்களே கட்சிகளால் அனுமதிக்கப்படுகின்றன. மீடியாக்களில் கவர் செய்யவும்படுகின்றன. கடைசியில் நாம் வெற்றிபெற்றதாக நம்பவைக்கவும் படுகிறோம்.

வடிவேலு வெற்றி வெற்றி என்று தானே சொல்லிக்கொள்வதை போல எழுச்சி எழுச்சி என்று நாமே சொல்லிக்கொள்ளவேண்டியதுதான் !

பி. கு : ஹைட்ரோகார்பன் திட்டத்தை இந்த பதிவு எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை ! அதுபற்றிய பதிவும் அல்ல இது !

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்