Posts

பணம் உங்களுக்காக உழைக்க - பகுதி 1

Image
முதலீடு பற்றி நான் படித்த தகவல்களை இனி எழுதலாம் என்றுள்ளேன் ! அதன் முதல் பதிவு இதோ நம்மில் பலரும் tnstc.in என்கிற தமிழக அரசின் பேருந்து முன்பதிவு இணையதளத்தை பயன்படுத்தியிருப்போம் ! ஆனால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் Tamilnadu Transport Development Finance Corporation Ltd (TDFC) நிறுவனத்தை பற்றிய விளம்பரத்தை நீங்கள் கவனித்ததுண்டா ? TDFC பற்றிய விளம்பர குறிப்பு வட்டமிடப்பட்டுள்ளது  போக்குவரத்து கழகத்தின் துணை நிறுவனமான TDFC யில் நம் பணத்தை முதலீடு செய்தால் (குறைந்த பட்சம் ₹10,000) 2 வருடத்துக்கு 7.8% வட்டியும், 3 முதல் 5 வருடத்துக்கு 8.25% வட்டி கிடைக்கும் ! வங்கிகள் தற்பொழுது  6.5% to 7.5% என்கிற அளவில் வட்டி தருகின்றனர் என்பதை கருத்தில் கொள்க ! அரசு நிறுவனம் என்பதால் பணதிற்கும் வட்டிக்கும் Guarantee ! இந்த முதலீடு சாதரணமாக வங்கியில் செய்தால் கிடைக்கும் வட்டியை விட கூடுதல் வட்டியை தரக்கூடியது ! மேலும் தகவலுக்கு - http://www.tdfc.in/interestrates.html

பிளாஸ்டிக் தடை விவசாய விவசாய பொருட்களின் தேவையை அதிகரிக்கும்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு இந்த பிளாஸ்டிக் தடை ! தாமரை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது ஒரு நல்ல உதாரணம் ! தாமரை இலை வேண்டுமெனில் குளங்கள் பாதுகாக்க படவேண்டும்.. குளமிருந்தால் தானே தாமரை மலரும் ? தாமரையின் தேவை அதிகரிக்கும் பொழுது குளங்களில் நீர் இருப்பு மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலெழும்.. அப்படித்தான் குளங்களையும் தாமரையையும் பாதுகாக்க முடியும்.. எந்த பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி அதற்கு சந்தையில் தேவையை ஏற்படுவது தான்... வெறும் இரக்கம் மட்டும் எந்த ஒரு பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.. விவசாயத்தை நாம் அணுகும் பொழுது இரக்கத்தை விட பொருளாதார பார்வையுடன் அணுகுவது தான் விவசாயத்தை காப்பாற்ற உதவும்... 

கங்கை நதியை சுத்தம் செய்வதில் ஒருபடி முன்னேற்றம்

கங்கை நதி சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சராக இருந்தவரை ஒரு சதவீத அளவு கூட வேலை நடக்கவில்லை.. எனவே மோடி அவரை மாற்றிவிட்டு அந்த பணியை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடன் வழங்கினார்.. நிதின் கட்கரி மோடி அமைச்சரவையில் சிறப்பாக செயல்படும் அமைச்சர்களில் முதன்மையானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்... அவர் கையில் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டம் சென்றவுடன் நேரடியாக கங்கையில் கலக்கப்பட்ட சாக்கடை கழிவு கால்வாய்கள் அடைக்கப்பட்டன.. சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டது....மக்களிடம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது... இஸ்ரோ முதல் நாட்டின் பல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் தலைமையில் கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டம் வேகமேடுத்தது... விளைவு... கடந்த 10 வருடமாக ph அளவு 6 என்ற நிலையில் இருந்த கங்கை நதி சமீபத்தில் 8.5 என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறது..கரைந்த ஆக்சிஜன் (dissolved oxygen) அளவு 4 என்கிற அளவில் இருந்து 2.5 என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.. ஆனால் இது ஆரம்பம் தான் இன்னும் கங்கை நதி சுத்திகரிப்பில் நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்.. ஆனால் நாம் சரியான ...

மீண்டும் மீண்டும் பேசப்படும் ரபேல் - உண்மை என்ன ?

