தமிழக ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே

தமிழகத்தில் மிச்சமிருந்த பல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே.
இந்த பணிகள் முடிக்க 900 நாட்கள் (தோராயமாக ஜூன் 2022) காலக்கெடுவாக வழங்கப்பட்டுள்ளது.
டெண்டர் வழங்கப்பட்டுள்ள பாதைகள் :
மதுரை - மானாமதுரை, சேலம் - விருத்தாசலம் - கடலூர் துறைமுகம், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர்..
L & T நிறுவனம் பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதிலும் பெயர் போன நிறுவனம். அவர்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டது ஒரு வகையில் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.
2022 க்குள் தமிழகத்தின் ரயில் பாதைகள் மொத்தமும் மின்மயமாக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கலாம்...

indian railway

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்