2004 முதல் 2014 ஆண்டு வரை சீனா 400 போர் விமான்களை வாங்கியுள்ளது ! பாகிஸ்தான் தனது விமனாப்படை பலத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.. ஆனால் இந்திய விமானப்படையின் பலம் (1 squadron = 18 விமானம்) 2002 ல் - 42 squadron (756 விமானம்) 2007 ல் - 36 squadron (648 விமானம்) 2012 ல் - 33 squadron (594 விமானம்) வாஜ்பாய் விமானப்படையின் பலம் குறைகிறதே என்று 126 விமானம் வாங்க திட்டம் கொண்டுவந்தார்.. அதில் உடனடி தேவைக்கு 18 விமானங்கள் (1 squadron) பறக்கும் தகுதியுடன் (fly away condition) பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த முடிவெடுத்தார். ஆனால் அதற்குள் மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 10 வருடங்களுக்கு ஒரு போர் விமானம் கூட வாங்கவில்லை. விமானப்படையின் விமானங்களின் எண்ணிக்கை 756 ல் இருந்து 594 க்கு குறைந்தது.. மோடி பதவியேற்றவுடன் விமானப்படையின் பலம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உடனடி தேவைக்கு 36 ரபேல் விமானங்கள் (2 squadron - சீனா எல்லைக்கு 1 squadron, பாக்கிஸ்தானுக்கு 1 squadron) வாங்க முடிவெடுத்து அதை செய்தும் முடித்து விட்டார்.. காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் ...

குழந்தைகளை கற்பழித்தால் மரண தண்டனை - மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தம்

குழந்தைகளை கற்பழிப்பு அல்லது கூட்டு கற்பழிப்பு செய்பவர்களுக்கு மரண தண்டனை - POCSO (Protection of Children from Sexual Offences) சட்டத்தில் திருத்தும் கொண்டுவர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் பழைய POCSO சட்டத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைக்கு மட்டுமே தண்டனை இருந்தது. இனி ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் சரிசம அளவிலான தண்டனை

கரும்பு விவசாயிகளுக்கு பெட்ரோல் விலை குறைவதும் ஒரு பிரச்சனை

Image
பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வருவதால் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் தேவை வெகுவாக குறையும் என கணிக்கப்படுகிறது... கவனிக்க: எத்தனால் அதிகம் கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.. எனவே உலகின் பெரிய கரும்பு உற்பத்தியாளரானா பிரேசில் 2019ல் கரும்புக்கு பதிலாக சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே சர்க்கரை விலை அடுத்த ஆண்டு குறையும். நம்ம விவசாயிகளுக்கு இதையெல்லாம் எடுத்துரைத்து நாம் அவர்களை தயார்செய்வதில்லை.. அவர்கள் வழக்கம் போல் கரும்பை உற்பத்தி செய்து விட்டு விலை கிடைக்கவில்லை என்று ரோட்டுக்கு வருவார்கள்...

அரசியல் அறிவோம்

BJP யின் பின்புலம் அல்லது பக்கபலம் ஹிந்துத்துவா.. எனவே ஹிந்துத்துவா சக்திகள் எந்த நாசகாரியம் செய்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.. திராவிட கட்சிகளின் பின்புலம் ஆதிக்க சாதியினர் (OBC communities), எனவே ஆதிக்க சாதியினர் ஆணவ கொலை செய்தால் கூட திராவிட கட்சிகள் கண்டுகொள்வதில்லை.. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் பின்புலம் அல்லது பக்கபலம் மைனாரிட்டி மக்கள் (கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள்), எனவே காங்கிரஸ்கார்கள் பெருகி வரும் மதமாற்றம் போன்றவற்றை பெரிதாக கண்டுகொள்வதில்லை... BJP காரன் நீதிமன்றமே சொன்னாலும் சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்பான்.. காங்கிரஸ் காரன் நீதிமன்றமே சொன்னாலும் முத்தலாக் நீக்கப்படக்கூடாது என்பான்.. திராவிட கட்சிகள் ஆணவ கொலையால் கலவரமே வந்தாலும் ஆதிக்க சாதி மீது கைவைக்க மாட்டான்... DOT #BJP #congress #dmk